SK
மார்ச் மாதம் எழுதின இந்த பதிவை தொடர்ந்து அதனுடைய தொடர்ச்சி.

1. உணவு : மூன்று வேலை சரியான உணவு உண்ணும் பழக்கம். இந்த பழக்கம் விட்டு பத்து வருடம் ஆகப்போகிறது. நடுவில் சில நாட்கள் சரி செய்ய முயன்று பிறகு அதே நிலைக்கு சென்றாயிற்று. இதை சரி செய்ய வேண்டும். வேலை நிறைய இருக்கும் என்று எதிர் பார்க்கிற அடுத்த சில மாதங்கள் இவ்வாறு தொடர்வது சரியாக இருக்காது.
முதல் கட்ட நடவடிக்கை தொடங்கியாயிற்று. காலை உணவுக்கு முசிலி வாங்கியாயிற்று. மதியமும், இரவுக்கும் இனி சரியாக உணவு தயார் செய்ய நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.
- செய்ய முயற்சி செய்து ஒரு மாதம் சரியா போச்சு. அப்பறம் பழைய குருடி கதவை தரடி கதை தான் போகுது. மீண்டும் தொடங்கணும்.

2. யோகா, தியானம் போன்ற ஏதோ ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- ஒண்ணும் பண்ணலை. :( திரும்ப இந்த மாதத்திற்கு எடுத்து செல்ல படுகிறது.

3. 15 மாதங்களுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். அதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.
- நகருது ஆனா நகரமாட்டேங்குது. இன்னும் 12 மாதம் தான்.

4. அஞ்சு வருடம் ஆச்சு ஐரோப்பா வந்து. இன்னும் பல இடங்கள் சுத்தி பார்க்கப்படாமல் இருக்கு. அதற்கு உண்டான ஆயத்தங்கள் செய்ய வேண்டும். இந்த வருஷத்துல எப்படியும் ஒரு அஞ்சு நாடாவது போயிடு வந்திடனும்.
- வெற்றிகரமா பராக் (prag ), அம்ஸ்டேர்டம் (Amsterdam) போயிட்டு வந்தாச்சு. இன்னும் சில பல நாடுகள் வரிசைல இருக்கு. நல்லது. பாக்கலாம்.

5. பத்தாவது வரைக்கும் இருந்த கோவம் எல்லாம் அம்மா சொல்லி சொல்லி கம்மி ஆகி இப்போ ஒண்ணுமே இல்லாம போயிடிச்சு. கொஞ்சம் கோவப்பட பழகனும். அளவுக்கு அதிகமான பொறுமை என்னைய ரொம்பவே விவஸ்தை இல்லாம செஞ்சுடுதோன்னு ஒரு எண்ணம்.
- சிறு கோவத்தினால் வந்த ரகளைய பாத்திட்டு என்ன ஆனாலும் சரி இனி கோவமே கூடாதுன்னு முடிவுபண்ணிட்டேன்.

6. பேசுறது பொதுவாக, ஆலோசனை சொல்றது - இது ரெண்டையும் கம்மி பண்ணனும்.
- அதிகம் தான் ஆகி இருக்கு. கடந்த ஒரு மாதமா கம்மி பண்ணி இருக்கேன். ஆகிடும்.

7. உலகத்துல கஷ்டபடுற எல்லாருக்கும் நம்மால உதவ முடியும் அப்படிங்கற எண்ணத்தை ஒழிக்கணும். நம்மால என்ன முடியும் அப்படிங்கறதை கொஞ்சம் யோசிச்சு உணர்ச்சி வசப்படாம இருக்க முயற்சி செய்யணும்.
- உணர்ச்சிவசப்படாம முடிவு எடுக்க பழகிக்கிட்டு இருக்கேன். நல்ல படியாவே போய் கிட்டு இருக்கு.

8. சினி செய்திகள் படிக்கறதை கம்மி செய்யணும்.
- பண்ணியாச்சு.

9. இப்போ கத்துகிட்டு இருக்கற கீ போர்டை இன்னும் நேரம் எடுத்து பழகனும்.
- ஒரு அளவுக்கு நல்லபடியா வருது. இன்னும் நிறைய நேரம் ஒதுக்கணும்.

10. பதிவுகள்/செய்திகள் எதுவுமே வேலை நேரத்துல படிக்கவோ எழுதவோ கூடாது.
11. வேலை நேரத்தில் தொலைபேசுவது/ சாட் செய்வது ரெண்டையும் கம்மி பண்ணிட்டேன். இருந்தாலும் இன்னும் கம்மி பண்ணனும்.
- இது ரெண்டுத்துக்கும் ஒரே பதில் தான். பாதிக்கு மேல கம்மி பண்ணிட்டேன். அடுத்த இரண்டு மாசத்துல முழுசா கம்மி ஆகிடும். பத்தாவதுல ஒரு மாற்றம். தமிழ் பதிவுகள் வேலை நேரத்துல இல்லை, படிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். அது தான் மனசுக்கும், நேரத்துக்கும் நல்லது. அடி ரொம்ப பலம்.

12. ஏணிப்படிகள் பதிவு ரொம்ப நாளா ஒண்ணுமே எழுப்படாம இருக்கு. எழுதி தர்றேன்னு சொன்ன நண்பர்களுக்கு திரும்ப நினைவூட்டி எழுதி வாங்கணும்.
- 0 % முன்னேற்றம். வெற்றியே இல்லை.

13. ஆங்கிலத்துல வேற பதிவு எழுதனும்னு ஒரு எண்ணம் வந்து இருக்கு. நமக்கு இருக்கற புலமைக்கு இது வேறையா.. :( பாக்கலாம் என்ன முடியுது சொல்லி. இந்த பதிவுகளையே சரியா எழுத பழகனும்.
- இந்த எண்ணத்தை கை விட்டுட்டேன்.

14. சில விஷயங்கள் செய்யக்கூடாதுன்னு முடிவு எடுத்த அப்பறம், திரும்ப அதை எந்த காரணம் கொண்டும் செய்ய கூடாது. இரக்கம், பச்சாதாபம், அன்பு, எதுவுமே வர கூடாது :( :)
- இது முடியலை. மீண்டும் அதே முயற்சி இன்றில் இருந்து தொடங்கும்.

15. புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கணும். இந்தியாவில் இருந்து பார்சல் வந்துகிட்டே இருக்கு :)
- ஆரம்பிச்சாச்சு. மெதுவா முன்னேற்றம் இருக்கு.
*************************
இதே பதிவை செப்டம்பர் மாதம் முப்பது தேதிக்குள்ள திரும்ப படிச்சு எவ்வளவு சரியா செஞ்சு இருக்கேன்னு பாக்கணும்.

அன்புடன்
எஸ். கே
SK
ஜனவரி 14 2005:

அன்று பொங்கல். நான் இந்தியாவில் இருந்து ஜெர்மனி வந்து நான்கு மாதம் கூட முழுமை அடியாத நேரம். இந்தியாவில் பொங்கல். 2005 'இல் இப்போ உள்ளது போல இந்தியாவிற்கு பேச voip வசதி இல்லை. பேசுவதற்கான அட்டை வாங்கி, தொலைபேசியில் இருந்து அழைத்து பேச வேண்டும். நான் இருந்த ஊர், முன்னாள் கிழக்கு ஜெர்மனி பகுதியை சேர்ந்தது. அன்று இந்தியாவிற்கு தொலைபேச தனியாக நகர மத்திய பகுதிக்கு சென்று இருந்தேன்.

தொலைபேசுவதர்க்கு கடையில் நுழைந்தும் விட்டேன். ஆனால் அங்கு செல்லும் போதே ஒரு வித சலசலப்பு இருப்பதை உணர முடிந்தது. நான் கடையில் நுழைந்த பத்து நிமிடத்தில் எல்லாம் அந்த பகுதியே ஒரு போர்க்களம் போல காட்சி தந்தது என்றால் அது மிகையே இல்லை. அன்று, உலகப்போரில் கிழக்கு ஜெர்மனி பகுதியின் மீது குண்டு வீசப்பட்டதின் நினைவாக வலது சாரிகள் (Neo -Nazi 's) ஒரு ஊர்வலம் நடத்துவது பிறகு தான் தெரிந்தது. அவர்கள் நடத்தும் ஊர்வலத்துக்கு எதிராக இடது சாரிகள் இன்னொரு திக்கில் இருந்து ஊர்வலம் நடத்துகிறார்கள். இரண்டுக்கும் நடுவில் போலீஸ். புகை குண்டு வீச்சும், பீர் பாட்டில்களால் அடியும், துப்பாக்கி சூடும், கண்ணீர் புகையும், அனைவரும் அனைவரையும் அடித்து கொண்டு இருந்தார்கள். எனக்கு நேரடியாக 'பாம்பே' படம் பார்த்த ஒரு பீலிங்க்ஸ் வந்தது. இது எல்லாம் அடங்குவதற்கு இரண்டு மணி நேரம் பிடித்தது. இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த எனக்கு, ஒரு வித பீதி இருந்தது என்று நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும்.

இந்த ஒரு நிகழ்ச்சியின் தாக்கம், ஜெர்மனியை விட்டு கிளம்பி விடலாமா என்று கூட யோசிக்க வைத்தது. மேலும், நான் முன்பு இருந்த ஊர் மீது ஒரு பயம், பயம் கலந்த வெறுப்பு இன்று வரை உள்ளது. இந்த நினைவுகள் மட்டும் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. இருக்கிறது. இதனாலேயே நான் அந்த ஊரில் எனக்கு தேவையான இடங்களை தவிர வேறு எங்கும் சென்றது கூட இல்லை என்று சொல்லலாம். ஜெர்மனியில், ஐரோப்பாவில் பல இடங்களுக்கு நான் சுற்றி இருந்தாலும், அந்த ஊரில் சுற்றுலா பயணிகளுக்கு என்று உண்டான இடங்களுக்கு நான் சென்றது இல்லை.

சரி இதை என் இப்போ சொல்றே ??

மே 1 :

உழைப்பாளர்கள் தினம். பெர்லின் நகரில் இந்த தினம் ஒரு சிறப்பு உண்டு. இது காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆம். நான் மேலே அனைத்தும், ஜேர்மன் மக்களும், போலிசும் ஒத்திகை பார்க்கும் நாள் இது. அது என்ன கருமமோ, வருடா வருடம் இந்த காட்சிகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன. மேலும் விவரம் அறிய ஆசை உள்ளவர்கள், யு tube சென்று, 'Berlin , Kreuzberg , may 1' என்று தந்து அனைத்து கண்கொள்ளா காட்சிகளையும் பார்த்து கொள்ளவும்.

இதோ இன்று மெட்ரோவில் வரும் போது, 6000 போலீஸ் கொண்ட படை ஜெர்மனியில் குவிக்கப்பட்டு உள்ளதாக செய்தி படித்தேன். ஆகவே பெர்லின் இருக்கும் நண்பர்கள், நாளை பின் நேரத்தில், Kreuberg , prenzlauer berg போன்ற பகுதியை தவிர்த்தல் நலம்.

அன்புடன்
எஸ். கே.
SK
இந்த பதிவு கொஞ்சம் மொக்கையாக தான் இருக்கும். இது எப்பொழுதும் எனக்கும் என் மனதுக்கும் நடக்கும் ஒரு உரையாடல். எப்பொழுதும் அது வெளியில் வருவது இல்லை. எனக்குள் நான் எப்போதும் செய்யும் சுய பரிசோதனை பற்றி இங்கே பதிந்து, அதை அடுத்த முறை சரி பார்க்கலாம் என்று ஒரு யோசனை. எவ்வளவு தூரம் சரியாக வருகிறது என பார்க்கலாம்.

1. உணவு : மூன்று வேலை சரியான உணவு உண்ணும் பழக்கம். இந்த பழக்கம் விட்டு பத்து வருடம் ஆகப்போகிறது. நடுவில் சில நாட்கள் சரி செய்ய முயன்று பிறகு அதே நிலைக்கு சென்றாயிற்று. இதை சரி செய்ய வேண்டும். வேலை நிறைய இருக்கும் என்று எதிர் பார்க்கிற அடுத்த சில மாதங்கள் இவ்வாறு தொடர்வது சரியாக இருக்காது.

முதல் கட்ட நடவடிக்கை தொடங்கியாயிற்று. காலை உணவுக்கு முசிலி வாங்கியாயிற்று. மதியமும், இரவுக்கும் இனி சரியாக உணவு தயார் செய்ய நேரம் ஒதுக்கப்பட வேண்டும்.

2. யோகா, தியானம் போன்ற ஏதோ ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

3. 15 மாதங்களுக்குள் படிப்பை முடிக்க வேண்டும். அதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் துரிதப்படுத்த வேண்டும்.

4. அஞ்சு வருடம் ஆச்சு ஐரோப்பா வந்து. இன்னும் பல இடங்கள் சுத்தி பார்க்கப்படாமல் இருக்கு. அதற்கு உண்டான ஆயத்தங்கள் செய்ய வேண்டும். இந்த வருஷத்துல எப்படியும் ஒரு அஞ்சு நாடாவது போயிடு வந்திடனும்.

5. பத்தாவது வரைக்கும் இருந்த கோவம் எல்லாம் அம்மா சொல்லி சொல்லி கம்மி ஆகி இப்போ ஒண்ணுமே இல்லாம போயிடிச்சு. கொஞ்சம் கோவப்பட பழகனும். அளவுக்கு அதிகமான பொறுமை என்னைய ரொம்பவே விவஸ்தை இல்லாம செஞ்சுடுதோன்னு ஒரு எண்ணம்.

6. பேசுறது பொதுவாக, ஆலோசனை சொல்றது - இது ரெண்டையும் கம்மி பண்ணனும்.

7. உலகத்துல கஷ்டபடுற எல்லாருக்கும் நம்மால உதவ முடியும் அப்படிங்கற எண்ணத்தை ஒழிக்கணும். நம்மால என்ன முடியும் அப்படிங்கறதை கொஞ்சம் யோசிச்சு உணர்ச்சி வசப்படாம இருக்க முயற்சி செய்யணும்.

8. சினி செய்திகள் படிக்கறதை கம்மி செய்யணும்.

9. இப்போ கத்துகிட்டு இருக்கற கீ போர்டை இன்னும் நேரம் எடுத்து பழகனும்.

10. பதிவுகள்/செய்திகள் எதுவுமே வேலை நேரத்துல படிக்கவோ எழுதவோ கூடாது.

11. வேலை நேரத்தில் தொலைபேசுவது/ சாட் செய்வது ரெண்டையும் கம்மி பண்ணிட்டேன். இருந்தாலும் இன்னும் கம்மி பண்ணனும்.

12. ஏணிப்படிகள் பதிவு ரொம்ப நாளா ஒண்ணுமே எழுப்படாம இருக்கு. எழுதி தர்றேன்னு சொன்ன நண்பர்களுக்கு திரும்ப நினைவூட்டி எழுதி வாங்கணும்.

13. ஆங்கிலத்துல வேற பதிவு எழுதனும்னு ஒரு எண்ணம் வந்து இருக்கு. நமக்கு இருக்கற புலமைக்கு இது வேறையா.. :( பாக்கலாம் என்ன முடியுது சொல்லி. இந்த பதிவுகளையே சரியா எழுத பழகனும்.

14. சில விஷயங்கள் செய்யக்கூடாதுன்னு முடிவு எடுத்த அப்பறம், திரும்ப அதை எந்த காரனும் கொண்டும் செய்ய கூடாது. இரக்கம், பச்சாதாபம், அன்பு, எதுவுமே வர கூடாது :( :)

15. புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கணும். இந்தியாவில் இருந்து பார்சல் வந்துகிட்டே இருக்கு :)
*************************
இதே பதிவை ஜூன் மாதம் முப்பது தேதிக்குள்ள திரும்ப படிச்சு எவ்வளவு சரியா செஞ்சு இருக்கேன்னு பாக்கணும்.

அன்புடன்
எஸ். கே.
SK
என்றோ எப்பொழுதோ ஏதோ ஒரு மனநிலையில் எழுதியது. இன்று மீண்டும் என்னை தூசி தட்டிப்பார்த்து.

என்னை உன்னுள் கண்டேன்
என்னுடைய கோபம்
என்னுடைய வேகம்
என்னுடைய பொறுமை
என்னுடைய அழுகை
என்னுடைய தனிமை
என்னுடைய வலி
என்னுடைய அன்பு .....
யார் சொன்னது - "லைக் போல்ஸ் ரிபல்ஸ்" என்று.

பின் குறிப்பு : பிறகு காலம் ஊர்ஜிதம் செய்தது, லைக் போல்ஸ் ரிபல்ஸ் செய்யவில்லையெனில் செய்வ வைப்பேன் என்று.

அன்புடன்
எஸ். கே.
SK
பொங்கலுக்கு அம்மாவிடம் போனில் பேசும் போது

'ஹலோ அம்மா, நான் இந்த சனி ஞாயிறு ஸ்டாக்ஹோம் போறேன். ஆமா ரெண்டு நாள் தான்'

'சரி பத்திரமா போயிட்டு வா. அங்கே என்னடா நல்ல இருக்கும். ஏதாவது நினைவா வாங்கிட்டு வா'

'சரிம்மா. திரும்பி வந்த அப்பறம் பேசறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னுடைய ஜேர்மன் கிளாசில்.

'இந்த சனி ஞாயிறு ஸ்டாக்ஹோம் போறேன். அங்கே என்னது நல்லா இருக்கும்'

அனைவரும் ஒரு மனதாக சிரித்து கொண்டே, Blonde Girls.

அஆஆஹா அம்மா சரியா தான் சொல்லி இருக்காங்க. நான் வேற அம்மா சொல்லை தட்டாத பிள்ளை ஆச்சே. சரி விடு எப்புடி இருக்குனு போயி பாத்துடலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பனியினால் உறைந்த ஆறுகள், ஏரிகள். மூன்று தீவுகளை இணைத்து ஒரு நகரம். பழைய கட்டிடடங்கள், அமைதியான சாலைகள், எங்கும் பனி, நெரிசல் இல்லாத நகரம். இன்னும் அப்படியே நினைவில். மீண்டும் செல்ல வேண்டும் என்ற நினைவு எப்போதுமே மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. சிரித்த முகத்துடன் அனைவரும், ஒரு தோழமையை கொண்ட பேச்சு. நண்பர்கள் சொன்ன போல புள்ளைங்கள பத்தி சொல்லவே தேவை இல்லை. எனக்கும் பின்னணியில் ஒரு பாட்டு ஓடிகிட்டே இருந்தது, 'கட்டுனா உன்னைய கட்டனுண்டி' அப்படின்னு. ம்ம்ம் என்ன பண்ண. இல்லை இல்லை... எனக்கு இல்லை. சொக்கா. சொக்கா'.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மிகவும் புகழ் பெற்ற சிட்டி ஹால் எனப்படும் இடத்திற்கு சென்றோம். அங்கு தான் நோபிள் பரிசு கொடுத்தவுடன், இரவு விருந்தும், அனைத்து விருந்தினர்களும் டான்ஸ் ஆடும் இடமும் உள்ளது. அதாவது அது ஸ்டாக்ஹோம் நகரத்திற்கான பார்லிமென்ட் அப்படின்னு வெச்சுகோங்க. அதை ஒரு டூரிஸ்ட் கைடுடன் சுத்தி பாத்தோம். ஒரு பெரிய நீண்ட அரை. அங்கு சுவரில் அழகான ஓவியம். அதனருகே இரண்டு தூண்கள். ஒன்று மொழக்கட்டினு வழ வழன்னு இருந்தது, இன்னொன்னு எட்டு பக்கங்களை கொண்ட ஒரு தூண். அந்த எடத்துல அவர் விளக்கம் தர்றாரு.

'இங்கே என் இந்த ரூம் புல்லா ரெண்டு தூண் வெச்சு இருக்காங்க தெரியுமா ?'

'தெரியாது' இது நாங்க.

'ஆணையும் பொண்ணையும் போல தான் இந்த ரெண்டு தூணும்'

'ஓஹோ'

'இது எது ஆண் தூண். எது பெண் தூண். சொல்லுங்க. எப்படி கண்டு புடிப்பீங்க'

'தெரியலையே.'

'இங்கே இதோ மொழு மொழுன்னு இருக்கு இல்லையா. அது ஆண் தூண். ஆண் மூளை வேலை செய்யறா போல. ஒன்னே ஒன்னு தான் யோசிக்கும்'

'ஓஹோ'

'இந்த எட்டு பக்கம் வெச்சு இருக்கு இல்லையா. அது பெண் தூண். ஒரு நிமிசத்துல எட்டு விதமா யோசிக்கும். எப்போ என்ன மாறும்னு யாருக்குமே தெரியாது'

'ஆஹா, உங்க ஊரு ஆட்கள் ஞானியா' (இது நான் மனதுக்குள்).
'உங்க ஊருலயும் இப்படி தானா.' நான் அவரிடம்.

'அது யுனிவர்சல் கண்ணு' பின்னாடி இருந்து ஒரு அனுபவஸ்தர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நோபல் முசீயம் போய இருந்தோம். அண்ணன் வெங்கடராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு செய்தி. 'அண்ணே. அங்கே உங்களை இந்தியன்னு போட்டு இருக்கு. அது என்னனு கொஞ்சம் கவனிங்க. பயபுள்ளைங்க மேல ஒரு கேஸ் போடுங்க சொல்றேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஸ்டாக்ஹோமில் இருந்து ஹெல்சிங்கி வரை, 18 மணி நேரம் செல்லும் கப்பல் பயணம் செல்ல முடியவில்லை. இதுக்காகவும், அப்பறம் முன்னமே சொன்ன அம்மணிகளை திரும்ப பாக்கறதுக்காகவும் இன்னொரு முறை ஸ்டாக்ஹோம் போயே தீரணும்னு இருக்கேன். ஹி ஹி ஹி.

அன்புடன்
எஸ். கே.
SK
என்னோட பன்னிரெண்டாவது டியூஷன் வாத்தியார் சின்ன சின்ன நகைச்சுவை துணுக்கும், விடயங்களும் சொல்லிக்கொடுப்பார். அந்த டியூஷன் படிக்கும் போது உட்கார இருக்கிற எடத்துக்கு மேல மாணவர்கள் இருப்பாங்க. நெருக்கிகிட்டு தான் ஒக்காந்து இருப்போம். இப்படியே உட்காந்து இருக்கறது கஷ்டமா இருக்கவே, ஒரு நாள் ஒரு பையன் அவர் கிட்டே,

'சார், ஒட்கார எடம் பத்த மாட்டேங்குது. ஒரு பெஞ்ச் அதிகமா இருந்தா நல்லா இருக்கும்'
அப்படின்னு சொன்னான். அதுக்கு ஒடனே அவரு,
'ஒரு வாரம் பொறுத்துக்க தம்பி' அப்படின்னு பதில் சொன்னாரு.
இவன் திரும்பி (திரும்பின்னா திரும்பி இல்லீங்க, மீண்டும் அவரிடம்)
'ஏன் சார், ஒரு வாரத்துல புது பெஞ்ச் வருமா' அப்படின்னான். அவர் சிரிச்சுகிட்டே,
'இல்லை தம்பி, இதுவே உங்களுக்கு பழகிடும்' அப்படின்னு சொன்னாரு?

:-) இது தான் உண்மை. எல்லாமே பழகி போயிடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சில விடயங்களை நாம் தினமும் குறிப்பிட்ட காலங்களுக்கு செய்து பழகும் போது, அதுவே பழக்கம் ஆகிவிடுகிறது. இதை பற்றி பல ஆராய்ச்சிகளும் செய்து உள்ளார்கள். முதன் முதலாக ஆராய்ச்சியாக மக்ஸ்வெல் மல்ஸ் என்பவர் இவ்வாறு ஒரு விடயம் பழக்கமாக மாறுவதற்கு இருபத்தி ஒன்று நாட்கள் தேவை என்று கூறியுள்ளார். இதை பற்றி பல குறிப்புகளும் உள்ளன. சிலர் 66 நாட்கள் தேவை என்றும் கூறி உள்ளனர். எந்த விடயமும் சில நாட்கள் தொடர்ந்தோ, சில முறை தொடர்ந்து நடக்கும் போது பழகி விடுகிறது. நல்ல விடயம் பழகுவதற்கு அதிக நாட்களும், கெட்ட விடயம் பழகுவதற்கு குறைந்த நாட்களும் தேவை படுகிறது. நல்லது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போன மாசம் வரைக்கும் இந்த பனிக்காலம் எப்படி இருக்குமோ அப்படின்னு ஒரு பயம் இருந்திச்சு. டிசம்பர் கடைசி வாரம் ஒரு சனி ஞாயிறு -15 போச்சு. அப்போ கொட்ட ஆரம்பிச்ச பனி கொட்டுது கொட்டுது கொட்டிகிட்டே இருக்கு. இப்போ தினமும் -3 , -4 தான். இதுக்கு எல்லாம் இப்போ நாங்க யோசிக்கறது இல்லை. ஏன்னா, பழகிப்போச்சு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போன வாரத்துல இருந்து ஒரு செய்தி. ஒரு போலீஸ் அதிகாரிய வெட்டி இருக்காங்க. அதை மினிஸ்டர் எல்லாம் பாத்து இருக்காங்க. உதவி ஏதும் செய்யலை. இன்னும் தமிழ்நாட்டு அரசு கிட்டே இருந்து எந்த வித அறிக்கையோ, வேலை நேரத்தில் உயிர் இழந்த போலீஸ் அதிகாரிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையோ எடுக்கலை. குறிப்பா முதல் அமைச்சர் கிட்டே இருந்து எந்த பதிலும் வரலை.
எனக்கு இதை கேட்ட ஒடனே சிரிப்பு சிரிப்பா இருந்திச்சு. என்னவோ ஜக்குபாய் படம் நெட்ல வந்துட்ட மாதிரியும், 'அப்பாஆஅ' (சித்தி மாதிரி படிக்கவும் ) அப்படின்னு கூப்பிடற ராதிகா அவர்கள் அழுவுற மாதிரியும், இல்லை பயபுள்ளைங்க குதிக்கறாங்க. போனது ஒரு போலீஸ் உசுரு. நீங்க எல்லாம் வேலைக்கு சேரும் போது அதுக்கு தானையா சேந்தீங்க. நாங்க திருட்டு வி. சி. டி. ஒழிக்கரதுல பிசியா இருக்கோம். நீங்க பாட்டுக்கு உசுரு போச்சு, ம... போச்சு அப்படின்னு வந்து சொன்னா. எங்களுக்கு குஷ்புவின் அழகான தமிழில் தொகுத்து வழங்கி நமிதா டான்ஸ் ஆட நடக்கும் கலை விழா பாக்க வேண்டியது வேற பாக்கி இருக்கு. சின்ன புள்ளைத்தனமா கூவிக்கிட்டு.

இதுவும் பழகி போச்சு தலைவா. அடுத்த ரஜினி படம் வந்திட்டா எங்களுக்கு அது போதும். எவன் உசுரு போனா எனக்கு என்ன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாள் 1 : ருசிகா என்ற மாணவி 19 வருடத்துக்கு முன் ஒரு போலீஸ் அதிகாரியால் மானபங்க படுத்த பட்டு உள்ளார். அதை குறித்த அறிக்கை.
நாள் 2 : ஏன். டி. திவாரி சில பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக வீடியோ வெளியானது. அதை பற்றிய ஒரு ஆய்வு (??) அறிக்கை.
நாள் 3 : ஹைதராபாத்தில் கலவரம். ஒரு செய்தி சானல் ராஜசேகர் ரெட்டி மரணத்தை குறித்த தவறான செய்தி வெளியிட்டதால் கலவரம்.
நாள் 4 : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் சண்டை.
நாள் 5 : இது போல உணர்ச்சி மிக்க செய்தி இல்லை..

நம்ம பொதுசனம் : என்ன அண்ணே, இன்னைக்கு ஒன்னும் சுவாரஸ்யமா செய்தி இல்லையா. சுவாரஸ்யமா செய்தி படிச்சே பழகி போச்சு அண்ணே.

வாழ்க பொதுசனம்.
வாழ்க பாரதம்.
வாழ்க அரசியல் வாதிகள்.
வாழ்க நமது ஜனநாயகம்.

'நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்'

என்றென்றும் அன்புடன்
எஸ். கே.