SK
வணக்கம் மக்களே,

இதை எழுதலாமா வேற எதாவது எழுதலாமா. இப்படி எழுதின அவுங்க வருத்த படுவாங்கலோ அப்படி இப்படின்னு பயங்கர குழப்பத்துக்கு அப்பறம் சரி இதை எழுதலாம்னு முடிவு.

இனி என்னோட புலம்பல்

போன வாரம் ஒரு நண்பன் கிட்டே பேசிட்டு இருந்தேன். பேச்சு அப்படி இப்படி எப்படி எல்லாமோ போய் ஒரு இடத்துலே 'எனக்கு தனிமைனா ரொம்ப புடிக்கும்னு சொன்னான்'. அப்படியா செல்லம், அப்படி தனிமைனா என்ன அப்பு செய்வேன்னு கேட்டேன்.

காரையோ, வண்டியோ (அட வண்டின்னா மாட்டு வண்டி இல்லீங்க, டூ வீலர்), கைபேசியும் எடுத்திகிட்டு யாரும் இல்லாத இடமா போய் ஒக்காந்து, கைபேசியும் அணைச்சிட்டு இயற்கைய ரசிப்பாராம். இது பேரு தான் தனிமை.

இதே மாதிரி நிறைய ஆசாமிங்க இருக்காங்க, வெளில அம்மா சீரியல் பாத்துகிட்டு இருக்கும் போது தனியா தன்னோட அறைக்குள்ள போய் ஒக்காந்து பல்லு குத்தினா தனிமையாம்.

ஏன்பா இதுவா தனிமை.. அறுபது மணி நேரம் தனிய ஒரு அறைக்குள்ள மட்டும் சாப்பாடு தண்ணி இல்லாம கூபிட்டா ஏன்னு கேக்க ஆள் இல்லாம கைபெசில சார்ஜ் போய் யாரு கிட்டயும் பேசவே முடியாம இருக்கறது பேரு என்னங்க அப்படின்னா.

இது ஒரு விதம். இன்னொரு விதம் இருக்கு. மொழி தெரியாத ஊரு. உன்னை புரிஞ்சுகாத மனுஷங்க. உன்னால புரிஞ்சுக்க முடியாத கலாச்சாரம். பழக்கமே இல்லாத சாப்பாடு. இதுக்கு மேல என்னன்னு கேக்க ஆள் கிடையாது. அப்போ தான் சினிமா வசனம் எல்லாம் நெனப்பு வரும், 'அடிச்சு போட்ட ஆள் இல்லாத அநாதை பய' அப்படின்னு எல்லாம். இது மாதிரி ஒரு சூழல்ல ஒரு கடினமான நேரம், எது செஞ்சாலும் தப்பா போகும். என்ன பேசினாலும் தப்பா புரியப்படும்.

கண்ணாடிய பாத்தா அழுகை வரும்.
இளையராஜா பாட்டு கேட்டாலும் அழுகை வரும்.
அம்மா குரல் கேட்டாலும் அழுகை வரும்.
சமைக்கணும்னு நினைச்சாலும் அழுகை வரும்.
சாப்பாட பாத்தாலும் அழுகை வரும்.
வீட்டுக்கு போன் பண்ணி பேசலாம்னா டெலிபோன் பில் நெனைச்சு அழுகை வரும்.

அழுகை மட்டுமே ஆறுதலாய் இருக்கும்...


இனிமே யாராவது ரூமுக்கு உள்ளே போய் எனக்கு தனிமை புடிக்கும்னு சொல்லுங்க அப்பறம் பேசிக்கறேன்.

போன நவம்பெர்ல தனிமைல இருதப்போ எனக்கு ரொம்ப ஆறுதலாய் இருந்த இரு நண்பர்கள் நினைவாக ...

அன்புடன்
எஸ். கே.


22 Responses
  1. RAMYA Says:

    //இது ஒரு விதம். இன்னொரு விதம் இருக்கு. மொழி தெரியாத ஊரு. உன்னை புரிஞ்சுகாத மனுஷங்க. உன்னால புரிஞ்சுக்க முடியாத கலாச்சாரம். பழக்கமே இல்லாத சாப்பாடு. இதுக்கு மேல என்னன்னு கேக்க ஆள் கிடையாது. அப்போ தான் சினிமா வசனம் எல்லாம் நெனப்பு வரும், 'அடிச்சு போட்ட ஆள் இல்லாத அநாதை பய' அப்படின்னு எல்லாம். இது மாதிரி ஒரு சூழல்ல ஒரு கடினமான நேரம், எது செஞ்சாலும் தப்பா போகும். என்ன பேசினாலும் தப்பா புரியப்படும்.
    //

    இது போல் மாட்டி கொண்டவர்களை பற்றியும், அவர்கள் தனிமையையும் பற்றியும் நான் அடிக்கடி சிந்திப்பது உண்டு S.K. மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அந்த தனிமயையும் ரசிச்சு சொல்லி இருக்கீங்க. எங்கே அந்த இரு நண்பர்களும்? சீக்கிரம் நம்ம நட்டு பக்கம் வாங்க.


  2. RAMYA Says:

    //
    கண்ணாடிய பாத்தா அழுகை வரும்.
    இளையராஜா பாட்டு கேட்டாலும் அழுகை வரும்.
    அம்மா குரல் கேட்டாலும் அழுகை வரும்.
    சமைக்கணும்னு நினைச்சாலும் அழுகை வரும்.
    சாப்பாட பாத்தாலும் அழுகை வரும்.
    வீட்டுக்கு போன் பண்ணி பேசலாம்னா டெலிபோன் பில் நெனைச்சு அழுகை வரும்.
    //

    நல்லா சமைப்பீங்களா?


  3. //கண்ணாடிய பாத்தா அழுகை வரும்.
    இளையராஜா பாட்டு கேட்டாலும் அழுகை வரும்.
    அம்மா குரல் கேட்டாலும் அழுகை வரும்.
    சமைக்கணும்னு நினைச்சாலும் அழுகை வரும்.
    சாப்பாட பாத்தாலும் அழுகை வரும்//

    புது ஊரில் மாட்டிக் கொண்ட போது இதேதான் நடந்தது....
    அன்புடன் அருணா


  4. SK Says:

    / இது போல் மாட்டி கொண்டவர்களை பற்றியும், அவர்கள் தனிமையையும் பற்றியும் நான் அடிக்கடி சிந்திப்பது உண்டு S.K. மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அந்த தனிமயையும் ரசிச்சு சொல்லி இருக்கீங்க. எங்கே அந்த இரு நண்பர்களும்? சீக்கிரம் நம்ம நட்டு பக்கம் வாங்க. /

    அவுங்க ரெண்டு பெரும் நிம்மதியா எங்கயோ இருக்காங்க.

    எங்க, இப்போதைக்கு இங்கே தான். பாக்கலாம்.


  5. SK Says:

    // நல்லா சமைப்பீங்களா? //

    அழுகை நான் சமைச்ச சாப்பட சாப்பிட முடியாமன்னு நினைச்சீங்களா :-)

    நன்றி ரம்யா வரவுக்கும், பதிலுக்கும் :-)


  6. SK Says:

    // புது ஊரில் மாட்டிக் கொண்ட போது இதேதான் நடந்தது....
    அன்புடன் அருணா //

    வேற வழி..

    பேச கூட ஆள் இல்லேன்னா ரொம்ப கஷ்டம். :(


  7. //கண்ணாடிய பாத்தா அழுகை வரும்.
    இளையராஜா பாட்டு கேட்டாலும் அழுகை வரும்.
    அம்மா குரல் கேட்டாலும் அழுகை வரும்.
    சமைக்கணும்னு நினைச்சாலும் அழுகை வரும்.
    சாப்பாட பாத்தாலும் அழுகை வரும்//

    என் செல்வமே,
    இவ்வளவு கஷ்டப்பட்டாயா நீ.
    அய்யகோ நான் என்ன செய்வேன்.
    இப்படி ஒரு பிள்ளை அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது தெரியாமல், இங்கே பதிவிட்டுக்கொண்டிருந்தேனே,
    மன்னித்து விடு என் செல்வமே

    (நம்ம கண்ணாம்பாள் ஸ்டைல்ல படிங்க) யாருன்னு தெரியுமா.


  8. இதை எழுதலாமா வேற எதாவது எழுதலாமா. இப்படி எழுதின அவுங்க வறுத்த படுவாங்கலோ அப்படி இப்படின்னு பயங்கர குழப்பத்துக்கு அப்பறம் சரி இதை எழுதலாம்னு முடிவு.
    இனி என்னோட புலம்பல் //

    நாங்க வறுத்தமெல்லாம் படமாட்டோம்
    வருத்தம் தான் படுவோம்.
    தப்பா எடுத்துக்காதீங்க


  9. SK Says:

    // என் செல்வமே,
    இவ்வளவு கஷ்டப்பட்டாயா நீ.
    அய்யகோ நான் என்ன செய்வேன்.
    இப்படி ஒரு பிள்ளை அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது தெரியாமல், இங்கே பதிவிட்டுக்கொண்டிருந்தேனே,
    மன்னித்து விடு என் செல்வமே

    (நம்ம கண்ணாம்பாள் ஸ்டைல்ல படிங்க) யாருன்னு தெரியுமா. //

    கண்ணாம்பாள் :-) அது சரி


  10. SK Says:

    தவறை சுட்டிகாமிச்துக்கு ரொம்ப நன்றிங்க. அ. அ. :-)


  11. நான் இப்போ கிட்டத் தட்ட அப்படித்தான் இருக்கேன்.. நல்லா சொல்லியிருக்கிங்க...


  12. SK Says:

    பதில் போட்டதுக்கு ரொம்ப நன்றி சகா.

    யாரவது நண்பர்கள் இருக்காங்களா பாருங்க சகா. ரொம்ப கடியா இருக்கும்.


  13. RAMYA Says:

    என்ன இந்த அக்காவை
    மறந்து விட்டீர்களா
    எப்படி இருக்கீங்க?
    அம்மா மற்றும் அப்பா நலமா?
    படிப்பு எப்படி போகுது?
    நலம் பேணவும்


  14. //RAMYA said...
    என்ன இந்த அக்காவை
    மறந்து விட்டீர்களா
    எப்படி இருக்கீங்க?
    அம்மா மற்றும் அப்பா நலமா?
    படிப்பு எப்படி போகுது?
    நலம் பேணவு//

    என்னது அக்காவா????????? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நான் ரம்யாவ சின்னப் பொண்னுன் நினைச்சுட்டேன்.. சரிக்கா....


  15. SK Says:

    இல்ல ரம்யா. வேலை பெண்டு எடுக்குது.. சோ அப்போ அப்போ கம்மிங் அப்போ அப்போ கோயிங் :-)

    அனைவரும் நலம். இருங்க நல்லபடியா ப்ரீ ஆகிட்டு வரேன் கும்மி அடிக்க :-)

    கார்க்கி, :-) :-)


  16. //போன நவம்பெர்ல தனிமைல இருதப்போ எனக்கு ரொம்ப ஆறுதலாய் இருந்த இரு நண்பர்கள் நினைவாக ...//

    left the club?


  17. SK Says:

    ஆளவந்தான், நோ நோ ..

    Same club.. same blood :( :(


  18. "அடிச்சு போட்ட ஆள் இல்லாத அநாதை பய"

    wat to do..... i am god's direct creation. so no worries.....


  19. gayathri Says:

    naanum thanimai headline pathu neengalum enna matheiri thanethachi eluthi vachi irupenganu nenachen neeng nalla than eluthi irukenga


  20. SK Says:

    Thanks Mayvee

    காயத்ரி,

    எங்க இந்த கொலைவெறி உங்களுக்கு :-) நீங்க அழகா கவிதையா எழுதி இருக்கீங்க.

    நான் இங்கே பொலம்பி வெச்சு இருக்கேன். :(

    வருகைக்கு நன்றிங்க. :-)



  21. SK Says:

    என்ன ஆச்சு வெறும் ஆம் மட்டும் சொல்லி இருக்கீங்க :-)