SK
இந்த பதிவு கொஞ்சம் மொக்கையாக தான் இருக்கும். இது எப்பொழுதும் எனக்கும் என் மனதுக்கும் நடக்கும் ஒரு உரையாடல். எப்பொழுதும் அது வெளியில் வருவது இல்லை. எனக்குள் நான் எப்போதும் செய்யும் சுய பரிசோதனை பற்றி இங்கே பதிந்து, அதை அடுத்த முறை சரி பார்க்கலாம் என்று ஒரு யோசனை. எவ்வளவு தூரம் சரியாக வருகிறது என பார்க்கலாம்.

1. உணவு : மூன்று வேலை சரியான உணவு உண்ணும் பழக்கம். இந்த பழக்கம் விட்டு பத்து வருடம் ஆகப்போகிறது. நடுவில் சில நாட்கள் சரி செய்ய முயன்று பிறகு அதே நிலைக்கு சென்றாயிற்று. இதை சரி செய்ய வேண்டும். வேலை நிறைய இருக்கும் என்று எதிர் பார்க்கிற அடுத்த சில மாதங்கள் இவ்வாறு தொடர்வது சரியாக இருக்காது.

முதல் கட்ட நடவடிக்கை தொடங்கியாயிற்று. காலை உணவுக்கு முசிலி வாங்கியாயிற்று. மதியமும், இரவுக்கும் இனி சரியாக உணவு தயார் செய்ய நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.

2. யோகா, தியானம் போன்ற ஏதோ ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

3. 15 மாதங்களுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். அதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.

4. அஞ்சு வருடம் ஆச்சு ஐரோப்பா வந்து. இன்னும் பல இடங்கள் சுத்தி பார்க்கப்படாமல் இருக்கு. அதற்கு உண்டான ஆயத்தங்கள் செய்ய வேண்டும். இந்த வருஷத்துல எப்படியும் ஒரு அஞ்சு நாடாவது போயிடு வந்திடனும்.

5. பத்தாவது வரைக்கும் இருந்த கோவம் எல்லாம் அம்மா சொல்லி சொல்லி கம்மி ஆகி இப்போ ஒண்ணுமே இல்லாம போயிடிச்சு. கொஞ்சம் கோவப்பட பழகனும். அளவுக்கு அதிகமான பொறுமை என்னைய ரொம்பவே விவஸ்தை இல்லாம செஞ்சுடுதோன்னு ஒரு எண்ணம்.

6. பேசுறது பொதுவாக, ஆலோசனை சொல்றது - இது ரெண்டையும் கம்மி பண்ணனும்.

7. உலகத்துல கஷ்டபடுற எல்லாருக்கும் நம்மால உதவ முடியும் அப்படிங்கற எண்ணத்தை ஒழிக்கணும். நம்மால என்ன முடியும் அப்படிங்கறதை கொஞ்சம் யோசிச்சு உணர்ச்சி வசப்படாம இருக்க முயற்சி செய்யணும்.

8. சினி செய்திகள் படிக்கறதை கம்மி செய்யணும்.

9. இப்போ கத்துகிட்டு இருக்கற கீ போர்டை இன்னும் நேரம் எடுத்து பழகனும்.

10. பதிவுகள்/செய்திகள் எதுவுமே வேலை நேரத்துல படிக்கவோ எழுதவோ கூடாது.

11. வேலை நேரத்தில் தொலைபேசுவது/ சாட் செய்வது ரெண்டையும் கம்மி பண்ணிட்டேன். இருந்தாலும் இன்னும் கம்மி பண்ணனும்.

12. ஏணிப்படிகள் பதிவு ரொம்ப நாளா ஒண்ணுமே எழுப்படாம இருக்கு. எழுதி தர்றேன்னு சொன்ன நண்பர்களுக்கு திரும்ப நினைவூட்டி எழுதி வாங்கணும்.

13. ஆங்கிலத்துல வேற பதிவு எழுதனும்னு ஒரு எண்ணம் வந்து இருக்கு. நமக்கு இருக்கற புலமைக்கு இது வேறையா.. :( பாக்கலாம் என்ன முடியுது சொல்லி. இந்த பதிவுகளையே சரியா எழுத பழகனும்.

14. சில விஷயங்கள் செய்யக்கூடாதுன்னு முடிவு எடுத்த அப்பறம், திரும்ப அதை எந்த காரனும் கொண்டும் செய்ய கூடாது. இரக்கம், பச்சாதாபம், அன்பு, எதுவுமே வர கூடாது :( :)

15. புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கணும். இந்தியாவில் இருந்து பார்சல் வந்துகிட்டே இருக்கு :)
*************************
இதே பதிவை ஜூன் மாதம் முப்பது தேதிக்குள்ள திரும்ப படிச்சு எவ்வளவு சரியா செஞ்சு இருக்கேன்னு பாக்கணும்.

அன்புடன்
எஸ். கே.