SK
என்னதான் பெரிய புத்திசாலி அப்படி இப்படி எல்லாம் சொன்னாலும், நம்ம எதிர் காலத்தை பத்தி ஒருத்தர் நமக்கு முன்னாடியே சொல்றாரு அப்படின்னா நமக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். நான் முடிஞ்சா வரைக்கும் நேரடியா போய் ஜோசியம் பார்க்கிறது இல்லை. ஆனா போய் பாத்திட்டு வந்து சொன்னா கெடுக்கறது.

இப்படி தான் ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி, நான் பாச்சலர் படிச்சு முடிச்சிட்டு அடுத்து என்ன பண்ணலாம் அப்படின்னு இருந்த நேரம். நானும் எங்க சித்தி ஒருந்தங்களும் போனோம். அவர் கிட்டே ஜாதகத்தை நீட்டிபுட்டு உட்காந்தேன். அவரும் அதை பாத்தாரு, கணக்கு போறாரு, எதோ கிருக்கினாறு.. அப்படியே தாடிய சொறிஞ்சுகிட்டு ஆரம்பிச்சாரு. 'இந்த ஜாதகக்காரர் படிச்சு முடிச்சு வேலைக்கு போவாரு. இவருக்கு இதுக்கு மேல படிக்க வாய்ப்பு இல்லை. கூடிய சீக்கரம் வேலை கிடைக்கும் தம்பி' அப்படின்னு சொன்னாரு. எனக்கு பகீர்னு தூக்கி வாரி போட்டிச்சு. அதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் ஜேர்மன் அட்மிஷன் லெட்டர் வாங்கி வெச்சிட்டு வந்தேன். நல்ல இருங்க சாமி அப்படின்னு அவரை வாழ்த்திட்டு வந்துட்டேன். அதை பத்தி நான் பெருசா யோசிக்கல அப்பறம். மாஸ்டர்ஸ் முடிக்கும் பொது தீசிஸ் செய்யும் போது ஒரு சின்ன சிக்கல்ல மாட்டிகிட்டேன். படிச்சு முடிப்பமா அப்படின்னு ஒரு சூழ்நிலை. அந்த ரெண்டு மாசம், இந்த ஜோசியக்காரரும்,அவர் சொன்னதும் தான் கனவுல வந்தது. ஒரு வேலை நாம மேல் படிப்பு படிக்க வந்ததே தப்போ அப்படின்னு ஒரு டேர்ரரா யோசிக்க வைச்சுடிச்சு. அப்பறம் அதையும் தாண்டி வந்தாச்சு.

அப்பறம் இப்போ சமீபத்துல அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சது. நம்ம மக்கள் தான் சும்மா இருக்க மாட்டாங்க இல்லை, 'அண்ணனுக்கு முடிஞ்சுடிச்சு, அப்படியே தம்பிக்கும் சட்டு புட்டுன்னு முடிக்க வேண்டியது தானே' அப்படின்னு ஒரு பிட்டு. 'யோவ் சும்மா இருய்யா' அப்படிங்கற அளவுல அவுங்களை எல்லாம் அடக்கி அமுத்தி வைக்க முயற்சி செஞ்சேன். அப்படியே அப்பா, அம்மா எல்லாரையும் தேத்தி இன்னும் ஒரு ரெண்டு வருஷம் எதை பத்தியும் யோசிக்காதீங்க அப்படின்னு சொல்லி ஆசுவாசப்படுத்தி வெச்சேன். நமக்கு தான் விதி வலியது ஆச்சே. கை ஜோசியம் பாக்கரவங்கள்ள இருந்து, நாடி ஜோசியம், மூஞ்சி ஜோசியம் வரைக்கும் நமக்கு ஆப்பு அடிக்கறதுன்னா தான் மொத்தமா கெளம்பி வருவாங்களே. இவங்க எல்லாரும் சேந்து மொத்தமா சொன்ன ஒரே விஷயம், 'இந்த பையன் எதாவது ஒரு பொன்னை இழுத்திட்டு வந்துடுவான், காதல் கல்யாணம் தான் அப்படின்னு' போடாங்க பாருங்க ஒரு குண்டை. நான் அஞ்சு மணி நேரம், ஆறு மணி நேரம் பேசி பஞ்சாயத்து பண்றதை ஒரே ஒரு நிமிஷத்துல போட்டு தூள் தூள் ஆக்கிடுவாங்க. 'இன்னும் சிலர் வெள்ளக்காரிய கூட்டிகிட்டு வந்தாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்லை' அப்படின்னு நாலஞ்சு பிட்டை செத்து போடுறாங்க. 'மக்களே, உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா'. நல்லா இருங்கடா டேய். அப்படின்னு ஒவ்வொரு முறையும் பஞ்சாயத்து நடக்குது.

இந்த பதிவை எழுத தூண்டியது இப்போ சமீபத்துல நடந்த ஒரு நிகழ்வு. இங்கே ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போய் இருந்தேன். அங்கே விலை கொஞ்சம் கம்மியா இருக்கும், மேலும் நம்ம ஊர்காரரு வெச்சு இருக்காரு. சாப்பிட்டு பில் கொடுக்க போனேன். என்னைய பாத்தவரு, 'வாங்க தம்பி' அப்படின்னு ஆரம்பிச்சாரு. நான் அப்போவே உஷார் ஆகி இருக்கணும். நமக்கு தான் விதி வலியது ஆச்சே. பேச்சுவாக்குல ஆரம்பிச்சாரு, 'தம்பி, உங்க பொறந்த தேதி' அப்படின்னாரு. நான் சடார்னு சுதாரிக்கரதுக்குல, 'பொறந்த தேதியோட கூட்டல் தொகை சொல்லுங்க தம்பி' அப்படின்னாரு. 'எட்டு இல்லை தம்பி வருது, எட்டு வந்தா படிக்க மாட்டாங்களே, மெக்கானிக், வரையறது இது போல எதாவது பக்கம் இல்லை போவாங்க,நீங்க படிக்கரீங்களே, பரவா இல்லையே' அப்படின்னாரு. 'மொதோ தப்பு நான் இங்கே சாப்பிட வந்தது' அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு, சிரிச்சுகிட்டே காசை கைல கொடுத்திட்டு ஓடி வந்திட்டேன். எனக்கு இது தேவையா மகாஜனங்களே. நான் பாட்டுக்கு அமைதியா இருந்தாலும் வம்பு எங்க விடறேங்குது என்னைய.

சரி இது தான் இப்படி போகட்டும் சொல்லி வீட்டுக்கு போன் செஞ்சேன், 'கண்ணு அஷ்டமத்துல சனியாம், கொஞ்சம் வாய கொறைச்சு சூதனமா இருந்துக்க அப்படினாங்க'. நான் என் இனி பேசறேன். எங்க போனாலும் நம்மளை சுத்தி அடிக்கறாங்க மக்கா. எதோ நல்ல இருந்தா சரி தான்.

அன்புடன்,
எஸ். கே.
SK
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிறைய சேவை அமைப்புகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு அமைப்புகளும் ஒவ்வொரு குறிக்கோளுடன் அமைகிறது. கல்வி வளர்ச்சி மற்றும் உதவி, ஊனமுற்றோர்களுக்கு உதவி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விளையாட்டுப்பயிற்சிக்கு உதவி, இது போல பட்டியல் நீளும்.

நாம் பலவற்றை படித்து இருப்போம், கேள்விப்பட்டு இருப்போம், நேரிடையா பார்த்து இருப்போம். சிலவற்றை அனுபவப்பட்டும் இருப்போம். இதில் எந்த வகை ஆனாலும் சரி, இதில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இந்த தொடர்பதிவின் நோக்கம்:

இது போல் இந்தியாவில், தமிழகத்தில் மற்றும் மற்ற மாநிலங்களில் உள்ள சேவை அமைப்புகளை பற்றி அறிந்து கொள்ள.

எதை போன்ற அமைப்புகளை பகிரலாம் :

எந்த அமைப்புகள் ஆனாலும், சேவை அமைப்புகளாக இருந்தால் பகிரலாம். அவர்களின் குறிக்கோள் கல்வி, விளையாட்டு, சுற்றுச்சூழல், இது போன்று எதுவாக இருந்தாலும் சரி. சாதி, மத, இன பேதமின்றி உழைக்கும் அமைப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

நிறுவங்களின் டிரஸ்ட் போன்ற அமைப்புகள் இருந்தாலும் அறிமுக படுத்துங்கள். சில சாதி அமைப்புகள் அந்த குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் உதவுகிறார்களா ம்ம்ம்ம் அறிமுகப்படுத்துகள். சில கட்சிகள் இது போன்று உதவி செய்கிறார்களா ம்ம்ம் தெரியப்படுத்துகள்.

பண உதவி இன்றி ஆதரவு இல்லங்கள், முதியோர் இல்லங்கள் இது போன்ற அமைப்புகள் இருந்தாலும் அறிமுகப்படுத்துங்கள்.

இணையதளம் இன்றி நண்பர்கள் மட்டும் இணைந்து இயங்குகிறார்களா அறிமுகப்படுத்துங்கள்.

நம்பகத்தன்மை :

அறிமுகப்படுத்தும் முன் ஒரே ஒரு முறை அவர்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

முடிந்த வரை குறைந்த பட்சம் ஒரே ஒரு அமைப்பையாவது அறிமுகப்படுத்துங்கள்.

முடிந்தால் குறைந்த பட்சம் ஒரே ஒரு நபரோ, அதிக பட்சம் எத்துனை நபர் வேண்டும் ஆனாலும் இதை எழுதுவதற்கு அழையுங்கள்.


என்னுடைய அறிமுகங்கள்:

1. நான்கு நண்பர்களால் தொடங்கப்பட்டு இப்போது தருமபுரி பகுதியில் நிறைய உதவிகள் செய்து வரும் அமைப்பு. இவர்களை பற்றி என் கல்லூரி நண்பர்கள் இடத்தில் கேள்வி பட்டு உள்ளேன். மேலும் விவரங்களுக்கு இங்கே

அவர்கள் பற்றிய தகவல்கள்

VYSWO
Somanahalli Village, P.N. Patti Post,
Palacode Talk, Dharmapuri Dist.,
Tamilnadu, INDIA.636 808.
Telephone Number : 04348235537
Email: vyswo_org@yahoo.com
http://vyswo.com/index.html

2. இந்தியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிராக இயங்கும் அமைப்பு. ஐந்தாவது தூண். இதுவும் என் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு உள்ளேன். என் நண்பர்களின் நண்பர்கள் இதில் இயங்கியும் வருகிறார்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே.

5th Pillar.
India Headquarters
41, Circular Road, United India Colony,
Kodambakkam,
Chennai - 600 024
Phone : 044 65273056
Fax : 044 42133677

3. VidyapOshak

பண உதவிகள் தவிர பல கல்வி சம்பந்தப்பட்ட உதவிகள் செய்து வருகிறார்கள். இதை இன்னும் பெருமையுடன் அறிமுகப்படுத்துவேன். காரணம். நம்மால் பெரிதும் மதிக்கப்படும் ஒரு பதிவர் இதை அயாரது உழைத்து வருவதால். இதில் ஒரு சுயநலமும் உண்டு. கர்நாடகா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் செய்யும் சேவை தமிழகத்திலும் தொடரவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறேன். மேலும் விவரங்களுக்கு இங்கே

நான் அழைக்கும் மூன்று பதிவர்கள்

1. ஏதாவது செய்யணும் பாஸ் புகழ் நர்சிம்.

2. அமிர்தவர்ஷிணி அம்மா.

3. தமிழ்மணம் இன்றி கொஞ்சம் வெளியில், SG. நீங்கள் ஆங்கிலத்திலும் எழுதலாம்.

ஒரு வேண்டுகோள் :

பதிவு எழுதியவுடன் அந்த பதிவின் சுட்டியை இந்த முகவரிக்கு அனுப்பினால் weshoulddosomething@googlemail.com மிகவும் உதவியாக இருக்கும். இது கட்டயாம் இல்லை. இதன் ஒரே நோக்கம். ஒரு இரண்டு மாதம் சென்று, இந்த அனைத்து விவரங்களையும் மொத்தமாக ஒரே இடத்தில் சேர்க்கும் யோசனை உள்ளது.

அன்புடன்
எஸ். கே.