SK
நான் அதிகமா பதிவு எழுதறது இல்லை. அதுக்கு ஒரு முக்கிய காரணம் சோம்பேறி தனம். அதோட இதை செய்யணும் அப்படிங்கற தொடர்ந்து செய்யணும் அப்படிங்கற ஒரு உணர்ச்சி இல்லை. பதிவு எழுத ஆரம்பிக்கும் போது ஆரம்பிக்கற இருக்கற மன நிலை முடிக்கும் போது இருக்கறது இல்லை. இப்படியே நிறைய பதிவு எழுதாம இருக்கு.

இந்த பதிவை இன்னைக்கு படிச்சா பொழுது செருப்பால அடிச்சா போல இருந்தது எனக்கு.

சத்யா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தலை வணங்குகிறேன் ஐயா. நன்றி ரஞ்சித் உங்க பதிவுக்கும்.

பதிவர்கள் பலர் நிறைய நல்ல காரியங்கள் செய்யறாங்க. வெளில சொல்றதுக்கு ஒரு வித தயக்கம். எதிர் வினை, சுய புராணம், தற்புகழ்ச்சி இது போல ஏதாவது சொல்லிடுவாங்களோன்னு ஒரு பயம். இதுனால பல நல்ல காரியங்கள் வெளில தெரியாமலையே போய் விடுகிறது. வேலைய விட்டுட்டு முழு நேரம் இது போல செய்யறவங்க பத்தி எல்லாம் கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவர்களுக்கும் என்னோட வாழ்த்துக்கள். நீங்க எல்லாம் தான் எங்களை ஊக்குவிப்பவர்கள். உங்களுக்கு மீண்டும் தலை வணங்குகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிணறு வெட்ட பூதம் அப்படின்னு திரு. ரமேஷ் சதாசிவம் பதிவு எழுதி இருந்தாரு. அதை போன பதிவுல கொடுத்து இருந்தேன்.

அந்த பதிவுல திரு. நடராஜ் ஐ. பி. எஸ். அவர்கள் வந்து பதில் எழுதி தன்னை தொடர்பு கொள்ள சொல்லி இருந்தாரு. படிச்சா ஒடனே கொஞ்சம் சந்தோஷமும் அதிக நம்பிக்கையும் வந்திச்சு. எதாவது நியாயம் கிடைக்கும் சொல்லி. நம்ம நாடும் உருப்பட நல்லாவே வாய்ப்பு இருக்கு.

இன்னொரு பக்கம் நம் எழுத்தினுடைய தாக்கம் புரிஞ்சது. எழுதும் போது ரொம்ப நிறுத்தி நிதானமா எழுதனும்னு பொறுப்பும் வந்தது. இந்த களத்தை பல நல்ல காரியங்களுக்கு உபயோகபடுத்தனும்னு எண்ணனும் வந்தது. அனாவசிய சண்டைகளையும், சச்சரவுகளையும் தவிர்த்து ஏதாவது நம்மாலான உருப்படியான காரியம் செய்யனும்னு தோணிச்சு. பாக்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நேற்று தினமலர்ல ஒரு செய்தி பாத்தேன். (இப்போ என்னிடம் லிங்க் இல்லை) ஒரு விளையாட்டு வீராங்கனை அரசிடம் இருந்து போதிய சலுகைகளும், மற்ற உதவியும் இல்லாமையும், வந்து சேர வேண்டிய சலுகைகள் இல்லத்துனாளையும் தட்டு கழுவுவதும், உணவு பரிமாறுவது போன்ற வேலைகள் செய்யறாங்கன்னு போட்டு இருந்தது. இவுங்க தேசிய அளவிலோ, ஆசியா அளவிலோ விளையாடி பதக்கங்கள் எல்லாம் வாங்கி இருக்காங்கன்னு போட்டு இருந்தது. இது தான் நம்ம நாட்டோட விளையாட்டு வீரர்களின் நிலைமை. இனிமே நாம விளையாட்ட பத்தி அடுத்த ஒலிம்பிக்ஸ் அப்போ இந்தியா ஒரு பதக்கம் கூட வாங்காது பாருங்கன்னு பந்தயம் கட்டலாம். :( அதை பத்தி அப்போ மட்டும் யோசிச்சா போதும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அன்புடன்
எஸ். கே.
SK
தண்ணீருக்காக..

இவை இல்லையெனில் வாழ்த்தென்ன புண்ணியம்.

வெற்றி அடைய வாழ்த்துக்கள் ரமேஷ்.

முடிந்தால் உங்கள் பதிவில் ஒரு இடுகை இதை பற்றி எழுதவும் மேலும் இதற்கான லிங்க் கொடுக்கவும்.

எஸ். கே.
SK
உயர் கல்வி அப்படின்னா.. வெளிநாடு சென்று படிக்கறது மட்டும் இல்லை. பத்தாவது முடிச்சிட்டு மேல படிக்கறதுக்கே நமக்கு தெரிஞ்சது மூணே மூணு பிரிவு. ஒண்ணு முதல் பிரிவு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சா எஞ்சினியர் ஆகலாம், இரண்டாவது பையலோஜி படிச்சா டாக்டர் ஆகலாம், அடுத்து காமர்ஸ் அக்கௌண்டன்சி படிச்சா சி. ஏ. படிக்கலாம். இவ்வளவு தான் இருக்கா ? இல்லை இதை தவிர நிறைய பிரிவுகள் இருக்கு. அதை பற்றி நமக்கு தெரிவது இல்லை.

சரி அதை தாண்டி வந்தா, கேக்கற பய புள்ளைங்க எல்லாம் இ. சி. இ., கம்ப்யூட்டர் சயின்ஸ், EEE , IT இது தான் படிக்கனும்னு அடம் புடிப்பாங்க. ஏதோ போன போகுதுன்னு மெக்கானிகல் படிப்பாங்க. அப்போ மத்தது, ஏதோ விதி, இது தான் கிடைச்சுது படிக்கறேன் .. இந்த அளவு தான். இன்ஜினியரிங் இதுக்கு இப்படினா அறிவியல், கலை இதை படிக்கறவங்களும் கடைசியா வந்து நிக்கறது வேற வேலைக்கு தான். ஆனா அந்த அந்த படிப்பான மதிப்பு இருந்து கிட்டு தான் இருக்கு. பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க கொஞ்ச நாள் ஆகும்.

இன்னொரு பிரிவு இருக்கு, பேச்சலர்ஸ் அதோட படிப்ப நிறுத்துரவங்க. மேல படிக்க விருப்பம் இருக்கறது இல்லை, வசதி இருக்கறது இல்லை, தெரியறது இல்லை. இது போல பல காரணங்கள் உண்டு.

அதே போல வெளி நாட்டுக்கு சென்று படிப்பதிலும் நிறைய விடயங்கள் தெரியாமலையே இருக்கு. இந்த கதை எல்லாம் இப்போ எதுக்கு. இதை எல்லாம் ஒரு இடத்தில் தொகுக்கலாம் அப்படின்னு ஒரு யோசனை இருக்கு. அதை ஒரு பதிவாக அல்லது என் பதிவுகளில் இடுகைகளாக செய்யலாம் அப்படின்னு எண்ணம்.

இதே போல செய்து கொண்டு இருக்கிற பதிவுகளோ, இணைய தளங்களோ, இல்லை என்னோட படிப்ப பத்தியும், நான் இருக்கற வெளிநாட்டுல அமைகிற படிப்பு பத்தியும் எழுதனும்னு விருப்ப படரவங்க இங்கே தெரிய படுத்தவும். கொஞ்சம் கொஞ்சமா விடயங்கள் சேகரிக்கலாம். கல்வி பற்றிய எந்த விடயமாக இருந்தாலும் இங்கே தெரியப்படுத்தவும்.
செஞ்சு என்ன பண்ண போறோம் ?? அதை பின்னாடி யோசிப்போம். ஆனா ஏதாவது நல்ல விடயமாக செய்வோம்.

உங்கள் எண்ணங்கள், ஆதரவுகள், யோசனைகள் இதை எதிர் நோக்கி. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று ஜூலை 16. கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து நடந்து ஐந்து வருடம் ஆகிறது. அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு என்னுடைய அஞ்சலிகள். அவர்களை பிரிந்து வாடும் பெற்றோர்களுக்கு என்னுடைய ஆறுதல்கள்.

நாமும் இதை வருடா வருடம் பதிவு போடறோம். போன வருடமும் போட்டு இருந்தாங்க. இந்த வருடமும் போட்டு இருக்காங்க. நிலைமை 0.1% மாறிச்சா. விதிகள் மேலும் கடுமை படுத்த பட்டதா ?? :( இல்லை இதை தான் நாம பெருமையா சொல்லிகறோம். இதற்க்கு நம்மால் ஏதும் செய்ய முடியுமா. இல்லை அதே பழைய பல்லவி 'அரசு இயந்திரம் சரி இல்லை' இது தானா ?? :(

வெளிநாட்டில் ஒக்காந்து

வெட்டி கதை மட்டுமே பேசத்தெரிந்த
பல கோடி இந்தியர்களில் ஒருவனான.
எஸ். கே.