SK
ஆம். திரு. நர்சிம் அவர்கள் சொல்லி உள்ளது போல் 70% தாண்டிவிட்டோம். இன்னும் இருப்பது 30% மட்டுமே. இது மீண்டும் ஒரு நினைவுகூரல்.

மேலும் விவரமான திரு. நர்சிம் அவர்களின் பதிவு இங்கே.

உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் கவனத்திற்கு.

********
ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

ராஜாவின் தொலைபேசி :+966 508296293
நண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261

**********

சிங்கப்பூர்

கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721
ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775

அமெரிக்கா

இளா - +1 609.977.7767

இந்தியா

நர்சிம் - +91 9841888663

அமீரகம்

ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா

ராஜா - +966 508296293

ஜெர்மனி(&Europe)

E-mail : friends.sk@gmail.com

அன்புடன்
எஸ். கே.
SK
திருமதி. அனுராதா, பல பழைய பதிவர்களுக்கு அறிமுகம் ஆனவர். இன்று ஆகஸ்ட் 28 அவருடைய முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

கேன்சர் எனும் அரக்கனுடன் போராடியதோடு மட்டும் அல்லாமல் அவருடைய அனுபவங்கள் மற்றும் கேள்விகள் அனைத்தையும் பதிவாக எழுதி தன்னால் முடிந்த வரை விழிப்புணர்வை கொண்டு வரும் முயற்சியில் கடைசி வரை அயராது ஈடு பட்டவர்.

நான் முதலில் படித்து கண் கலங்க செய்த வலைப்பூ அவருடையது தான். நம்மாலும் இது போல் முடிந்த வரை ஏதேனும் உபயோகமாக எழுத முயற்சி செய்யலாம்.

அவருக்கு என்னுடைய அஞ்சலிகள்.

-எஸ். கே.
SK
நீ ஏன் எப்போ பாத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு ஏதோ நீ மட்டும் ஊரை காப்பத்த இருக்கறா போல எப்போ பாத்தாலும் ஒரு மாதிரி எழுதறே. சினிமா பத்தி, அரசியல் பத்தி எல்லாம் மொக்கை போடலாம்ல அப்படின்னு ஒரு புண்ணியவான் என்னைய பாத்து கேட்டு புட்டான் மக்கா. சும்மா இருப்பனா நான். இதோ.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கமல் திரை உலகத்துக்கு நடிக்க வந்து 50 வருஷம். காரு உடறாங்க, பஸ் உடறாங்க, விழா எடுக்கறாங்க. வாழ்த்துக்கள் கமல் சார்.

ஆனா எனக்கு ஒரு டவுட். 1959/60 ஆண்டில் களத்தூர் கண்ணம்மா வந்தது. அப்பறம் மூணு வருஷத்துல நாலு படம் நடிச்சு இருக்கார். 1963 அப்புறம் ஒன்பது வருஷம் எந்த படமும் வரலை. 1972 ல அடுத்த படம் வந்து இருக்கு. இப்படி நடுல கிட்டததட்ட ஒன்பது வருடம் எதுலையும் நடிக்கலை. அப்பறம் எப்படி அம்பது வருஷம் கொண்டாடுவாங்க. இது என்ன அநியாயமா இருக்கு. ஒருத்தர் கொழந்தையா ஒரு படத்துல நடிக்கறார், அப்பறம் இருபது வருஷம் கழிச்சு திரும்ப வந்து நடிக்கறார். அப்போ அவரும் சினிமாவுக்கு வந்து 25 வருஷம் ஆச்சு சொல்லலாமா. எனக்கும் புரியலை. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கோ மக்கா. கமல் ரசிகர்களே கோவிச்சுகாதீங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாங்க ரொம்ப எதிர் பார்த்த கந்தசாமி ஒரு மாதிரி ஆக்கி இருக்கு எங்களை. கமல் சார், உன்னைப்போல் ஒருவன் வருது. ஏதோ பாத்து பண்ணுங்க. நான் வேற ஹிந்தி 'A wednesday' பாத்து தொலைஞ்சுட்டேன். ரொம்ப யோசிச்சு எங்களை டெர்ரர் ஆக்கிடாதீங்க. புண்ணியமா போகும்.

கந்தசாமி நல்லா இருக்குன்னு ரஜினி சார் சர்டிபிகேட் கொடுத்து இருக்காராம். ஏதோ நல்ல இருந்தா சரி தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரித்திர புகழ் வாய்ந்த சந்திப்பு அகில உலக அட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் நம்ம ஊரு கில்லி விஜயும் சந்திச்சு இருக்காங்க. இனிமே நம்ம பதிவுகிலும் சரி, காங்கிரஸ் (என்னது எந்த காங்கிரசா??) ஆதரவாளர்களும் சரி வேட்டைக்காரன் ஹிட் ஆகும் வரை ஓய மாட்டாங்க. விஜய் சார் உங்களுக்கு ஒஹோன்னு எதிர் காலம் இருக்கு. வாழ்த்துக்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்வளவு முக்கியமான விஷயம் எல்லாம் இருக்கும் பொழுது

எவனுக்கு நல்லா தண்ணி கிடைச்சா நமக்கு என்ன, கிடைக்கலைனா நமக்கு என்ன. :(

சின்ன சின்ன புள்ளைங்க எல்லாம் இப்படி விலை போனா நமக்கு என்ன, போகலைன்னா நமக்கு என்ன :(

எவன் எவ்வளவு லஞ்சம் வாங்கினா நமக்கு என்ன, வாங்கலைன்னா நமக்கு என்ன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேண்டுகோள் : திரு சிங்கைநாதன் அவர்களுக்கு ஐரோப்பாவில் இருந்து உதவ விருப்பம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். அதை பற்றிய பதிவு இங்கே.

நாளை நடக்க இருக்கும் சிகிச்சை நல்ல படியாக அமைய என்னுடைய பிரார்த்தனைகள்.

அன்புடன்
எஸ். கே.
SK
ஒருத்தன் வெளிநாடு போறான் அப்படினாலே வீட்டுல எல்லாம் ஒரு வித சந்தோசம் கலந்த பயமா தான் இருக்காங்க. குறிப்பா அப்பா அம்மாக்களுக்கு. எங்கையாவது புள்ளை/பொண்ணு வெள்ளைகாறன கூட்டிகிட்டு வந்து கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுமோ அப்படின்னு. அதுவும் அம்மாக்கள் எல்லாம் புள்ளைங்க கிட்டே காந்திஜி கிட்டே அவுங்க அம்மா சத்தியம் வாங்கின மாதிரி வாங்கிட்டு தான் விமானம் ஏறவே அனுமதி தர்றாங்க.

வெளிநாட்டுகாரங்க அப்படினா அவ்வளவு தானா. சும்மா தண்ணி அடிச்சிட்டு, வேணும் பொழுது வேண்டிய பொண்ணுங்க கூட சுத்திகிட்டு. அதையும் தாண்டி பல நல்ல விடயங்கள் இருக்கு. குறிப்பா நான் ஜெர்மனில இந்த மக்கள் கிட்டே பாத்தா பல நல்ல விடயங்கள் அப்படின்னு எனக்கு தோணினது தான் இன்றைய மொக்கை.

இதையே இங்கே SG அவுங்க ஆங்கிலத்துல பிரிச்சு மேஞ்சுடாங்க. இருந்தாலும் சும்மா என்னுடைய சில கருத்துக்களை இங்கே சொல்லி இருக்கேன்

1. நேரம் தவறாமை :

இந்த விடயத்துல ஜெர்மன்காரங்க எல்லாரும் ஒத்தாபோல இருப்பாங்க. பத்து மணி ஒரு மீட்டிங் சொன்னா அது பத்து. 10:01 கூட கிடையாது. அதுக்கான நேரம் சரியா ஒதுக்கி இருப்பாங்க. ஒரு நிமிஷம் கூட போனாலும் ஏதோ போதைக்கு அடிமை ஆனவங்க நடுங்கற போல நடுங்க ஆரம்பிச்சுடுவாங்க.

ஒரு முறை நான் பாஸ் கூட பேசறதுக்கு நேரம் கேட்டு போய் இருந்தேன். பத்து மணிக்கு வர சொல்லி இருந்தாரு. நான் போனது 09:58. உள்ள வாங்க சொல்லிட்டு, என்னைய உட்கார சொல்லிட்டு நேரத்தை பாத்திட்டு நீங்க ரெண்டு நிமிஷம் சீக்கரம் வந்து இருக்கீங்க. உட்காருங்க வந்துடறேன், அப்படின்னு சொல்லிட்டு சரியா பத்து மணிக்கு பேச வந்தாரு. அடிங்க அப்படின்னு நினைச்சுகிட்டேன்.

ரெயிலா இருக்கட்டும், பேருந்து வர்ற நேரமா இருக்கட்டும் சரியா வரும். இது இவங்க ரத்ததுலையே ஊறி போய் இருக்குன்னு தான் நினைக்குறேன்.இந்த பழக்கம் மட்டும் வந்துடிச்சுன்னாலே நாம எல்லாம் எங்கயோ போய்டலாம்.

2. ரூல்ஸ் ராமனுஜம்ஸ் :

எல்லாருமே ரூல்ஸ் அப்படின்னு ஒண்ணு சொல்லிட்டா அதை அப்படி மதிப்பாங்க. இரவு பதினோரு மணிக்கு ஒரு வேலை ரோட்ல சிக்னல் இருந்து, செகப்பா இருந்து, அங்கே கண்ணுக்கு தென்படற வரைக்கும் ஆள் இல்லாட்டியும் நின்னு தான் போவாங்க. அடப்பாவிகளா அதான் எவனும் வரலையே போனா என்னடா.. ம்ம்ம் ரூல்ஸ் இஸ் ரூல்ஸ்.

3. வேலை செய்யும் முறை :

இவங்க வேலை செய்யற முறைய மட்டும் நாம பின்பற்ற ஆரம்பிச்சா நாம எங்கயோ போய்விடலாம். சரியா எட்டு மணி நேரம் வேலை. நேரத்துக்கு சாப்பாடு, சரி அளவான காபி, வித விதமான டி.

அதுவும் ஒரு வேலை தெரியும் அப்படின்னு சொன்னா சரியா அவுங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். கம்ப்யூட்டர் அப்படிங்கறத கண்ணால மட்டும் பாத்திட்டு நான் கம்ப்யூட்டர் இஞ்சினீர் அப்படின்னு சொல்லமாடாங்க.

வேலை செய்யற முறைக்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா, ஒரு முறை என்னோட ரெயில் டிக்கெட் கான்செல் செஞ்சிட்டு திரும்ப வேற நாளைக்கு புக் பண்ண போய் இருந்தேன். அவுங்க கிட்டே போய் 'அம்மணி, இதை கான்செல் பண்ணி இந்த தேதிக்கு புக் பண்ணி கொடுங்க சொன்னேன்'.

'தம்புடு, இப்படி அவசர பட்டா நடக்காது. ஒண்ணு ஒண்ணா சொல்லு. இப்போ சொல்லு எதை கான்செல் பண்ணனும்.' அப்படின்னு கேட்டு கான்செல் பண்ண வேண்டியதை கான்செல் பண்ணிட்டு அதுல பாக்கி தர்ற வேண்டிய பைசாவ திரும்ப என் கைல கொடுத்திட்டு , அடுத்த வேலையா நான் திரும்ப புக் பண்ண வேண்டியதை புக் பண்ணி கொடுத்தாங்க. ஏன்னா அவுங்க வேலை படி, கான்செல் பண்றது ஒரு வேலை, புக் பண்றது அடுத்த வேலை. ரெண்டையும் தனி தனியா தான் செய்யணும். அப்படி தான் செய்வாங்க. இதே நம்ம ஊரா இருந்தா இது அது ரெண்டு போக இவ்வளவு அப்படின்னு கணக்கை முடிச்சுடுவாங்க. ரெண்டுல எதையுமே தப்பு சரின்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு வழிகளையும், ஒரு நல்லது கேட்டது இருக்கு.

4. உசுருக்கான மதிப்பு

இங்கே எல்லா உசுருக்கும் ஒரே மதிப்பு தான். போன வாரம் கூட, ஒரு பிச்சைகாரரு மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டாரு. அடுத்த பத்தாவது நிமிஷம் அங்கே ஆம்புலன்ஸ் வந்திச்சு. இது யார இருந்தாலும் இப்படி தான். ஏழை, பணக்காரன், இந்த ஊர் காரன், அந்த ஊர் காரன், வெளிநாட்டு காரன் , உள்நாட்டு காரன் இப்படி எந்த பாகு பாடும் கிடையாது.

அதுவும் இங்கே குறிப்பா உலகப்போர்ல உயிர் இழப்பு அதிகம் இருந்ததால ஒவ்வொரு உசுருக்கும் அம்புட்டு மதிப்பு கொடுப்பாங்க.

5. நாய்ப்பாசம்

இங்கே மக்களுக்கு தாய்ப்பாசம் எப்படி இருக்கோ நாய்ப்பாசம் அதிகம். அந்த நாய நாம மொறச்சு கூட பாக்க முடியாது. ஒரு முறை இப்படி தான் ரயில்ல போகும் பொழுது ஒரு அம்மணி ஏறினாங்க. நல்ல இருந்ததுனால நானும் பாத்திட்டே வந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சு தான் கவனிச்சேன், கைல ஒரு நாய புடிச்சு இருக்காங்க. அது என்னைய விட ரெண்டு கிலோ அதிகமா இருக்கும்னு நினைக்குறேன். சரி இட்ஸ் ஆல் தி இன் தி கேம் அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கும் போதே, படார்னு அந்த அம்மணி அந்த நாயோட லிப் டு லிப் அடிச்சு கொஞ்ச ஆரம்பிச்சுடாங்க. ஸ்மால் ஹார்ட், சின்ன இதயம் தாங்காம நான் அடுத்த நிறுத்தத்துல இறங்கி வேற பொட்டிக்கு போய்டேன்.

இதை ஏன் சொல்றேன் அப்படின்னா, இவங்களுக்கு அம்புட்டு நாய் பாசம். இங்கே ஒரு தடவை கூட ஒருத்தன் நாய கல்லால அடிச்சு பாத்தது இல்லை. அடிச்சாலும் நம்மள புடிச்சு உள்ள தூக்கி போட்டுடுவாங்கன்னு தான் நினைக்குறேன்.

6. கண்ணோடு கண் :

ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை ஆளை மாத்திகிட்டே இருப்பாங்க, அப்படி இப்படி எல்லாம் ஒரு பக்கம். ஆனா ஒரு பொண்ணும் பையனும் சேந்து பேசிட்டு போகும் போதும், அவுங்க கொஞ்சிகிட்டு போகும் போதும் அதை பார்த்தாலே நமக்கு ஒரு வித காதல் உணர்ச்சி உள்ள பொங்கும். அப்படியே பின்னணி இசை பாய்ஸ்ல ரஹ்மான் போட்டது தான் வரும்,'எனக்கொரு கேர்ள் பிரன்ட் வேணுமடா' அப்படின்னு.

அப்படி என்ன வித்தியாசம். ரெண்டு பெரும் கண்ணோடு கண் பாத்து பேசுவாங்க. இந்த விஷயம் மட்டும் இருந்தா பாதி பேரு பொய் சொல்லவே முடியாது. நாம கண்ணை தவிர வேற எல்லா எடத்துலயும் பாத்து பேசுவோம்.

7. தனி மனித வாழ்க்கை, வேலை :

தன்னோட தனிப்பட்ட வாழ்க்கை, வேலை இது ரெண்டையும் கலக்க மாட்டாங்க. ஒரு தனி பட்ட முறைல எப்படி இருக்காங்க, அவன் தண்ணி அடிக்கரானா, தினம் ஒருவன்/ஒருத்தி கூட சுத்தரானா, இதை எல்லாம் வேலையோட சேத்து பாக்க மாட்டாங்க. வேலை தனி, தனி மனித வாழ்க்கை தனி.

இதுவும் ஒரு முக்கியமான விடயம் நாம பழக வேண்டியது. அதுவும் குறிப்பா நம்ம கல்லூரிகள்ல, ஒரு பையன்/பொண்ணோட மார்க் அவன் அங்கே நின்னு யாரு கூட பேசறான், அந்த பொண்ணு கூட இவன் ஏன் பேசணும், ஏன் தம் அடிக்கணும் இதை எல்லாம் வெச்சு பல இடங்கள்ல மார்க் விழுது.

8. விடுமுறை

உலகத்துல எந்த இடம் வேணும்னாலும் சொல்லுங்க, அந்த எடத்துக்கு இவங்க போயிட்டு வந்து இருப்பாங்க. அவங்களுக்கு வேலைல தர்ற விடுமுறை நாட்களை சரியா உபயோகிச்சுபாங்க.

2004 சுனாமி வந்தப்போ இந்தியா/இலங்கை இங்க இறந்தவங்க எண்ணிக்கைல ஏழு-எட்டு பேரு ஜேர்மன்காரங்க. அது போல ஊரு சுத்தரதுன்னா சும்மா போய் பாத்திட்டு வர்றது மட்டும் கிடையாது. அங்கே என்ன மொழி பேசறாங்க, அங்கே என்ன சாப்பாடு நல்லா இருக்கும், அதை எப்படி செய்யறது பத்திய புத்தகம், அங்கே என்ன உடை அணிவாங்க, இது போல எல்லாத்தை பத்தியும் முன்னாடியே தெரிஞ்சு வெச்சுகிட்டு, அங்கே போன மக்கள் கூட நல்லா சேந்து பழகி, நிறைவா போயிட்டு வருவாங்க.

இவங்க மற்ற நண்பர்களுக்கு அங்கே போயிட்டு வாங்கிட்டு வர்ற பரிசு, அந்த ஊரை சேர்ந்த எதாவது படங்கள் கொண்ட அட்டையா தான் இருக்கும்.

9. பரிசு :

இவங்க பரிசு கொடுக்கறது அப்படின ஒடனே ஒண்ணும் பெருசா நிறைய செலவு பண்ணி எல்லாம் எதுவும் செய்ய மாட்டாங்க. பெரியவங்களுக்கு அப்படினா ஒரு வயின் பாட்டில், கூட வேலை பாக்கறவங்க விட்டு போறாங்க அப்படின்னா ஒரு காபி மக் இவ்வளவு தான். என்னைய கேட்டா மனசு நிறைச்சு இதையே வாங்கி கொடுத்தா போதும்னு தான் சொல்லுவேன்.

இப்படி நிறைய நல்லா பழக்கங்கள் இவங்க கிட்டே இருக்கு. இதுல சிலதை நாம பழக ஆரம்பிச்சாலே ரொம்ப நல்லா இருக்கும்.

இது போதும் பார் தி மொக்கைஸ் ஒப் டுடே.

அன்புடன்,
எஸ். கே.
SK
அன்பின் தோழர்களே,

சக பதிவர் சிங்கை நாதன் அவர்கள் நிலை குறித்து திரு கே.வி. ஆர் அவர்களின் இந்த பதிவில் அறியலாம்.

ஐரோப்பாவில்/ஜெர்மனியில் இருந்து ஒரு குழுவாக பணம் சேகரித்து மொத்தமாக அனுப்பலாம்.

என்னை தொடர்பு கொள்ள விருப்பம் உடையவர்கள்

ஈமெயில் : friends.sk@gmail.com

அன்புடன்,
எஸ். கே.
SK
சனி கிழமை எனக்கு ஒரு ஈமெயில் வந்தது. அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு விபத்து ஒன்றில் ஒரு காலை இழந்ததாகவும், அவருக்கு மாற்று கால் பொறுத்த உதவும் படியும் கேட்டுக்கொள்ள பட்டு இருந்தது. நண்பர்கள் நால்வருடன் இதை பற்றி பேசி கொண்டு இருக்கையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரம் எங்களுக்கு தெரிய வந்தது.

ஜெய்ப்பூர் பூட், 1975'இல் தொடங்கப்பட்ட ஒரு சேவை நிறுவனம். இங்கு கால் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால், சக்கர வண்டி, போன்றவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதை பற்றிய மேலதிக தகவல்கள் அறிய இங்கு செல்லவும்.

Jaipur Foot

இவ்வாறான ஒரு மகத்தான சேவையை செய்யும் இந்நிறுவனத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். இதை நானும் நமக்கு தெரிந்தவர்களுடன் பரப்பி முடிந்த வரை நாம் அறிந்தவர்களுக்கு உதவ முன்வருவோமா.

அதிகம் வாசிக்க படுகின்ற பதிவர்கள் முடிந்தால் இதை பற்றி ஒரு பதிவோ, அல்லது ஒரு காட்ஜெட் போன்றவையோ போட்டு இருக்கும் பட்சத்தில் நிறைய நண்பர்களை சென்றடைய வாய்ப்பு உள்ளது. இதே போல் நமக்கு தெரிந்தவர்களுக்கு கொஞ்சம் நேரம் எடுத்து அவர்கள் ஜெய்ப்பூர் செல்வதற்கு மட்டும் தயார் செய்து கொடுத்தால் அங்கு அனைத்தையும் அவர்களே இலவசமாக செய்கிறார்கள்.

இவர்களுக்கு சென்னையிலும் ஒரு தொடர்பு அலுவலகம் உள்ளது. அதன் விவரம் கீழ் வருமாறு.

MR. D. MOHAN JAIN
ADINATH JAIN TRUST (REGD.)
24, SUBBA NAIDU STREET,
CHOOLAI, CHENNAI-600112.
044-26693982.
26692813, 26692539.
Mobile- 09840022536

இந்த தகவலை என்னுடன் பகிர்ந்து கொண்ட என்னுடைய சித்தப்பாவிற்கு மற்றும் அவருடைய நண்பர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

அன்புடன்,
எஸ். கே.