அரசியல் தலைவர்
பிடித்தவர்: ஜெயலலிதா (ஆளுமை - குறிப்பா மழை நீர் சேமிப்பு அமுல் படுத்திய விதம், ஜெயந்தரர் அவர்களின் கைது ... )
பிடிக்காதவர்: அதே ஜெயலலிதா (அதே ஆளுமை அடாவடியாய் ஆகும் பொழுது + சேர்வார் தோஷம்)
நடிகர்
பிடித்தவர்: தலைவர் ஒருவரே
பிடிக்காதவர்: சிம்பு. நல்ல திறமை சாலி ஆன எதோ கொஞ்சம் அதிகம் பாத்தாலே பத்திகிட்டு வருது..
நடிகை
பிடித்தவர்: ஷாலினி அஜித், ஜோ
பிடிக்காதவர்: நயன்தாரா
இசையமைப்பாளர்
பிடித்தவர்: இளையராஜா, ARR
பிடிக்காதவர்: தேவா. மெட்டுக்களை அப்படியே சுடுவதனால். ஒரு பாட்டு கூட வெளில போட முடியலை. எவனாவது வந்து இது எங்க ஊரு பாட்டு அப்படின்னு சொலலிடுவானோ அப்படின்னு பயமா இருக்கு.
நகைச்சுவை நடிகர்கள் :
பிடித்தவர் : நாகேஷ் (குறிப்பா காதலிக்க நேரம் இல்லை கதை சொல்லும் இடம் )
பிடிக்காதவர் : சிலேடை அர்த்தங்கள் மற்றும் ஆபாசமாக சிரிக்க வைக்க முயற்சிக்கும் எவர் ஆயினும்.. விவேக், வடிவேலு, சந்தானம் மேலும் தலைவர் உட்பட (முருகா முருகா முருகா ... !!!)
இயக்குனர் :
பிடித்தவர் : ராதா மோகன் (அழகிய தீயே + மொழி - இரண்டும் எனக்கு ரொம்ப புடிச்ச படம்)
பிடிக்காதவர் : அப்படியே உள்ளதை உள்ளபடி எடுக்கறேன்னு சொல்லி ரொம்ப பீல் பண்ண வைக்கறவங்க எல்லாருமே :(
விளையாட்டு வீரர் :
பிடித்தவர் : விஸ்வநாதன் ஆனந்த்.
பிடிக்காதவர் : இதுல யாரையும் புடிக்காதுன்னு சொல்ல முடியலை. ஏன்னா அவன் அவன் கஷ்டப்பட்டு ஒரு டீம்ல செலக்ட் ஆகி அவ்வளவு அரசியலையும் கடந்து விளையாடறான். ஆனா சமீபத்துல ஸ்ரீசாந்த் செய்வது புடிக்கலை. தன்னை ஒரு கட்டுக்குள் வெச்சுக்க தெரியலை. அது ஒரு விளையாட்டு வீரருக்கு நல்ல பழக்கம் இல்லை.
பேச்சாளர் :
பிடித்தவர் : சுகி சிவம் (போற போக்குல சின்ன சின்ன விடயங்களை சொல்லிப்போவார்)
பிடிக்காதவர் : ஒரு தலைப்பு கொடுத்து பேச சொன்னா அதை பத்தி பேசாம தனக்கு புடிச்ச ஒன்னை பத்தி பேசற யாரையுமே புடிக்காது.
என்னை மாட்டி விட்ட அமித்து அம்மாவுக்கு ரொம்ப நன்றி.
அன்புடன்
எஸ். கே.
Friday, November 20, 2009
Sunday, October 25, 2009
நவம்பரும், டிசம்பரும் அடியேனும்.
சமீபமா மல்லாக்க படுத்து யோசிக்கும் எனக்கும் இந்த நவம்பர் மாசத்துக்கும், டிசம்பர் மாசத்துக்கும் பயங்கர தொடர்பு இருக்கறதா பட்சி சொல்லிச்சு. 2002'ல இருந்து யோசிச்சு பாத்தேன், ஒவ்வொரு நவம்பரும் டிசம்பரும் எனக்கு நித்திய கண்டம் பூரனாயிசா தான் போகுது. நீங்களே சொல்லுங்க நண்பர்களே இதுக்கு நான் என்ன பண்ணலாம்னு.
2002 :
நான் கல்லூரில கடைசி வருஷம் படிச்சுகிட்டு இருந்தேன். கம்பெனி எல்லாம் வந்து ஆள் எடுக்கற நேரம். நாங்க எல்லாம் கொள்கைல ரொம்ப பிடிவாதமா இருக்கோம்னு சொல்லி சாப்ட்வேர் வேலை எதுக்கும் உட்காரலை. என்னோட படிப்பு சம்பந்தமா கம்பெனி அதிகமா வரலை. அதுக்காக கம்பெனி எல்லாம் கூப்பிடறதுக்கு நாங்களா ஒரு ஆறு பேரு கிளம்பி மெட்ராஸ் போய் கம்பெனி எல்லாம் கூப்பிட்டு வந்தோம்.
மதராஸ்ல வேகாத வெயில்ல பத்து நாள் சுத்து சுத்துன்னு சுத்திட்டு கோயம்புத்தூர் திரும்ப வரும் பொது தேதி டிசம்பர் 25. வந்து படுத்தவன் தான் எந்திரிக்க முடியலை. சரியான காய்ச்சல். பொட்டிய கட்டிக்கிட்டு ஊருக்கு போய்டேன். அங்கே போனா சொல்றாங்க, அம்மை போட்டு இருக்கு உனக்கு. இன்னும் மூணு வாரம் நகர முடியாது அப்படின்னு.
ஜனவரி முதல் வாரத்துல நாங்க மெட்ராஸ் போய் கூப்பிட்டு வந்த கம்பெனி எல்லாம் எங்க காலேஜ் வந்து ஆள் எடுத்திட்டு போய்டாங்க. பொங்கல் கழிச்சு காலேஜ் போகும் போது எனக்கு பாக்கி இருந்தது எல்லாம் பன்னு தான். :(
2003 :
படிச்சு முடிச்சிட்டு வேலை தேடிகிட்டு இருந்த வருஷம். இந்த வருஷ நவம்பர், டிசம்பர் எல்லாம் எப்படி போச்சுன்னே தெரியாது. திங்க கிழமை ஆபிஸ் போனா, தம்பி இன்னைக்கு நைட் கெளம்பி கோயம்புத்தூர் போயிட்டு நாளைக்கு திரும்ப வரணும்னு சொல்லுவாங்க. சில வாரம் அப்படியே கோயம்புத்தூர் போயிட்டு, ஈரோடு , சேலம் அப்படியே மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி எல்லாம் சுத்திட்டு மெட்ராஸ் போவேன்.
ஆனா எனக்கு தெரிஞ்சு கடைசி ஆறு வருஷ நவம்பர், டிசம்பர்ல நான் நிம்மதியா இருந்தது இந்த வருஷமாத்தான் இருக்கும்னு நினைக்குறேன். மதராஸ்ல இருந்த இந்த நாட்களை பத்தி தனி பதிவே எழுதலாம்.
2004:
ரொம்ப கொடுமையான வருஷம். நான் ஒரு அதல பாதாளத்துல விழறேன்னு தெரியாம விழுந்த தருணம்னு சொல்லலாம். ஜெர்மனி வந்து ரெண்டு மாசம் ஆன நேரம். என்னோட அறை நண்பர்கள் இரண்டு பேரு. நான் இவ்வளவு வெள்ளந்தியா இருந்து இருக்கேன்னு இப்போ நினைச்சா கூட கண்ணை கட்டுது.
நான் இந்தியாவுல இருந்து எடுத்து வந்த பணத்துல பணத்துல ஒரு கணிசமான தொகைய நண்பர்கள் கிட்டே ஏமாந்தேன். சோ கைல காசு பூஜ்ஜியம்.
இந்த ஒரு தப்பு செஞ்சதுக்கு நான் கொடுத்த விலை ரொம்ப அதிகம். எத்தனையோ தூக்கம் இல்லாத நாட்கள், பசியோடு தூங்கின இரவுகள், கம்மியா வாங்கின மதிப்பெண்கள், வாழ்க்கை மீது எனக்கு வந்த ஒரு வெறுப்பு. என்ன இதை பத்தி யாரு கிட்டயும் சொல்ல முடியாது. சொல்லி வீட்டுக்கு தெரிஞ்ச பொட்டிய கட்ட சொல்லி உத்தரவு வந்திடும்.
2005 :
2004 செஞ்ச தப்பே என்னை தொரத்தி தொரத்தி அடிச்சது. இதுல தப்பிக்கலாம் அப்படின்னு ஊரு மாறி இன்னொரு ஊருக்கு போய் அங்கே கொஞ்சம் பணத்தோட படிப்பு சம்பந்தமா வேலை கிடைச்சுது. சரி இனியாவது ஒழுங்கா இருக்கணும் அப்படின்னு இருந்தேன். அங்கேயும் நமக்கு வந்தது சனி. நான் போன ஊருல வீட்டு வாடகை கொஞ்சம் அதிகம். சரி நாம நம்ம ஊரு மக்கள் கூட தங்கின கொஞ்சம் செலவும் கம்மி ஆகும், பேச்சு துணை மேலும் ஆள் துணையும் இருக்கும்னு நினைச்சேன். அது தான் நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு.
நண்பர்கள் அலைவரிசை, நேரம், பொழுது போக்கு எதுவுமே என்னோட ஒத்து போகலை. நவம்பர் கொஞ்சம் டேர்ரரா தான் போச்சு. டிசம்பர்ல தனி குடுத்தனம் போறதுன்னு முடிவு செஞ்சேன். நவம்பர், டிசம்பர் 2005 ஒரு மாதிரி போச்சு. அப்போ முடிவு செஞ்ச தனி குடுத்தனம் தான் இப்போ வரை தொடருது.
2006 :
2005 வருசத்தோட எல்லா சனியும் முடிஞ்சது அப்படின்னு இருந்தா, வந்தது ஆப்பு இன்னொரு பக்கத்துல இருந்து. என்னோட மாஸ்டர்ஸ் முடிக்க தீசீஸ் செய்யணும். அது நான் வேலை செஞ்ச எடத்துலியே முடிவு பண்ணி வெச்சிட்டு, என்னோட அருமை வாத்தியார் கிட்டயும் பேசி சரி பண்ணிட்டேன். வாத்தியாரும் ஈமெயில் செஞ்சுட்டாரு. சரி எல்லாம் முடிஞ்சுடிச்சு அப்படின்னு வீட்டுக்கு சொல்ல தொலை பேசினேன். அம்மா பாசமா கூப்பிடாங்க, அதான் எல்லாம் சரியா போகுது அப்படின்னு நானும் இந்தியா போறதுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டேன்.இது எல்லாம் ரெண்டு மணி நேரத்துல நடந்தது.
இந்தியா வந்து இறங்கி மெயில் செக் செஞ்சா, வந்தது குண்டு. என்னோட வாத்தியார் எதோ குழப்பம் செஞ்சுட்டாரு. இனி நான் அந்த கம்பெனில தீசீஸ் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சது. இருபது நாள் இந்தியாவுல, நிம்மதியா இருக்கவும் முடியலை. கவலை பட்டுகிட்டே இருக்கவும் முடியலை.
2007 :
நல்ல படியா தீசீஸ் எல்லாம் செஞ்சு முடிக்க வேண்டிய நேரம். எப்போதும் போல தீசீஸ் செய்யற நேரத்துல இருக்கற வேலை. முடிஞ்சா போதும் அப்படின்னு ஆகி போச்சு. எல்லாரும் கிறிஸ்துமஸ் கொண்டாடிகிட்டு இருந்த நேரம், நான் கம்ப்யூட்டர் கூட சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன்.
2008 :
கொஞ்சம் உஷாரா இருக்கணும்னு இருந்தேன். இருந்தாலும் ஆப்பு அடிச்சுடிச்சு. நல்லா வேலை செஞ்சுகிட்டு இருந்த என்னோட வேலை, மக்கர் பண்ணிச்சு. திரும்ப ஜெர்மனி விட்டு ஓடிடலாம் அப்படிங்கற அளவுக்கு தொரத்தி தொரத்தி அடிச்சது. அப்பறம் அதுல இருந்து தப்பிச்சு வந்த்துட்டேன்.
இதோ இன்னும் ஒரு வாரம், 2009 வருஷத்துக்கான நவம்பர், டிசம்பர் எனக்கு என்ன சொல்லித்தர போகுதுன்னு தெரியலை. ஆனா ஏதோ தனியா இருக்கரா போலத்தான் தெரியுது. ஆப்புகள் எல்லா பக்கமும் நிக்கறா போல ஒரு பீலிங்க்ஸ் அல்ரெடி இருக்கு. சோ மக்கா எல்லாரும் எனக்காக உம்மாச்சிகிட்டே வேண்டிக்கோங்க. ஆப்பே வேணாம்னு சொல்லலை. ஆனா கொஞ்சம் பாத்து அடிக்க சொல்லுங்க.
அன்புடன்
எஸ். கே.
2002 :
நான் கல்லூரில கடைசி வருஷம் படிச்சுகிட்டு இருந்தேன். கம்பெனி எல்லாம் வந்து ஆள் எடுக்கற நேரம். நாங்க எல்லாம் கொள்கைல ரொம்ப பிடிவாதமா இருக்கோம்னு சொல்லி சாப்ட்வேர் வேலை எதுக்கும் உட்காரலை. என்னோட படிப்பு சம்பந்தமா கம்பெனி அதிகமா வரலை. அதுக்காக கம்பெனி எல்லாம் கூப்பிடறதுக்கு நாங்களா ஒரு ஆறு பேரு கிளம்பி மெட்ராஸ் போய் கம்பெனி எல்லாம் கூப்பிட்டு வந்தோம்.
மதராஸ்ல வேகாத வெயில்ல பத்து நாள் சுத்து சுத்துன்னு சுத்திட்டு கோயம்புத்தூர் திரும்ப வரும் பொது தேதி டிசம்பர் 25. வந்து படுத்தவன் தான் எந்திரிக்க முடியலை. சரியான காய்ச்சல். பொட்டிய கட்டிக்கிட்டு ஊருக்கு போய்டேன். அங்கே போனா சொல்றாங்க, அம்மை போட்டு இருக்கு உனக்கு. இன்னும் மூணு வாரம் நகர முடியாது அப்படின்னு.
ஜனவரி முதல் வாரத்துல நாங்க மெட்ராஸ் போய் கூப்பிட்டு வந்த கம்பெனி எல்லாம் எங்க காலேஜ் வந்து ஆள் எடுத்திட்டு போய்டாங்க. பொங்கல் கழிச்சு காலேஜ் போகும் போது எனக்கு பாக்கி இருந்தது எல்லாம் பன்னு தான். :(
2003 :
படிச்சு முடிச்சிட்டு வேலை தேடிகிட்டு இருந்த வருஷம். இந்த வருஷ நவம்பர், டிசம்பர் எல்லாம் எப்படி போச்சுன்னே தெரியாது. திங்க கிழமை ஆபிஸ் போனா, தம்பி இன்னைக்கு நைட் கெளம்பி கோயம்புத்தூர் போயிட்டு நாளைக்கு திரும்ப வரணும்னு சொல்லுவாங்க. சில வாரம் அப்படியே கோயம்புத்தூர் போயிட்டு, ஈரோடு , சேலம் அப்படியே மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி எல்லாம் சுத்திட்டு மெட்ராஸ் போவேன்.
ஆனா எனக்கு தெரிஞ்சு கடைசி ஆறு வருஷ நவம்பர், டிசம்பர்ல நான் நிம்மதியா இருந்தது இந்த வருஷமாத்தான் இருக்கும்னு நினைக்குறேன். மதராஸ்ல இருந்த இந்த நாட்களை பத்தி தனி பதிவே எழுதலாம்.
2004:
ரொம்ப கொடுமையான வருஷம். நான் ஒரு அதல பாதாளத்துல விழறேன்னு தெரியாம விழுந்த தருணம்னு சொல்லலாம். ஜெர்மனி வந்து ரெண்டு மாசம் ஆன நேரம். என்னோட அறை நண்பர்கள் இரண்டு பேரு. நான் இவ்வளவு வெள்ளந்தியா இருந்து இருக்கேன்னு இப்போ நினைச்சா கூட கண்ணை கட்டுது.
நான் இந்தியாவுல இருந்து எடுத்து வந்த பணத்துல பணத்துல ஒரு கணிசமான தொகைய நண்பர்கள் கிட்டே ஏமாந்தேன். சோ கைல காசு பூஜ்ஜியம்.
இந்த ஒரு தப்பு செஞ்சதுக்கு நான் கொடுத்த விலை ரொம்ப அதிகம். எத்தனையோ தூக்கம் இல்லாத நாட்கள், பசியோடு தூங்கின இரவுகள், கம்மியா வாங்கின மதிப்பெண்கள், வாழ்க்கை மீது எனக்கு வந்த ஒரு வெறுப்பு. என்ன இதை பத்தி யாரு கிட்டயும் சொல்ல முடியாது. சொல்லி வீட்டுக்கு தெரிஞ்ச பொட்டிய கட்ட சொல்லி உத்தரவு வந்திடும்.
2005 :
2004 செஞ்ச தப்பே என்னை தொரத்தி தொரத்தி அடிச்சது. இதுல தப்பிக்கலாம் அப்படின்னு ஊரு மாறி இன்னொரு ஊருக்கு போய் அங்கே கொஞ்சம் பணத்தோட படிப்பு சம்பந்தமா வேலை கிடைச்சுது. சரி இனியாவது ஒழுங்கா இருக்கணும் அப்படின்னு இருந்தேன். அங்கேயும் நமக்கு வந்தது சனி. நான் போன ஊருல வீட்டு வாடகை கொஞ்சம் அதிகம். சரி நாம நம்ம ஊரு மக்கள் கூட தங்கின கொஞ்சம் செலவும் கம்மி ஆகும், பேச்சு துணை மேலும் ஆள் துணையும் இருக்கும்னு நினைச்சேன். அது தான் நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு.
நண்பர்கள் அலைவரிசை, நேரம், பொழுது போக்கு எதுவுமே என்னோட ஒத்து போகலை. நவம்பர் கொஞ்சம் டேர்ரரா தான் போச்சு. டிசம்பர்ல தனி குடுத்தனம் போறதுன்னு முடிவு செஞ்சேன். நவம்பர், டிசம்பர் 2005 ஒரு மாதிரி போச்சு. அப்போ முடிவு செஞ்ச தனி குடுத்தனம் தான் இப்போ வரை தொடருது.
2006 :
2005 வருசத்தோட எல்லா சனியும் முடிஞ்சது அப்படின்னு இருந்தா, வந்தது ஆப்பு இன்னொரு பக்கத்துல இருந்து. என்னோட மாஸ்டர்ஸ் முடிக்க தீசீஸ் செய்யணும். அது நான் வேலை செஞ்ச எடத்துலியே முடிவு பண்ணி வெச்சிட்டு, என்னோட அருமை வாத்தியார் கிட்டயும் பேசி சரி பண்ணிட்டேன். வாத்தியாரும் ஈமெயில் செஞ்சுட்டாரு. சரி எல்லாம் முடிஞ்சுடிச்சு அப்படின்னு வீட்டுக்கு சொல்ல தொலை பேசினேன். அம்மா பாசமா கூப்பிடாங்க, அதான் எல்லாம் சரியா போகுது அப்படின்னு நானும் இந்தியா போறதுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டேன்.இது எல்லாம் ரெண்டு மணி நேரத்துல நடந்தது.
இந்தியா வந்து இறங்கி மெயில் செக் செஞ்சா, வந்தது குண்டு. என்னோட வாத்தியார் எதோ குழப்பம் செஞ்சுட்டாரு. இனி நான் அந்த கம்பெனில தீசீஸ் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சது. இருபது நாள் இந்தியாவுல, நிம்மதியா இருக்கவும் முடியலை. கவலை பட்டுகிட்டே இருக்கவும் முடியலை.
2007 :
நல்ல படியா தீசீஸ் எல்லாம் செஞ்சு முடிக்க வேண்டிய நேரம். எப்போதும் போல தீசீஸ் செய்யற நேரத்துல இருக்கற வேலை. முடிஞ்சா போதும் அப்படின்னு ஆகி போச்சு. எல்லாரும் கிறிஸ்துமஸ் கொண்டாடிகிட்டு இருந்த நேரம், நான் கம்ப்யூட்டர் கூட சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன்.
2008 :
கொஞ்சம் உஷாரா இருக்கணும்னு இருந்தேன். இருந்தாலும் ஆப்பு அடிச்சுடிச்சு. நல்லா வேலை செஞ்சுகிட்டு இருந்த என்னோட வேலை, மக்கர் பண்ணிச்சு. திரும்ப ஜெர்மனி விட்டு ஓடிடலாம் அப்படிங்கற அளவுக்கு தொரத்தி தொரத்தி அடிச்சது. அப்பறம் அதுல இருந்து தப்பிச்சு வந்த்துட்டேன்.
இதோ இன்னும் ஒரு வாரம், 2009 வருஷத்துக்கான நவம்பர், டிசம்பர் எனக்கு என்ன சொல்லித்தர போகுதுன்னு தெரியலை. ஆனா ஏதோ தனியா இருக்கரா போலத்தான் தெரியுது. ஆப்புகள் எல்லா பக்கமும் நிக்கறா போல ஒரு பீலிங்க்ஸ் அல்ரெடி இருக்கு. சோ மக்கா எல்லாரும் எனக்காக உம்மாச்சிகிட்டே வேண்டிக்கோங்க. ஆப்பே வேணாம்னு சொல்லலை. ஆனா கொஞ்சம் பாத்து அடிக்க சொல்லுங்க.
அன்புடன்
எஸ். கே.
Labels:
சுய பொலம்பல்
Monday, September 28, 2009
நானும் ஜோசியமும்
என்னதான் பெரிய புத்திசாலி அப்படி இப்படி எல்லாம் சொன்னாலும், நம்ம எதிர் காலத்தை பத்தி ஒருத்தர் நமக்கு முன்னாடியே சொல்றாரு அப்படின்னா நமக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். நான் முடிஞ்சா வரைக்கும் நேரடியா போய் ஜோசியம் பார்க்கிறது இல்லை. ஆனா போய் பாத்திட்டு வந்து சொன்னா கெடுக்கறது.
இப்படி தான் ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி, நான் பாச்சலர் படிச்சு முடிச்சிட்டு அடுத்து என்ன பண்ணலாம் அப்படின்னு இருந்த நேரம். நானும் எங்க சித்தி ஒருந்தங்களும் போனோம். அவர் கிட்டே ஜாதகத்தை நீட்டிபுட்டு உட்காந்தேன். அவரும் அதை பாத்தாரு, கணக்கு போறாரு, எதோ கிருக்கினாறு.. அப்படியே தாடிய சொறிஞ்சுகிட்டு ஆரம்பிச்சாரு. 'இந்த ஜாதகக்காரர் படிச்சு முடிச்சு வேலைக்கு போவாரு. இவருக்கு இதுக்கு மேல படிக்க வாய்ப்பு இல்லை. கூடிய சீக்கரம் வேலை கிடைக்கும் தம்பி' அப்படின்னு சொன்னாரு. எனக்கு பகீர்னு தூக்கி வாரி போட்டிச்சு. அதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் ஜேர்மன் அட்மிஷன் லெட்டர் வாங்கி வெச்சிட்டு வந்தேன். நல்ல இருங்க சாமி அப்படின்னு அவரை வாழ்த்திட்டு வந்துட்டேன். அதை பத்தி நான் பெருசா யோசிக்கல அப்பறம். மாஸ்டர்ஸ் முடிக்கும் பொது தீசிஸ் செய்யும் போது ஒரு சின்ன சிக்கல்ல மாட்டிகிட்டேன். படிச்சு முடிப்பமா அப்படின்னு ஒரு சூழ்நிலை. அந்த ரெண்டு மாசம், இந்த ஜோசியக்காரரும்,அவர் சொன்னதும் தான் கனவுல வந்தது. ஒரு வேலை நாம மேல் படிப்பு படிக்க வந்ததே தப்போ அப்படின்னு ஒரு டேர்ரரா யோசிக்க வைச்சுடிச்சு. அப்பறம் அதையும் தாண்டி வந்தாச்சு.
அப்பறம் இப்போ சமீபத்துல அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சது. நம்ம மக்கள் தான் சும்மா இருக்க மாட்டாங்க இல்லை, 'அண்ணனுக்கு முடிஞ்சுடிச்சு, அப்படியே தம்பிக்கும் சட்டு புட்டுன்னு முடிக்க வேண்டியது தானே' அப்படின்னு ஒரு பிட்டு. 'யோவ் சும்மா இருய்யா' அப்படிங்கற அளவுல அவுங்களை எல்லாம் அடக்கி அமுத்தி வைக்க முயற்சி செஞ்சேன். அப்படியே அப்பா, அம்மா எல்லாரையும் தேத்தி இன்னும் ஒரு ரெண்டு வருஷம் எதை பத்தியும் யோசிக்காதீங்க அப்படின்னு சொல்லி ஆசுவாசப்படுத்தி வெச்சேன். நமக்கு தான் விதி வலியது ஆச்சே. கை ஜோசியம் பாக்கரவங்கள்ள இருந்து, நாடி ஜோசியம், மூஞ்சி ஜோசியம் வரைக்கும் நமக்கு ஆப்பு அடிக்கறதுன்னா தான் மொத்தமா கெளம்பி வருவாங்களே. இவங்க எல்லாரும் சேந்து மொத்தமா சொன்ன ஒரே விஷயம், 'இந்த பையன் எதாவது ஒரு பொன்னை இழுத்திட்டு வந்துடுவான், காதல் கல்யாணம் தான் அப்படின்னு' போடாங்க பாருங்க ஒரு குண்டை. நான் அஞ்சு மணி நேரம், ஆறு மணி நேரம் பேசி பஞ்சாயத்து பண்றதை ஒரே ஒரு நிமிஷத்துல போட்டு தூள் தூள் ஆக்கிடுவாங்க. 'இன்னும் சிலர் வெள்ளக்காரிய கூட்டிகிட்டு வந்தாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்லை' அப்படின்னு நாலஞ்சு பிட்டை செத்து போடுறாங்க. 'மக்களே, உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா'. நல்லா இருங்கடா டேய். அப்படின்னு ஒவ்வொரு முறையும் பஞ்சாயத்து நடக்குது.
இந்த பதிவை எழுத தூண்டியது இப்போ சமீபத்துல நடந்த ஒரு நிகழ்வு. இங்கே ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போய் இருந்தேன். அங்கே விலை கொஞ்சம் கம்மியா இருக்கும், மேலும் நம்ம ஊர்காரரு வெச்சு இருக்காரு. சாப்பிட்டு பில் கொடுக்க போனேன். என்னைய பாத்தவரு, 'வாங்க தம்பி' அப்படின்னு ஆரம்பிச்சாரு. நான் அப்போவே உஷார் ஆகி இருக்கணும். நமக்கு தான் விதி வலியது ஆச்சே. பேச்சுவாக்குல ஆரம்பிச்சாரு, 'தம்பி, உங்க பொறந்த தேதி' அப்படின்னாரு. நான் சடார்னு சுதாரிக்கரதுக்குல, 'பொறந்த தேதியோட கூட்டல் தொகை சொல்லுங்க தம்பி' அப்படின்னாரு. 'எட்டு இல்லை தம்பி வருது, எட்டு வந்தா படிக்க மாட்டாங்களே, மெக்கானிக், வரையறது இது போல எதாவது பக்கம் இல்லை போவாங்க,நீங்க படிக்கரீங்களே, பரவா இல்லையே' அப்படின்னாரு. 'மொதோ தப்பு நான் இங்கே சாப்பிட வந்தது' அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு, சிரிச்சுகிட்டே காசை கைல கொடுத்திட்டு ஓடி வந்திட்டேன். எனக்கு இது தேவையா மகாஜனங்களே. நான் பாட்டுக்கு அமைதியா இருந்தாலும் வம்பு எங்க விடறேங்குது என்னைய.
சரி இது தான் இப்படி போகட்டும் சொல்லி வீட்டுக்கு போன் செஞ்சேன், 'கண்ணு அஷ்டமத்துல சனியாம், கொஞ்சம் வாய கொறைச்சு சூதனமா இருந்துக்க அப்படினாங்க'. நான் என் இனி பேசறேன். எங்க போனாலும் நம்மளை சுத்தி அடிக்கறாங்க மக்கா. எதோ நல்ல இருந்தா சரி தான்.
அன்புடன்,
எஸ். கே.
இப்படி தான் ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி, நான் பாச்சலர் படிச்சு முடிச்சிட்டு அடுத்து என்ன பண்ணலாம் அப்படின்னு இருந்த நேரம். நானும் எங்க சித்தி ஒருந்தங்களும் போனோம். அவர் கிட்டே ஜாதகத்தை நீட்டிபுட்டு உட்காந்தேன். அவரும் அதை பாத்தாரு, கணக்கு போறாரு, எதோ கிருக்கினாறு.. அப்படியே தாடிய சொறிஞ்சுகிட்டு ஆரம்பிச்சாரு. 'இந்த ஜாதகக்காரர் படிச்சு முடிச்சு வேலைக்கு போவாரு. இவருக்கு இதுக்கு மேல படிக்க வாய்ப்பு இல்லை. கூடிய சீக்கரம் வேலை கிடைக்கும் தம்பி' அப்படின்னு சொன்னாரு. எனக்கு பகீர்னு தூக்கி வாரி போட்டிச்சு. அதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் ஜேர்மன் அட்மிஷன் லெட்டர் வாங்கி வெச்சிட்டு வந்தேன். நல்ல இருங்க சாமி அப்படின்னு அவரை வாழ்த்திட்டு வந்துட்டேன். அதை பத்தி நான் பெருசா யோசிக்கல அப்பறம். மாஸ்டர்ஸ் முடிக்கும் பொது தீசிஸ் செய்யும் போது ஒரு சின்ன சிக்கல்ல மாட்டிகிட்டேன். படிச்சு முடிப்பமா அப்படின்னு ஒரு சூழ்நிலை. அந்த ரெண்டு மாசம், இந்த ஜோசியக்காரரும்,அவர் சொன்னதும் தான் கனவுல வந்தது. ஒரு வேலை நாம மேல் படிப்பு படிக்க வந்ததே தப்போ அப்படின்னு ஒரு டேர்ரரா யோசிக்க வைச்சுடிச்சு. அப்பறம் அதையும் தாண்டி வந்தாச்சு.
அப்பறம் இப்போ சமீபத்துல அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சது. நம்ம மக்கள் தான் சும்மா இருக்க மாட்டாங்க இல்லை, 'அண்ணனுக்கு முடிஞ்சுடிச்சு, அப்படியே தம்பிக்கும் சட்டு புட்டுன்னு முடிக்க வேண்டியது தானே' அப்படின்னு ஒரு பிட்டு. 'யோவ் சும்மா இருய்யா' அப்படிங்கற அளவுல அவுங்களை எல்லாம் அடக்கி அமுத்தி வைக்க முயற்சி செஞ்சேன். அப்படியே அப்பா, அம்மா எல்லாரையும் தேத்தி இன்னும் ஒரு ரெண்டு வருஷம் எதை பத்தியும் யோசிக்காதீங்க அப்படின்னு சொல்லி ஆசுவாசப்படுத்தி வெச்சேன். நமக்கு தான் விதி வலியது ஆச்சே. கை ஜோசியம் பாக்கரவங்கள்ள இருந்து, நாடி ஜோசியம், மூஞ்சி ஜோசியம் வரைக்கும் நமக்கு ஆப்பு அடிக்கறதுன்னா தான் மொத்தமா கெளம்பி வருவாங்களே. இவங்க எல்லாரும் சேந்து மொத்தமா சொன்ன ஒரே விஷயம், 'இந்த பையன் எதாவது ஒரு பொன்னை இழுத்திட்டு வந்துடுவான், காதல் கல்யாணம் தான் அப்படின்னு' போடாங்க பாருங்க ஒரு குண்டை. நான் அஞ்சு மணி நேரம், ஆறு மணி நேரம் பேசி பஞ்சாயத்து பண்றதை ஒரே ஒரு நிமிஷத்துல போட்டு தூள் தூள் ஆக்கிடுவாங்க. 'இன்னும் சிலர் வெள்ளக்காரிய கூட்டிகிட்டு வந்தாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்லை' அப்படின்னு நாலஞ்சு பிட்டை செத்து போடுறாங்க. 'மக்களே, உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா'. நல்லா இருங்கடா டேய். அப்படின்னு ஒவ்வொரு முறையும் பஞ்சாயத்து நடக்குது.
இந்த பதிவை எழுத தூண்டியது இப்போ சமீபத்துல நடந்த ஒரு நிகழ்வு. இங்கே ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போய் இருந்தேன். அங்கே விலை கொஞ்சம் கம்மியா இருக்கும், மேலும் நம்ம ஊர்காரரு வெச்சு இருக்காரு. சாப்பிட்டு பில் கொடுக்க போனேன். என்னைய பாத்தவரு, 'வாங்க தம்பி' அப்படின்னு ஆரம்பிச்சாரு. நான் அப்போவே உஷார் ஆகி இருக்கணும். நமக்கு தான் விதி வலியது ஆச்சே. பேச்சுவாக்குல ஆரம்பிச்சாரு, 'தம்பி, உங்க பொறந்த தேதி' அப்படின்னாரு. நான் சடார்னு சுதாரிக்கரதுக்குல, 'பொறந்த தேதியோட கூட்டல் தொகை சொல்லுங்க தம்பி' அப்படின்னாரு. 'எட்டு இல்லை தம்பி வருது, எட்டு வந்தா படிக்க மாட்டாங்களே, மெக்கானிக், வரையறது இது போல எதாவது பக்கம் இல்லை போவாங்க,நீங்க படிக்கரீங்களே, பரவா இல்லையே' அப்படின்னாரு. 'மொதோ தப்பு நான் இங்கே சாப்பிட வந்தது' அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு, சிரிச்சுகிட்டே காசை கைல கொடுத்திட்டு ஓடி வந்திட்டேன். எனக்கு இது தேவையா மகாஜனங்களே. நான் பாட்டுக்கு அமைதியா இருந்தாலும் வம்பு எங்க விடறேங்குது என்னைய.
சரி இது தான் இப்படி போகட்டும் சொல்லி வீட்டுக்கு போன் செஞ்சேன், 'கண்ணு அஷ்டமத்துல சனியாம், கொஞ்சம் வாய கொறைச்சு சூதனமா இருந்துக்க அப்படினாங்க'. நான் என் இனி பேசறேன். எங்க போனாலும் நம்மளை சுத்தி அடிக்கறாங்க மக்கா. எதோ நல்ல இருந்தா சரி தான்.
அன்புடன்,
எஸ். கே.
Friday, September 4, 2009
உதவி அமைப்புகள் - ஒரு தொடர் பதிவு
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிறைய சேவை அமைப்புகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு அமைப்புகளும் ஒவ்வொரு குறிக்கோளுடன் அமைகிறது. கல்வி வளர்ச்சி மற்றும் உதவி, ஊனமுற்றோர்களுக்கு உதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விளையாட்டுப்பயிற்சிக்கு உதவி, இது போல பட்டியல் நீளும்.
நாம் பலவற்றை படித்து இருப்போம், கேள்விப்பட்டு இருப்போம், நேரிடையா பார்த்து இருப்போம். சிலவற்றை அனுபவப்பட்டும் இருப்போம். இதில் எந்த வகை ஆனாலும் சரி, இதில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த தொடர்பதிவின் நோக்கம்:
இது போல் இந்தியாவில், தமிழகத்தில் மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள சேவை அமைப்புகளை பற்றி அறிந்து கொள்ள.
எதை போன்ற அமைப்புகளை பகிரலாம் :
எந்த அமைப்புகள் ஆனாலும், சேவை அமைப்புகளாக இருந்தால் பகிரலாம். அவர்களின் குறிக்கோள் கல்வி, விளையாட்டு, சுற்றுச்சூழல், இது போன்று எதுவாக இருந்தாலும் சரி. சாதி, மத, இன பேதமின்றி உழைக்கும் அமைப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
நிறுவங்களின் டிரஸ்ட் போன்ற அமைப்புகள் இருந்தாலும் அறிமுக படுத்துங்கள். சில சாதி அமைப்புகள் அந்த குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் உதவுகிறார்களா ம்ம்ம்ம் அறிமுகப்படுத்துகள். சில கட்சிகள் இது போன்று உதவி செய்கிறார்களா ம்ம்ம் தெரியப்படுத்துகள்.
பண உதவி இன்றி ஆதரவு இல்லங்கள், முதியோர் இல்லங்கள் இது போன்ற அமைப்புகள் இருந்தாலும் அறிமுகப்படுத்துங்கள்.
இணையதளம் இன்றி நண்பர்கள் மட்டும் இணைந்து இயங்குகிறார்களா அறிமுகப்படுத்துங்கள்.
நம்பகத்தன்மை :
அறிமுகப்படுத்தும் முன் ஒரே ஒரு முறை அவர்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
முடிந்த வரை குறைந்த பட்சம் ஒரே ஒரு அமைப்பையாவது அறிமுகப்படுத்துங்கள்.
முடிந்தால் குறைந்த பட்சம் ஒரே ஒரு நபரோ, அதிக பட்சம் எத்துனை நபர் வேண்டும் ஆனாலும் இதை எழுதுவதற்கு அழையுங்கள்.
என்னுடைய அறிமுகங்கள்:
1. நான்கு நண்பர்களால் தொடங்கப்பட்டு இப்போது தருமபுரி பகுதியில் நிறைய உதவிகள் செய்து வரும் அமைப்பு. இவர்களை பற்றி என் கல்லூரி நண்பர்கள் இடத்தில் கேள்வி பட்டு உள்ளேன். மேலும் விவரங்களுக்கு இங்கே
அவர்கள் பற்றிய தகவல்கள்
VYSWO
Somanahalli Village, P.N. Patti Post,
Palacode Talk, Dharmapuri Dist.,
Tamilnadu, INDIA.636 808.
Telephone Number : 04348235537
Email: vyswo_org@yahoo.com
http://vyswo.com/index.html
2. இந்தியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக இயங்கும் அமைப்பு. ஐந்தாவது தூண். இதுவும் என் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு உள்ளேன். என் நண்பர்களின் நண்பர்கள் இதில் இயங்கியும் வருகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே.
5th Pillar.
India Headquarters
41, Circular Road, United India Colony,
Kodambakkam,
Chennai - 600 024
Phone : 044 65273056
Fax : 044 42133677
3. VidyapOshak
பண உதவிகள் தவிர பல கல்வி சம்பந்தப்பட்ட உதவிகள் செய்து வருகிறார்கள். இதை இன்னும் பெருமையுடன் அறிமுகப்படுத்துவேன். காரணம். நம்மால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு பதிவர் இதை அயாரது உழைத்து வருவதால். இதில் ஒரு சுயநலமும் உண்டு. கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் செய்யும் சேவை தமிழகத்திலும் தொடரவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறேன். மேலும் விவரங்களுக்கு இங்கே
நான் அழைக்கும் மூன்று பதிவர்கள்
1. ஏதாவது செய்யணும் பாஸ் புகழ் நர்சிம்.
2. அமிர்தவர்ஷிணி அம்மா.
3. தமிழ்மணம் இன்றி கொஞ்சம் வெளியில், SG. நீங்கள் ஆங்கிலத்திலும் எழுதலாம்.
ஒரு வேண்டுகோள் :
பதிவு எழுதியவுடன் அந்த பதிவின் சுட்டியை இந்த முகவரிக்கு அனுப்பினால் weshoulddosomething@googlemail.com மிகவும் உதவியாக இருக்கும். இது கட்டயாம் இல்லை. இதன் ஒரே நோக்கம். ஒரு இரண்டு மாதம் சென்று, இந்த அனைத்து விவரங்களையும் மொத்தமாக ஒரே இடத்தில் சேர்க்கும் யோசனை உள்ளது.
அன்புடன்
எஸ். கே.
நாம் பலவற்றை படித்து இருப்போம், கேள்விப்பட்டு இருப்போம், நேரிடையா பார்த்து இருப்போம். சிலவற்றை அனுபவப்பட்டும் இருப்போம். இதில் எந்த வகை ஆனாலும் சரி, இதில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த தொடர்பதிவின் நோக்கம்:
இது போல் இந்தியாவில், தமிழகத்தில் மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள சேவை அமைப்புகளை பற்றி அறிந்து கொள்ள.
எதை போன்ற அமைப்புகளை பகிரலாம் :
எந்த அமைப்புகள் ஆனாலும், சேவை அமைப்புகளாக இருந்தால் பகிரலாம். அவர்களின் குறிக்கோள் கல்வி, விளையாட்டு, சுற்றுச்சூழல், இது போன்று எதுவாக இருந்தாலும் சரி. சாதி, மத, இன பேதமின்றி உழைக்கும் அமைப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
நிறுவங்களின் டிரஸ்ட் போன்ற அமைப்புகள் இருந்தாலும் அறிமுக படுத்துங்கள். சில சாதி அமைப்புகள் அந்த குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் உதவுகிறார்களா ம்ம்ம்ம் அறிமுகப்படுத்துகள். சில கட்சிகள் இது போன்று உதவி செய்கிறார்களா ம்ம்ம் தெரியப்படுத்துகள்.
பண உதவி இன்றி ஆதரவு இல்லங்கள், முதியோர் இல்லங்கள் இது போன்ற அமைப்புகள் இருந்தாலும் அறிமுகப்படுத்துங்கள்.
இணையதளம் இன்றி நண்பர்கள் மட்டும் இணைந்து இயங்குகிறார்களா அறிமுகப்படுத்துங்கள்.
நம்பகத்தன்மை :
அறிமுகப்படுத்தும் முன் ஒரே ஒரு முறை அவர்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
முடிந்த வரை குறைந்த பட்சம் ஒரே ஒரு அமைப்பையாவது அறிமுகப்படுத்துங்கள்.
முடிந்தால் குறைந்த பட்சம் ஒரே ஒரு நபரோ, அதிக பட்சம் எத்துனை நபர் வேண்டும் ஆனாலும் இதை எழுதுவதற்கு அழையுங்கள்.
என்னுடைய அறிமுகங்கள்:
1. நான்கு நண்பர்களால் தொடங்கப்பட்டு இப்போது தருமபுரி பகுதியில் நிறைய உதவிகள் செய்து வரும் அமைப்பு. இவர்களை பற்றி என் கல்லூரி நண்பர்கள் இடத்தில் கேள்வி பட்டு உள்ளேன். மேலும் விவரங்களுக்கு இங்கே
அவர்கள் பற்றிய தகவல்கள்
VYSWO
Somanahalli Village, P.N. Patti Post,
Palacode Talk, Dharmapuri Dist.,
Tamilnadu, INDIA.636 808.
Telephone Number : 04348235537
Email: vyswo_org@yahoo.com
http://vyswo.com/index.html
2. இந்தியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக இயங்கும் அமைப்பு. ஐந்தாவது தூண். இதுவும் என் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு உள்ளேன். என் நண்பர்களின் நண்பர்கள் இதில் இயங்கியும் வருகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே.
5th Pillar.
India Headquarters
41, Circular Road, United India Colony,
Kodambakkam,
Chennai - 600 024
Phone : 044 65273056
Fax : 044 42133677
3. VidyapOshak
பண உதவிகள் தவிர பல கல்வி சம்பந்தப்பட்ட உதவிகள் செய்து வருகிறார்கள். இதை இன்னும் பெருமையுடன் அறிமுகப்படுத்துவேன். காரணம். நம்மால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு பதிவர் இதை அயாரது உழைத்து வருவதால். இதில் ஒரு சுயநலமும் உண்டு. கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் செய்யும் சேவை தமிழகத்திலும் தொடரவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறேன். மேலும் விவரங்களுக்கு இங்கே
நான் அழைக்கும் மூன்று பதிவர்கள்
1. ஏதாவது செய்யணும் பாஸ் புகழ் நர்சிம்.
2. அமிர்தவர்ஷிணி அம்மா.
3. தமிழ்மணம் இன்றி கொஞ்சம் வெளியில், SG. நீங்கள் ஆங்கிலத்திலும் எழுதலாம்.
ஒரு வேண்டுகோள் :
பதிவு எழுதியவுடன் அந்த பதிவின் சுட்டியை இந்த முகவரிக்கு அனுப்பினால் weshoulddosomething@googlemail.com மிகவும் உதவியாக இருக்கும். இது கட்டயாம் இல்லை. இதன் ஒரே நோக்கம். ஒரு இரண்டு மாதம் சென்று, இந்த அனைத்து விவரங்களையும் மொத்தமாக ஒரே இடத்தில் சேர்க்கும் யோசனை உள்ளது.
அன்புடன்
எஸ். கே.
Labels:
தொடர் பதிவு
Monday, August 31, 2009
செந்தில்நாதன்னுக்காக.....
ஆம். திரு. நர்சிம் அவர்கள் சொல்லி உள்ளது போல் 70% தாண்டிவிட்டோம். இன்னும் இருப்பது 30% மட்டுமே. இது மீண்டும் ஒரு நினைவுகூரல்.
மேலும் விவரமான திரு. நர்சிம் அவர்களின் பதிவு இங்கே.
உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் கவனத்திற்கு.
********
ICICI Account Details
Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore
Singapore Account Details
Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings
ராஜாவின் தொலைபேசி :+966 508296293
நண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261
**********
சிங்கப்பூர்
கோவி.கண்ணண் - +65 98767586
குழலி - +65 81165721
ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775
அமெரிக்கா
இளா - +1 609.977.7767
இந்தியா
நர்சிம் - +91 9841888663
அமீரகம்
ஆசிப் மீரான் - +971 506550245
சவுதி அரேபியா
ராஜா - +966 508296293
ஜெர்மனி(&Europe)
S.குமார் Number : 004917622864334,
E-mail : friends.sk@gmail.com
அன்புடன்
எஸ். கே.
மேலும் விவரமான திரு. நர்சிம் அவர்களின் பதிவு இங்கே.
உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் கவனத்திற்கு.
********
ICICI Account Details
Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore
Singapore Account Details
Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings
ராஜாவின் தொலைபேசி :+966 508296293
நண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261
**********
சிங்கப்பூர்
கோவி.கண்ணண் - +65 98767586
குழலி - +65 81165721
ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775
அமெரிக்கா
இளா - +1 609.977.7767
இந்தியா
நர்சிம் - +91 9841888663
அமீரகம்
ஆசிப் மீரான் - +971 506550245
சவுதி அரேபியா
ராஜா - +966 508296293
ஜெர்மனி(&Europe)
S.குமார் Number : 004917622864334,
E-mail : friends.sk@gmail.com
அன்புடன்
எஸ். கே.
Labels:
செந்தில்நாதன்
Friday, August 28, 2009
திருமதி அனுராதா அவர்களுக்கு நினைவஞ்சலி.
திருமதி. அனுராதா, பல பழைய பதிவர்களுக்கு அறிமுகம் ஆனவர். இன்று ஆகஸ்ட் 28 அவருடைய முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
கேன்சர் எனும் அரக்கனுடன் போராடியதோடு மட்டும் அல்லாமல் அவருடைய அனுபவங்கள் மற்றும் கேள்விகள் அனைத்தையும் பதிவாக எழுதி தன்னால் முடிந்த வரை விழிப்புணர்வை கொண்டு வரும் முயற்சியில் கடைசி வரை அயராது ஈடு பட்டவர்.
நான் முதலில் படித்து கண் கலங்க செய்த வலைப்பூ அவருடையது தான். நம்மாலும் இது போல் முடிந்த வரை ஏதேனும் உபயோகமாக எழுத முயற்சி செய்யலாம்.
அவருக்கு என்னுடைய அஞ்சலிகள்.
-எஸ். கே.
கேன்சர் எனும் அரக்கனுடன் போராடியதோடு மட்டும் அல்லாமல் அவருடைய அனுபவங்கள் மற்றும் கேள்விகள் அனைத்தையும் பதிவாக எழுதி தன்னால் முடிந்த வரை விழிப்புணர்வை கொண்டு வரும் முயற்சியில் கடைசி வரை அயராது ஈடு பட்டவர்.
நான் முதலில் படித்து கண் கலங்க செய்த வலைப்பூ அவருடையது தான். நம்மாலும் இது போல் முடிந்த வரை ஏதேனும் உபயோகமாக எழுத முயற்சி செய்யலாம்.
அவருக்கு என்னுடைய அஞ்சலிகள்.
-எஸ். கே.
Labels:
திருமதி அனுராதா,
நினைவஞ்சலி
Wednesday, August 26, 2009
சினி மொக்கை + இன்ன பிற
நீ ஏன் எப்போ பாத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு ஏதோ நீ மட்டும் ஊரை காப்பத்த இருக்கறா போல எப்போ பாத்தாலும் ஒரு மாதிரி எழுதறே. சினிமா பத்தி, அரசியல் பத்தி எல்லாம் மொக்கை போடலாம்ல அப்படின்னு ஒரு புண்ணியவான் என்னைய பாத்து கேட்டு புட்டான் மக்கா. சும்மா இருப்பனா நான். இதோ.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கமல் திரை உலகத்துக்கு நடிக்க வந்து 50 வருஷம். காரு உடறாங்க, பஸ் உடறாங்க, விழா எடுக்கறாங்க. வாழ்த்துக்கள் கமல் சார்.
ஆனா எனக்கு ஒரு டவுட். 1959/60 ஆண்டில் களத்தூர் கண்ணம்மா வந்தது. அப்பறம் மூணு வருஷத்துல நாலு படம் நடிச்சு இருக்கார். 1963 அப்புறம் ஒன்பது வருஷம் எந்த படமும் வரலை. 1972 ல அடுத்த படம் வந்து இருக்கு. இப்படி நடுல கிட்டததட்ட ஒன்பது வருடம் எதுலையும் நடிக்கலை. அப்பறம் எப்படி அம்பது வருஷம் கொண்டாடுவாங்க. இது என்ன அநியாயமா இருக்கு. ஒருத்தர் கொழந்தையா ஒரு படத்துல நடிக்கறார், அப்பறம் இருபது வருஷம் கழிச்சு திரும்ப வந்து நடிக்கறார். அப்போ அவரும் சினிமாவுக்கு வந்து 25 வருஷம் ஆச்சு சொல்லலாமா. எனக்கும் புரியலை. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கோ மக்கா. கமல் ரசிகர்களே கோவிச்சுகாதீங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாங்க ரொம்ப எதிர் பார்த்த கந்தசாமி ஒரு மாதிரி ஆக்கி இருக்கு எங்களை. கமல் சார், உன்னைப்போல் ஒருவன் வருது. ஏதோ பாத்து பண்ணுங்க. நான் வேற ஹிந்தி 'A wednesday' பாத்து தொலைஞ்சுட்டேன். ரொம்ப யோசிச்சு எங்களை டெர்ரர் ஆக்கிடாதீங்க. புண்ணியமா போகும்.
கந்தசாமி நல்லா இருக்குன்னு ரஜினி சார் சர்டிபிகேட் கொடுத்து இருக்காராம். ஏதோ நல்ல இருந்தா சரி தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரித்திர புகழ் வாய்ந்த சந்திப்பு அகில உலக அட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் நம்ம ஊரு கில்லி விஜயும் சந்திச்சு இருக்காங்க. இனிமே நம்ம பதிவுகிலும் சரி, காங்கிரஸ் (என்னது எந்த காங்கிரசா??) ஆதரவாளர்களும் சரி வேட்டைக்காரன் ஹிட் ஆகும் வரை ஓய மாட்டாங்க. விஜய் சார் உங்களுக்கு ஒஹோன்னு எதிர் காலம் இருக்கு. வாழ்த்துக்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்வளவு முக்கியமான விஷயம் எல்லாம் இருக்கும் பொழுது
எவனுக்கு நல்லா தண்ணி கிடைச்சா நமக்கு என்ன, கிடைக்கலைனா நமக்கு என்ன. :(
சின்ன சின்ன புள்ளைங்க எல்லாம் இப்படி விலை போனா நமக்கு என்ன, போகலைன்னா நமக்கு என்ன :(
எவன் எவ்வளவு லஞ்சம் வாங்கினா நமக்கு என்ன, வாங்கலைன்னா நமக்கு என்ன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேண்டுகோள் : திரு சிங்கைநாதன் அவர்களுக்கு ஐரோப்பாவில் இருந்து உதவ விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அதை பற்றிய பதிவு இங்கே.
நாளை நடக்க இருக்கும் சிகிச்சை நல்ல படியாக அமைய என்னுடைய பிரார்த்தனைகள்.
அன்புடன்
எஸ். கே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கமல் திரை உலகத்துக்கு நடிக்க வந்து 50 வருஷம். காரு உடறாங்க, பஸ் உடறாங்க, விழா எடுக்கறாங்க. வாழ்த்துக்கள் கமல் சார்.
ஆனா எனக்கு ஒரு டவுட். 1959/60 ஆண்டில் களத்தூர் கண்ணம்மா வந்தது. அப்பறம் மூணு வருஷத்துல நாலு படம் நடிச்சு இருக்கார். 1963 அப்புறம் ஒன்பது வருஷம் எந்த படமும் வரலை. 1972 ல அடுத்த படம் வந்து இருக்கு. இப்படி நடுல கிட்டததட்ட ஒன்பது வருடம் எதுலையும் நடிக்கலை. அப்பறம் எப்படி அம்பது வருஷம் கொண்டாடுவாங்க. இது என்ன அநியாயமா இருக்கு. ஒருத்தர் கொழந்தையா ஒரு படத்துல நடிக்கறார், அப்பறம் இருபது வருஷம் கழிச்சு திரும்ப வந்து நடிக்கறார். அப்போ அவரும் சினிமாவுக்கு வந்து 25 வருஷம் ஆச்சு சொல்லலாமா. எனக்கும் புரியலை. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கோ மக்கா. கமல் ரசிகர்களே கோவிச்சுகாதீங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாங்க ரொம்ப எதிர் பார்த்த கந்தசாமி ஒரு மாதிரி ஆக்கி இருக்கு எங்களை. கமல் சார், உன்னைப்போல் ஒருவன் வருது. ஏதோ பாத்து பண்ணுங்க. நான் வேற ஹிந்தி 'A wednesday' பாத்து தொலைஞ்சுட்டேன். ரொம்ப யோசிச்சு எங்களை டெர்ரர் ஆக்கிடாதீங்க. புண்ணியமா போகும்.
கந்தசாமி நல்லா இருக்குன்னு ரஜினி சார் சர்டிபிகேட் கொடுத்து இருக்காராம். ஏதோ நல்ல இருந்தா சரி தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரித்திர புகழ் வாய்ந்த சந்திப்பு அகில உலக அட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் நம்ம ஊரு கில்லி விஜயும் சந்திச்சு இருக்காங்க. இனிமே நம்ம பதிவுகிலும் சரி, காங்கிரஸ் (என்னது எந்த காங்கிரசா??) ஆதரவாளர்களும் சரி வேட்டைக்காரன் ஹிட் ஆகும் வரை ஓய மாட்டாங்க. விஜய் சார் உங்களுக்கு ஒஹோன்னு எதிர் காலம் இருக்கு. வாழ்த்துக்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்வளவு முக்கியமான விஷயம் எல்லாம் இருக்கும் பொழுது
எவனுக்கு நல்லா தண்ணி கிடைச்சா நமக்கு என்ன, கிடைக்கலைனா நமக்கு என்ன. :(
சின்ன சின்ன புள்ளைங்க எல்லாம் இப்படி விலை போனா நமக்கு என்ன, போகலைன்னா நமக்கு என்ன :(
எவன் எவ்வளவு லஞ்சம் வாங்கினா நமக்கு என்ன, வாங்கலைன்னா நமக்கு என்ன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேண்டுகோள் : திரு சிங்கைநாதன் அவர்களுக்கு ஐரோப்பாவில் இருந்து உதவ விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அதை பற்றிய பதிவு இங்கே.
நாளை நடக்க இருக்கும் சிகிச்சை நல்ல படியாக அமைய என்னுடைய பிரார்த்தனைகள்.
அன்புடன்
எஸ். கே.
Labels:
இன்ன பிற,
சினி மொக்கை
Subscribe to:
Posts (Atom)