Showing posts with label பொலம்பல். Show all posts
Showing posts with label பொலம்பல். Show all posts
SK
என்னோட பன்னிரெண்டாவது டியூஷன் வாத்தியார் சின்ன சின்ன நகைச்சுவை துணுக்கும், விடயங்களும் சொல்லிக்கொடுப்பார். அந்த டியூஷன் படிக்கும் போது உட்கார இருக்கிற எடத்துக்கு மேல மாணவர்கள் இருப்பாங்க. நெருக்கிகிட்டு தான் ஒக்காந்து இருப்போம். இப்படியே உட்காந்து இருக்கறது கஷ்டமா இருக்கவே, ஒரு நாள் ஒரு பையன் அவர் கிட்டே,

'சார், ஒட்கார எடம் பத்த மாட்டேங்குது. ஒரு பெஞ்ச் அதிகமா இருந்தா நல்லா இருக்கும்'
அப்படின்னு சொன்னான். அதுக்கு ஒடனே அவரு,
'ஒரு வாரம் பொறுத்துக்க தம்பி' அப்படின்னு பதில் சொன்னாரு.
இவன் திரும்பி (திரும்பின்னா திரும்பி இல்லீங்க, மீண்டும் அவரிடம்)
'ஏன் சார், ஒரு வாரத்துல புது பெஞ்ச் வருமா' அப்படின்னான். அவர் சிரிச்சுகிட்டே,
'இல்லை தம்பி, இதுவே உங்களுக்கு பழகிடும்' அப்படின்னு சொன்னாரு?

:-) இது தான் உண்மை. எல்லாமே பழகி போயிடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சில விடயங்களை நாம் தினமும் குறிப்பிட்ட காலங்களுக்கு செய்து பழகும் போது, அதுவே பழக்கம் ஆகிவிடுகிறது. இதை பற்றி பல ஆராய்ச்சிகளும் செய்து உள்ளார்கள். முதன் முதலாக ஆராய்ச்சியாக மக்ஸ்வெல் மல்ஸ் என்பவர் இவ்வாறு ஒரு விடயம் பழக்கமாக மாறுவதற்கு இருபத்தி ஒன்று நாட்கள் தேவை என்று கூறியுள்ளார். இதை பற்றி பல குறிப்புகளும் உள்ளன. சிலர் 66 நாட்கள் தேவை என்றும் கூறி உள்ளனர். எந்த விடயமும் சில நாட்கள் தொடர்ந்தோ, சில முறை தொடர்ந்து நடக்கும் போது பழகி விடுகிறது. நல்ல விடயம் பழகுவதற்கு அதிக நாட்களும், கெட்ட விடயம் பழகுவதற்கு குறைந்த நாட்களும் தேவை படுகிறது. நல்லது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போன மாசம் வரைக்கும் இந்த பனிக்காலம் எப்படி இருக்குமோ அப்படின்னு ஒரு பயம் இருந்திச்சு. டிசம்பர் கடைசி வாரம் ஒரு சனி ஞாயிறு -15 போச்சு. அப்போ கொட்ட ஆரம்பிச்ச பனி கொட்டுது கொட்டுது கொட்டிகிட்டே இருக்கு. இப்போ தினமும் -3 , -4 தான். இதுக்கு எல்லாம் இப்போ நாங்க யோசிக்கறது இல்லை. ஏன்னா, பழகிப்போச்சு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போன வாரத்துல இருந்து ஒரு செய்தி. ஒரு போலீஸ் அதிகாரிய வெட்டி இருக்காங்க. அதை மினிஸ்டர் எல்லாம் பாத்து இருக்காங்க. உதவி ஏதும் செய்யலை. இன்னும் தமிழ்நாட்டு அரசு கிட்டே இருந்து எந்த வித அறிக்கையோ, வேலை நேரத்தில் உயிர் இழந்த போலீஸ் அதிகாரிக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையோ எடுக்கலை. குறிப்பா முதல் அமைச்சர் கிட்டே இருந்து எந்த பதிலும் வரலை.
எனக்கு இதை கேட்ட ஒடனே சிரிப்பு சிரிப்பா இருந்திச்சு. என்னவோ ஜக்குபாய் படம் நெட்ல வந்துட்ட மாதிரியும், 'அப்பாஆஅ' (சித்தி மாதிரி படிக்கவும் ) அப்படின்னு கூப்பிடற ராதிகா அவர்கள் அழுவுற மாதிரியும், இல்லை பயபுள்ளைங்க குதிக்கறாங்க. போனது ஒரு போலீஸ் உசுரு. நீங்க எல்லாம் வேலைக்கு சேரும் போது அதுக்கு தானையா சேந்தீங்க. நாங்க திருட்டு வி. சி. டி. ஒழிக்கரதுல பிசியா இருக்கோம். நீங்க பாட்டுக்கு உசுரு போச்சு, ம... போச்சு அப்படின்னு வந்து சொன்னா. எங்களுக்கு குஷ்புவின் அழகான தமிழில் தொகுத்து வழங்கி நமிதா டான்ஸ் ஆட நடக்கும் கலை விழா பாக்க வேண்டியது வேற பாக்கி இருக்கு. சின்ன புள்ளைத்தனமா கூவிக்கிட்டு.

இதுவும் பழகி போச்சு தலைவா. அடுத்த ரஜினி படம் வந்திட்டா எங்களுக்கு அது போதும். எவன் உசுரு போனா எனக்கு என்ன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாள் 1 : ருசிகா என்ற மாணவி 19 வருடத்துக்கு முன் ஒரு போலீஸ் அதிகாரியால் மானபங்க படுத்த பட்டு உள்ளார். அதை குறித்த அறிக்கை.
நாள் 2 : ஏன். டி. திவாரி சில பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக வீடியோ வெளியானது. அதை பற்றிய ஒரு ஆய்வு (??) அறிக்கை.
நாள் 3 : ஹைதராபாத்தில் கலவரம். ஒரு செய்தி சானல் ராஜசேகர் ரெட்டி மரணத்தை குறித்த தவறான செய்தி வெளியிட்டதால் கலவரம்.
நாள் 4 : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் சண்டை.
நாள் 5 : இது போல உணர்ச்சி மிக்க செய்தி இல்லை..

நம்ம பொதுசனம் : என்ன அண்ணே, இன்னைக்கு ஒன்னும் சுவாரஸ்யமா செய்தி இல்லையா. சுவாரஸ்யமா செய்தி படிச்சே பழகி போச்சு அண்ணே.

வாழ்க பொதுசனம்.
வாழ்க பாரதம்.
வாழ்க அரசியல் வாதிகள்.
வாழ்க நமது ஜனநாயகம்.

'நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்'

என்றென்றும் அன்புடன்
எஸ். கே.
SK
சமீபமா மல்லாக்க படுத்து யோசிக்கும் எனக்கும் இந்த நவம்பர் மாசத்துக்கும், டிசம்பர் மாசத்துக்கும் பயங்கர தொடர்பு இருக்கறதா பட்சி சொல்லிச்சு. 2002'ல இருந்து யோசிச்சு பாத்தேன், ஒவ்வொரு நவம்பரும் டிசம்பரும் எனக்கு நித்திய கண்டம் பூரனாயிசா தான் போகுது. நீங்களே சொல்லுங்க நண்பர்களே இதுக்கு நான் என்ன பண்ணலாம்னு.

2002 :

நான் கல்லூரில கடைசி வருஷம் படிச்சுகிட்டு இருந்தேன். கம்பெனி எல்லாம் வந்து ஆள் எடுக்கற நேரம். நாங்க எல்லாம் கொள்கைல ரொம்ப பிடிவாதமா இருக்கோம்னு சொல்லி சாப்ட்வேர் வேலை எதுக்கும் உட்காரலை. என்னோட படிப்பு சம்பந்தமா கம்பெனி அதிகமா வரலை. அதுக்காக கம்பெனி எல்லாம் கூப்பிடறதுக்கு நாங்களா ஒரு ஆறு பேரு கிளம்பி மெட்ராஸ் போய் கம்பெனி எல்லாம் கூப்பிட்டு வந்தோம்.

மதராஸ்ல வேகாத வெயில்ல பத்து நாள் சுத்து சுத்துன்னு சுத்திட்டு கோயம்புத்தூர் திரும்ப வரும் பொது தேதி டிசம்பர் 25. வந்து படுத்தவன் தான் எந்திரிக்க முடியலை. சரியான காய்ச்சல். பொட்டிய கட்டிக்கிட்டு ஊருக்கு போய்டேன். அங்கே போனா சொல்றாங்க, அம்மை போட்டு இருக்கு உனக்கு. இன்னும் மூணு வாரம் நகர முடியாது அப்படின்னு.

ஜனவரி முதல் வாரத்துல நாங்க மெட்ராஸ் போய் கூப்பிட்டு வந்த கம்பெனி எல்லாம் எங்க காலேஜ் வந்து ஆள் எடுத்திட்டு போய்டாங்க. பொங்கல் கழிச்சு காலேஜ் போகும் போது எனக்கு பாக்கி இருந்தது எல்லாம் பன்னு தான். :(

2003 :

படிச்சு முடிச்சிட்டு வேலை தேடிகிட்டு இருந்த வருஷம். இந்த வருஷ நவம்பர், டிசம்பர் எல்லாம் எப்படி போச்சுன்னே தெரியாது. திங்க கிழமை ஆபிஸ் போனா, தம்பி இன்னைக்கு நைட் கெளம்பி கோயம்புத்தூர் போயிட்டு நாளைக்கு திரும்ப வரணும்னு சொல்லுவாங்க. சில வாரம் அப்படியே கோயம்புத்தூர் போயிட்டு, ஈரோடு , சேலம் அப்படியே மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி எல்லாம் சுத்திட்டு மெட்ராஸ் போவேன்.

ஆனா எனக்கு தெரிஞ்சு கடைசி ஆறு வருஷ நவம்பர், டிசம்பர்ல நான் நிம்மதியா இருந்தது இந்த வருஷமாத்தான் இருக்கும்னு நினைக்குறேன். மதராஸ்ல இருந்த இந்த நாட்களை பத்தி தனி பதிவே எழுதலாம்.

2004:

ரொம்ப கொடுமையான வருஷம். நான் ஒரு அதல பாதாளத்துல விழறேன்னு தெரியாம விழுந்த தருணம்னு சொல்லலாம். ஜெர்மனி வந்து ரெண்டு மாசம் ஆன நேரம். என்னோட அறை நண்பர்கள் இரண்டு பேரு. நான் இவ்வளவு வெள்ளந்தியா இருந்து இருக்கேன்னு இப்போ நினைச்சா கூட கண்ணை கட்டுது.

நான் இந்தியாவுல இருந்து எடுத்து வந்த பணத்துல பணத்துல ஒரு கணிசமான தொகைய நண்பர்கள் கிட்டே ஏமாந்தேன். சோ கைல காசு பூஜ்ஜியம்.

இந்த ஒரு தப்பு செஞ்சதுக்கு நான் கொடுத்த விலை ரொம்ப அதிகம். எத்தனையோ தூக்கம் இல்லாத நாட்கள், பசியோடு தூங்கின இரவுகள், கம்மியா வாங்கின மதிப்பெண்கள், வாழ்க்கை மீது எனக்கு வந்த ஒரு வெறுப்பு. என்ன இதை பத்தி யாரு கிட்டயும் சொல்ல முடியாது. சொல்லி வீட்டுக்கு தெரிஞ்ச பொட்டிய கட்ட சொல்லி உத்தரவு வந்திடும்.

2005 :

2004 செஞ்ச தப்பே என்னை தொரத்தி தொரத்தி அடிச்சது. இதுல தப்பிக்கலாம் அப்படின்னு ஊரு மாறி இன்னொரு ஊருக்கு போய் அங்கே கொஞ்சம் பணத்தோட படிப்பு சம்பந்தமா வேலை கிடைச்சுது. சரி இனியாவது ஒழுங்கா இருக்கணும் அப்படின்னு இருந்தேன். அங்கேயும் நமக்கு வந்தது சனி. நான் போன ஊருல வீட்டு வாடகை கொஞ்சம் அதிகம். சரி நாம நம்ம ஊரு மக்கள் கூட தங்கின கொஞ்சம் செலவும் கம்மி ஆகும், பேச்சு துணை மேலும் ஆள் துணையும் இருக்கும்னு நினைச்சேன். அது தான் நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு.

நண்பர்கள் அலைவரிசை, நேரம், பொழுது போக்கு எதுவுமே என்னோட ஒத்து போகலை. நவம்பர் கொஞ்சம் டேர்ரரா தான் போச்சு. டிசம்பர்ல தனி குடுத்தனம் போறதுன்னு முடிவு செஞ்சேன். நவம்பர், டிசம்பர் 2005 ஒரு மாதிரி போச்சு. அப்போ முடிவு செஞ்ச தனி குடுத்தனம் தான் இப்போ வரை தொடருது.

2006 :

2005 வருசத்தோட எல்லா சனியும் முடிஞ்சது அப்படின்னு இருந்தா, வந்தது ஆப்பு இன்னொரு பக்கத்துல இருந்து. என்னோட மாஸ்டர்ஸ் முடிக்க தீசீஸ் செய்யணும். அது நான் வேலை செஞ்ச எடத்துலியே முடிவு பண்ணி வெச்சிட்டு, என்னோட அருமை வாத்தியார் கிட்டயும் பேசி சரி பண்ணிட்டேன். வாத்தியாரும் ஈமெயில் செஞ்சுட்டாரு. சரி எல்லாம் முடிஞ்சுடிச்சு அப்படின்னு வீட்டுக்கு சொல்ல தொலை பேசினேன். அம்மா பாசமா கூப்பிடாங்க, அதான் எல்லாம் சரியா போகுது அப்படின்னு நானும் இந்தியா போறதுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டேன்.இது எல்லாம் ரெண்டு மணி நேரத்துல நடந்தது.

இந்தியா வந்து இறங்கி மெயில் செக் செஞ்சா, வந்தது குண்டு. என்னோட வாத்தியார் எதோ குழப்பம் செஞ்சுட்டாரு. இனி நான் அந்த கம்பெனில தீசீஸ் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சது. இருபது நாள் இந்தியாவுல, நிம்மதியா இருக்கவும் முடியலை. கவலை பட்டுகிட்டே இருக்கவும் முடியலை.

2007 :

நல்ல படியா தீசீஸ் எல்லாம் செஞ்சு முடிக்க வேண்டிய நேரம். எப்போதும் போல தீசீஸ் செய்யற நேரத்துல இருக்கற வேலை. முடிஞ்சா போதும் அப்படின்னு ஆகி போச்சு. எல்லாரும் கிறிஸ்துமஸ் கொண்டாடிகிட்டு இருந்த நேரம், நான் கம்ப்யூட்டர் கூட சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன்.

2008 :

கொஞ்சம் உஷாரா இருக்கணும்னு இருந்தேன். இருந்தாலும் ஆப்பு அடிச்சுடிச்சு. நல்லா வேலை செஞ்சுகிட்டு இருந்த என்னோட வேலை, மக்கர் பண்ணிச்சு. திரும்ப ஜெர்மனி விட்டு ஓடிடலாம் அப்படிங்கற அளவுக்கு தொரத்தி தொரத்தி அடிச்சது. அப்பறம் அதுல இருந்து தப்பிச்சு வந்த்துட்டேன்.

இதோ இன்னும் ஒரு வாரம், 2009 வருஷத்துக்கான நவம்பர், டிசம்பர் எனக்கு என்ன சொல்லித்தர போகுதுன்னு தெரியலை. ஆனா ஏதோ தனியா இருக்கரா போலத்தான் தெரியுது. ஆப்புகள் எல்லா பக்கமும் நிக்கறா போல ஒரு பீலிங்க்ஸ் அல்ரெடி இருக்கு. சோ மக்கா எல்லாரும் எனக்காக உம்மாச்சிகிட்டே வேண்டிக்கோங்க. ஆப்பே வேணாம்னு சொல்லலை. ஆனா கொஞ்சம் பாத்து அடிக்க சொல்லுங்க.

அன்புடன்
எஸ். கே.
SK
என்னதான் பெரிய புத்திசாலி அப்படி இப்படி எல்லாம் சொன்னாலும், நம்ம எதிர் காலத்தை பத்தி ஒருத்தர் நமக்கு முன்னாடியே சொல்றாரு அப்படின்னா நமக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். நான் முடிஞ்சா வரைக்கும் நேரடியா போய் ஜோசியம் பார்க்கிறது இல்லை. ஆனா போய் பாத்திட்டு வந்து சொன்னா கெடுக்கறது.

இப்படி தான் ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி, நான் பாச்சலர் படிச்சு முடிச்சிட்டு அடுத்து என்ன பண்ணலாம் அப்படின்னு இருந்த நேரம். நானும் எங்க சித்தி ஒருந்தங்களும் போனோம். அவர் கிட்டே ஜாதகத்தை நீட்டிபுட்டு உட்காந்தேன். அவரும் அதை பாத்தாரு, கணக்கு போறாரு, எதோ கிருக்கினாறு.. அப்படியே தாடிய சொறிஞ்சுகிட்டு ஆரம்பிச்சாரு. 'இந்த ஜாதகக்காரர் படிச்சு முடிச்சு வேலைக்கு போவாரு. இவருக்கு இதுக்கு மேல படிக்க வாய்ப்பு இல்லை. கூடிய சீக்கரம் வேலை கிடைக்கும் தம்பி' அப்படின்னு சொன்னாரு. எனக்கு பகீர்னு தூக்கி வாரி போட்டிச்சு. அதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் ஜேர்மன் அட்மிஷன் லெட்டர் வாங்கி வெச்சிட்டு வந்தேன். நல்ல இருங்க சாமி அப்படின்னு அவரை வாழ்த்திட்டு வந்துட்டேன். அதை பத்தி நான் பெருசா யோசிக்கல அப்பறம். மாஸ்டர்ஸ் முடிக்கும் பொது தீசிஸ் செய்யும் போது ஒரு சின்ன சிக்கல்ல மாட்டிகிட்டேன். படிச்சு முடிப்பமா அப்படின்னு ஒரு சூழ்நிலை. அந்த ரெண்டு மாசம், இந்த ஜோசியக்காரரும்,அவர் சொன்னதும் தான் கனவுல வந்தது. ஒரு வேலை நாம மேல் படிப்பு படிக்க வந்ததே தப்போ அப்படின்னு ஒரு டேர்ரரா யோசிக்க வைச்சுடிச்சு. அப்பறம் அதையும் தாண்டி வந்தாச்சு.

அப்பறம் இப்போ சமீபத்துல அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சது. நம்ம மக்கள் தான் சும்மா இருக்க மாட்டாங்க இல்லை, 'அண்ணனுக்கு முடிஞ்சுடிச்சு, அப்படியே தம்பிக்கும் சட்டு புட்டுன்னு முடிக்க வேண்டியது தானே' அப்படின்னு ஒரு பிட்டு. 'யோவ் சும்மா இருய்யா' அப்படிங்கற அளவுல அவுங்களை எல்லாம் அடக்கி அமுத்தி வைக்க முயற்சி செஞ்சேன். அப்படியே அப்பா, அம்மா எல்லாரையும் தேத்தி இன்னும் ஒரு ரெண்டு வருஷம் எதை பத்தியும் யோசிக்காதீங்க அப்படின்னு சொல்லி ஆசுவாசப்படுத்தி வெச்சேன். நமக்கு தான் விதி வலியது ஆச்சே. கை ஜோசியம் பாக்கரவங்கள்ள இருந்து, நாடி ஜோசியம், மூஞ்சி ஜோசியம் வரைக்கும் நமக்கு ஆப்பு அடிக்கறதுன்னா தான் மொத்தமா கெளம்பி வருவாங்களே. இவங்க எல்லாரும் சேந்து மொத்தமா சொன்ன ஒரே விஷயம், 'இந்த பையன் எதாவது ஒரு பொன்னை இழுத்திட்டு வந்துடுவான், காதல் கல்யாணம் தான் அப்படின்னு' போடாங்க பாருங்க ஒரு குண்டை. நான் அஞ்சு மணி நேரம், ஆறு மணி நேரம் பேசி பஞ்சாயத்து பண்றதை ஒரே ஒரு நிமிஷத்துல போட்டு தூள் தூள் ஆக்கிடுவாங்க. 'இன்னும் சிலர் வெள்ளக்காரிய கூட்டிகிட்டு வந்தாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்லை' அப்படின்னு நாலஞ்சு பிட்டை செத்து போடுறாங்க. 'மக்களே, உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா'. நல்லா இருங்கடா டேய். அப்படின்னு ஒவ்வொரு முறையும் பஞ்சாயத்து நடக்குது.

இந்த பதிவை எழுத தூண்டியது இப்போ சமீபத்துல நடந்த ஒரு நிகழ்வு. இங்கே ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போய் இருந்தேன். அங்கே விலை கொஞ்சம் கம்மியா இருக்கும், மேலும் நம்ம ஊர்காரரு வெச்சு இருக்காரு. சாப்பிட்டு பில் கொடுக்க போனேன். என்னைய பாத்தவரு, 'வாங்க தம்பி' அப்படின்னு ஆரம்பிச்சாரு. நான் அப்போவே உஷார் ஆகி இருக்கணும். நமக்கு தான் விதி வலியது ஆச்சே. பேச்சுவாக்குல ஆரம்பிச்சாரு, 'தம்பி, உங்க பொறந்த தேதி' அப்படின்னாரு. நான் சடார்னு சுதாரிக்கரதுக்குல, 'பொறந்த தேதியோட கூட்டல் தொகை சொல்லுங்க தம்பி' அப்படின்னாரு. 'எட்டு இல்லை தம்பி வருது, எட்டு வந்தா படிக்க மாட்டாங்களே, மெக்கானிக், வரையறது இது போல எதாவது பக்கம் இல்லை போவாங்க,நீங்க படிக்கரீங்களே, பரவா இல்லையே' அப்படின்னாரு. 'மொதோ தப்பு நான் இங்கே சாப்பிட வந்தது' அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு, சிரிச்சுகிட்டே காசை கைல கொடுத்திட்டு ஓடி வந்திட்டேன். எனக்கு இது தேவையா மகாஜனங்களே. நான் பாட்டுக்கு அமைதியா இருந்தாலும் வம்பு எங்க விடறேங்குது என்னைய.

சரி இது தான் இப்படி போகட்டும் சொல்லி வீட்டுக்கு போன் செஞ்சேன், 'கண்ணு அஷ்டமத்துல சனியாம், கொஞ்சம் வாய கொறைச்சு சூதனமா இருந்துக்க அப்படினாங்க'. நான் என் இனி பேசறேன். எங்க போனாலும் நம்மளை சுத்தி அடிக்கறாங்க மக்கா. எதோ நல்ல இருந்தா சரி தான்.

அன்புடன்,
எஸ். கே.
SK
இந்த இரண்டு விடயங்களும் ரொம்ப நாளாவே இப்படி தான் இருக்கா இல்லை இப்போ சமீபமா அதிகம் ஆகி இருக்கான்னு தெரியலை. நான் சமீபமா ரொம்ப கவனிக்கறேன்.

அ. கேள்விக்கு பதில் கேள்வியாக ??

எனக்கு தெரிஞ்சு இப்போ எல்லாம் ஒரு கேள்விக்கு பதில் பதிலா வருதுன்னா, அது ஒன்னு தான் 'நீ எப்படி இருக்கே??', 'ம்ம் ஏதோ இருக்கேன்', 'நல்ல இருக்கேன்' இவ்வளவு தான்.

இதைத்தவிர வேற எந்த கேள்வி கேட்டாலும், அதுக்கு பதில் திரும்ப ஒரு கேள்வியாத்தான் வருது.

எங்க அக்கா கிட்டே, 'ஏங்கா, போன் நம்பர் மாத்தினியே எனக்கு தரணும்னு தோணிச்சா?? அப்படின்னு கேட்டேன் ??'

இதுக்கு என்ன பதில் தரணும் எசமான். 'மறந்துட்டேன்', 'இல்லை தரலை', 'இந்த நம்பர் இப்போ தர்றேன் வெச்சுக்கோ', இதுமாதிரி எது சொன்னாலும் சரி.

ஆனா, வர்ற பதில் என்ன தெரியுமா, 'நீ தந்தியா நம்பர் மாத்தின அப்போ??'.

சரி நம்ம வீட்டுல தான் இந்த பிரச்சனைன்னு பாத்தா, சின்ன விடயத்துல இருந்து, பெரிய பெரிய விடயம் வரைக்கும் இப்படித்தான் இருக்கு. 'ஏன்டா உங்க ஆளு மூணு பேரை கொன்னுட்டாங்களே, அதுக்கு தண்டனையும் இல்லை ஒன்னும் இல்லை, இது நியாயமாடா' அப்படின்னு கேட்டா அதுக்கு பதில் என்ன தெரியுமா 'உங்காளுகளும் தான் எட்டு பேரை சாகிடிச்சாங்க, அதுக்கு என்ன பண்ண முடியும்' அப்படின்னு பதில் வருது. ஆகா மொத்தம் இதுக்கு பதிலே கிடையாது, செத்தவும் உசுருக்கும் மதிப்பு கிடையாது.

நாம முடிஞ்சா வரைக்கும் நம்ம கிட்டே கேக்கபடற கேள்விக்கு பதில் நேரடியா சொல்லி பழகுனா, அது பல விடயங்களுக்கு ரொம்ப நல்லது. பிரச்சனைகள் குறைய வாய்ப்பு இருக்கு. இந்த விடயத்தை நான் கொஞ்ச நாளா பின்பற்ற முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.

இப்போ தேர்தல் நேரம் இது ரொம்ப நல்லா பயன்படும். அவன் என்ன செஞ்சான், இவன் என்ன செஞ்சான் அப்படின்னு கேள்வி மட்டும் தான் கேப்பாங்க. நான் என்ன செய்ய போறேன்னு எவனும் சொல்றது இல்லை. சொன்னாலும் எவனும் கேக்க போறதும் இல்லை.

ஆ. இரு கோடுகள் :

நான் சின்ன புள்ளையா இருக்கும் போது விளையாட்டா ஒரு கேள்வி கேப்பாங்க. ஒரே அளவுல ரெண்டு கோடு வரைஞ்சு, ஒன்னை இன்னொன்றை விட பெருசாக்கி காட்ட சொல்லுவாங்க. எல்லாருமே அதுக்கு ஒரு கோடை பெருசாக்குவாங்க. மாத்தி யோசி மக்கான்னு சொல்லி, ஒரு கோடை அழிச்சு சின்னாதாக்கி இப்பவும் இது பெருசாகிடிச்சுன்னு சொன்ன ஆட்களும் உண்டு.

இந்த தத்துவத்தை நம்ம மக்கள் நல்லாவே புரிஞ்சு வெச்சு இருகாங்க. இது அடித்தள மக்கள் கிட்டே இருந்து அரசன் ஆளுறவன் வரைக்கும் இருக்கு.

திரைப்படம் ஒலி நாடா வெளியீட்டு விழா நடக்குது, ஒரு இயக்குனரை கூப்பிட்டு இசை அமைப்பாளரை பாராட்டி பேச சொல்லி கூப்பிடறாங்க. நம்ம ஆள் என்ன பண்றாரு, இவருக்கு போட்டியாகவோ இல்லை இன்னொரு புகழ் பெற்ற இசை அமைப்பாளரை சூசகமா சொல்லி, இவரு அதை போல எல்லாம் இல்லை அப்படின்னு பேசுறாரு. நம்ம மக்களை பொறுத்த வரைக்கும் ஒருத்தனை புகழ்ந்து பேசறதுன்னா இன்னொருத்தனை திட்டி பேசறது அப்படிங்கற முடிவுல இருக்காங்க.

இந்த பாட்டு எப்படி இருக்கு, அந்த பாட்டை விட நல்லா இருக்கு. ஏன் உங்களுக்கு அந்த பாட்டுல இருக்கற நல்ல விடயம் தெரியலையா, இல்லை இப்படி சொன்னாத்தான் கை தட்டுராங்களா.

இதுக்கு எல்லாம் காரணம் யாருன்னா நாம தான். ஆமாங்க ஒரு படம் இரண்டரை மணி நேரத்துக்கு எடுக்கறாங்க அதை அப்படியே கிண்டல் பண்ணி அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ 'லொள்ளு சபா' அப்படிங்கறதுக்கு தானே அமோக ஆதரவு தர்றோம். கேட்டா காமடியாம்.

ஏன் நம்ம பதிவுலகத்துலையே எதிர் பதிவுக்கு தானே மவுசு கூட. :)

இந்த ரெண்டு விடயங்களை பத்தி யோசிக்க ஆரம்பிச்சாலே பெரிய பெரிய நல்ல விடயங்கள் கேட்கவும், தெளிவா நாம யோசிக்கவும் வாய்ப்பு இருக்கு. செய்வோமா ?? செஞ்சா நல்லது தான்.

அன்புடன்,
எஸ். கே.
SK
நான் வெளிநாட்டுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆக போகுது. வந்த புதுசுல யாரோடையோ சேர்ந்து இருக்கணும், சேர்ந்து சமைச்சு சாப்பிடனும் அப்படிங்கற எண்ணம் எல்லாம் போய்டிச்சு. ஏன்னா என்னோட அனுபவம் அப்படி. தனிமை பழகிக்கிட்டேன். இப்போ வேற இன்னொருத்தர் கூட சேர்ந்தது தங்கனும்னா ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கும் போல. (கல்யாணம் பண்ணா பொஞ்சாதி கூட இருக்காதே கஷ்டம் தான்னு நினைக்குறேன் :) :) )

நான் தங்கி இருக்கற விடுதில நிறைய இந்தியர்கள் இருக்காங்க. எல்லாரோடையும் பேசுவேன். ஆனா இந்த சேர்ந்து தங்கறது, சமைக்கறது இதுக்கு எல்லாம் ரொம்பவே அலர்ஜி. என்னோட அலைவரிசல் ஒத்து வராதுன்னு ஒரு எண்ணம். அது தான் உண்மையும் கூட. இதுனால எனக்கு ரொம்ப 'நல்ல' பேரு எல்லார்கிட்டயும் இங்கே. :).எனக்கு ஒருத்தருக்கு சமைக்கறதே பெரும் பாடு. என்னோட டைமிங்கும் ரொம்ப கஷ்டம். அப்படியே பழகியும் போச்சு.

நான் எப்போதும் ஆண்டவன் கிட்டே வேண்டுறது ஒண்ணே ஒண்ணு தான். என் ரூம் பக்கம் எந்த இந்தியனையும் கொண்டு வந்து தங்க வெச்சுடாதே. என்னால சமாளிக்க முடியாது. நான் ஒண்ணு கேட்டு அது அப்படியே நடந்தா அதுல என்ன சுவாரசியம் இருக்கு. வெச்சான் ஆண்டவன் ஆப்பு. எனக்கு நேர் எதிர் அறைல கொண்டு வந்து இந்தியர் ஒருத்தரை போட்டான். சரி ப்ளட் ஆரம்பம் ஆகா போகுதுன்னு நினைச்சேன் அதே மாதிரி நடந்தது, நடக்குது.
இவரு இந்தியாவுல இருந்து நேரடியா வரலை, ச்விடன்ள ஒன்றரை வருடமா இருந்து இருக்காரு. அதவாது அவருக்கு வெளிநாடு புதுசு கிடையாது. வந்த மொதோ நாளே சேர்ந்து தங்கலாமா அப்படின்னு கேட்டாரு. இல்லை சாரு எனக்கு ஆவாது அப்படினேன். சரி சேர்ந்து சமைக்கலாம் அப்படினாறு. இல்லை அண்ணேன் எனக்கு அது ஒத்து வராது அப்படினேன். இதுலையே பாதி மூஞ்சி தொங்கி போச்சு. ஆனா கூட்டிகிட்டு போய் கடை எல்லாம் சொல்லி கொடுத்தேன், எல்லாம் எங்கே என்ன வாங்கனும்னு எல்லாம் சொல்லிட்டேன்.


இப்போ ஒரு வாரமா என்ன நடக்குதுன்னா அண்ணே, உண்ணாவிரதம் இருக்கற மாதிரி ஒரு பீலிங். ஒண்ணு சாப்டாம தூங்குறாரு, இல்லை வெறும் ஊறுகா சாதம், தயிர் சாதம்னு சாப்பாடு போகுது. இப்படி தான் எப்போதும் சாப்பிடுவாரா இல்லை இங்கே வந்து தான் இப்படியான்னு தெரியலை. எது எப்படியோ எனக்கு இது அனாவசியமான விஷயம்.

என்னால இதை பாத்திட்டு வாய்யான்னு தினம் சமைச்சு போடவும் முடியலை (முடியாது), சரி என்னவோ பண்றாருன்னு விட்டுட்டு என் வேலைய பாக்க மனசு கேக்க மாட்டேங்குது. முடியலை. தர்மசங்கடமான நிலைமைக்கு கொண்டு போகுது. எனக்கு இது எல்லாம் தேவையா. சும்மா சிவனேன்னு இருந்தேன்.. :(

நான் என்ன பண்றது மக்கா ??

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னோட போன பதிவை பாத்திட்டு ஒரு நண்பன் கேட்டான். என்னடா பதிவு போட்ட உடனே பத்து பேரு வந்து பாத்து பதில் போட்டு இருக்காங்க அப்படின்னு.

நான் சொன்னேன், (தலைவர் ஸ்டைல்ல படிக்கவும்) 'தம்பி, எல்லாம் தான வந்த பின்னூட்டம் இல்லை, ஈமெயில் பண்ணி வரவெச்ச பின்னோட்டம்' அப்படின்னு :) :) (இதுவும் ஒரு விதத்துல தலைபோட ஒத்து போகுது :) :) :) )
SK
சர்க்கரை, ரத்த அழுத்தம், ஹைபர் டென்ஷன் இது எல்லாம் எப்படி ஒரு வியாதியோ என்னை பொறுத்த வரைக்கும் அதே போல ஒரு வியாதி தான் இந்த ஆர்வக்கோளாறு. அதோட விளைவா ஒண்ணு உதவி பண்றேன்னு வம்புல மாட்டுறது இல்லைன்னா கெட்ட பேரு வாங்குறது இல்லைனா ஆறுதல் சொல்றேன்னு அறிவுரை சொல்றது. இந்த வியாதி எனக்கு ரொம்பவே அதிகம். (குடும்ப வியாதின்னு கூட சொல்லலாம் :) )

நானா போய் வம்புல மாட்டுறது ஒரு விதம். தானா வந்து என்னை மாட்ட வைக்கறது ஒரு விதம். சில உதாரணங்கள் இப்போ

1. பன்னிரெண்டாவது படிச்சி ஒரு அளவுக்கு நல்ல மதிப்பெண் வாங்கிட்டு பொறியியல் கல்லூரில சேர்ந்திட்டு நான் பண்ண அட்டகாசம். என்னோட நண்பர்களோட சகோதரிகள் சகோதரர்கள் எல்லாரும் அப்போ தான் பன்னிரண்டாவது படிச்சாங்க. நான் பேசமா இருக்கவே மாட்டேன். மாசத்துக்கு ஒரு தடவை தான் வீட்டுக்கு போவேன். அப்பவும் இந்த தோழர்கள் வீட்டுக்கு போனா அவுங்க தங்கச்சி, தம்பிங்க கிட்டே போய் எப்படி படிக்கறே, என்ன மார்க் வருது, என்ன டியூஷன். ... இது போல ஆயிரத்து எட்டு கேள்வி. பாவம் புள்ளைங்க எவ்ளோ தான் தாங்குவாங்க. ஒரு அளவுக்கு மேல நான் வந்து இருக்கறதா வாசல்ல வண்டி நிக்கறதை வெச்சு கண்டு புடிச்சிட்டு அப்படியே வாசலோட ஓடி போய் நான் போன அப்பறம் வந்தவங்க எல்லாம் இருக்காங்க.

இதுல இருந்து இப்போ கொஞ்சம் மீண்டு வர்றேன். முடிஞ்சா வரைக்கும் யாரவது படிக்கறேன்னு சொன்னா, 'அப்படியா, ஆல் த பெஸ்ட். நல்லா படிங்க'. இதோட நிறுத்திக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.

இந்த தடவை இந்தியா வந்து இருக்கும் போதும், 'தம்பி, என் பையன் பன்னிரெண்டாவது படிக்கறான். உன்னை பாக்க அனுப்பறேன். கொஞ்சம் புத்திமதி சொல்லி அனுப்புப்பா'.
நான் மனசுக்குள்ள, 'ஏன் உங்க புள்ளை நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா ?? ', ஆனா வெளில சிரிச்சுகிட்டே 'ஹி ஹி ஹி, வர சொல்லுங்க'.

2. இந்த கெரகம் அதோட விட்டிச்சா, காலேஜ் போனாலும் விடறது இல்லை. ஏதோ நான் பெருசா சாதித்தது போலையும், ஜூனியர்ஸ் எல்லாருக்கும் ஒரே அட்வைஸ் தான். இந்த காரணத்துல என்னை புடிச்சவங்களும் உண்டு. என்னை பாத்து தலை தெறிக்க ஓடினவங்களும் உண்டு. உண்மைய சொல்லனும்னா, ஓடினவங்க தான் அதிகம்.

கொஞ்ச நாள் முன்னாடி இப்படி ஒரு ஜூனியர் கிட்டே பேசிட்டு இருந்தேன், 'அண்ணா, இது மாதிரி இருக்குன்னா. எதாவது அட்வைஸ் சொல்லுங்க அண்ணா' அப்படின்னு கேட்டான். 'அட்வைஸ் நானா. என்னடா காமெடி பண்றே'னு கேட்டேன். 'யோவ், ரொம்ப பந்தா பண்ணதையான்னு சொல்லிட்டு போறான்'. நானும் நல்லா புள்ளையா இருக்கணும்னு பாத்தா விட மாட்டேங்குறாங்கையா.

3. இந்த பழக்கம் சரி இந்தியாவோட போச்சு, வெளி நாடு வந்தமே அப்படின்னு ஒழுங்கா இருந்தமா. இங்கே வந்தும் இதே கெரகம் தான். தானா போய் உதவி பண்றேன்னு கெட்ட பேரு வாங்கினது அதிகம். அதுல ஒரு ரெண்டு கதை இங்கே சொல்லுறேன்.

தீசிஸ் எழுதிகிட்டு இருந்த நேரம். என்னை போலவே இன்னொரு இந்திய பையனும் தீசிஸ் எழுதி கிட்டு இருந்தான். நான் கொஞ்சம் நேரம் ஒதுக்கி 'எம். எஸ். வோர்ட்'ல எப்படி எளிமையா தீசிஸ் அடிக்கறதுன்னு கத்துகிட்டு செஞ்சு இருந்தேன். நம்ம புள்ளை அதே எடத்துல தடவி கிட்டு இருந்தாரு. இதை நான் போய் பாத்திட்டு, தம்பி, இப்படி இப்படி எல்லாம் பண்ணலாம்னு சொல்லி கொடுத்திட்டு (வெளில போற ஓணானை .... ') அவரோட தீசிஸ் தொண்ணூறு பக்கம், அதுல ஒரு முப்பது பக்கம் கிட்டே எப்படி செய்யறதுன்னு செஞ்சு வேற காமிச்சேன்.

ஒரு வாரம் கழிச்சு இன்னொரு நண்பன் கிட்டே சொல்லி இருக்காரு, 'இவன் தீசிஸ்'கு உதவி பண்றேன்னு என்னோட நேரம் எல்லாம் வீணடிச்சிட்டு போய்ட்டான்' அப்படின்னு. நான் சொல்லி கொடுத்த படி தான் தீசிஸ் செஞ்சு இருக்கார் அப்படின்னு அப்பறம் அவரோட தீசிஸ் பார்க்கும் போது தெரிஞ்சுகிட்டேன்.

4. சரி இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் நம்ம நாட்டு மக்கள் கிட்டே தான் நடக்கும் போல இருக்குன்னு நினைச்சேன். நமக்கு தான் அலைவரிசை ஒத்து வரலை. பேச தெரியாம பேசுறோம்னு நினைச்சுகிட்டேன். என் நேரம் சும்மா விடுமா என்னை.

இப்போ நான் இருக்கற ஊருல மெட்ரோ ரயில் நிறைய உபயோகிப்பாங்க. அங்கே ஒரு ரயில் போகிற பிளாட் போரம் கண்டு புடிக்கறது கொஞ்சம் கஷ்டம். மூக்கை சுத்தி போறா போல தான் போக வேண்டி இருக்கும். அது புதுசா வரவங்களுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும். எனக்கும் ஆரம்ப நாள்ல அப்படி தான் இருந்தது.

என்னோட கெட்ட நேரம் அந்த பிளாட் போரம் போற வழி தான் நான் எப்போதும் உபயோகிக்கற வழி. அங்கே நின்னுகிட்டு தொலாவிகிட்டு இருக்கறவங்களை பாத்தாலே தெரியும் இந்த பிளாட் போரம் தான் தேடிகிட்டு இருக்காங்க சொல்லி. என் சனி, வாய வெச்சுகிட்டு சும்மா இருப்பேனா. 'இதைத்தான் தேடுறீங்களா' அப்படின்னு அவுங்க பாஷைல போய் கேட்டு வழி சொல்லுறது. என் கலருக்கும், அவுங்க மொழிய தட்டி தடவி பேசறதுக்கும் பாத்து பயந்து ஓடினவங்க தான் அதிகம். ஒரு வேலை பிச்சை எடுக்க காசு கேட்டு வந்தேன்னு நினைபாங்கலோ இல்லை எதையாவது திருடிட்டு போய்ட போறான்னு நினைபாங்கலோ யாரு கண்டா.

இதுக்கு இப்போ சமீபமா ஒரு முடிவு கட்டிட்டேன். ஒரு புத்தகத்தை எடுத்து வெச்சு படிக்க ஆரம்பிச்சுடறது. சோ, தலை நிமிந்து பாத்தா தானே பிரச்சனையே. :) :)

5. அடுத்து நம்ம விஷயத்துக்கு வருவோம். பதிவுலகம். பதிவை படிச்சோம், பின்னூட்டம் போட்டோம் அட்லீஸ்ட் ஒரு ஸ்மைலி போட்டோம் இல்லைனா மூடிகிட்டு இருந்தோம்னு இருக்கணும். அப்படியும் இல்லையா நீயே ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு உனக்கு என்ன பொலம்பனும் அப்படின்னு தோணுதோ பொலம்பிக்கோ.

ஏதோ நான் தான் சமூகத்தை சீர் திருத்த வந்தவன் போல நல்லா எழுதறவங்க கிட்டே போய் நீங்க இந்த தலைப்பை பத்தி எழுதலாமே அப்படிங்கறதும். இன்னும் ஆர்வ கோளாறு அதிகமா போய் பர்சனல் ஈமெயில் முகவரில தொடர்பு கொண்டு பதிவை பத்தி எதாவது நல்லது இருந்தா சொல்றது, கேள்வி இருந்தா கேக்குறது. இந்த மாதிரி தேவையே இல்லாத வேலை எல்லாம் செய்யறது. இந்த விடயத்தை கம்மி பண்ண ரொம்ப முயற்சி பண்ணிட்டு இருக்கேன். பண்ணிடுவேன் வெகு விரைவில். :). அரை கழுதை வயசாகுது, இதை கூட செய்யலைனா எப்படி மக்கா.

இது எல்லாம் என்னோட ஜகதல பிரதாபங்கள்ள ஒரு பகுதி. இப்படியே தினம் பன்னு வாங்கி வாங்கி ஒரு பேக்கரியே நடத்தலாம் போல இருக்கு. இதை போல் தொந்தரவு என்னால் உங்கள் யாருக்கேனும் ஏற்பட்டு இருந்தால் மன்னிச்சுகோங்க மக்கா. திரித்திகொள்ள முயற்சி பண்றேன். இந்த வியாதிய கம்மி பண்ண உங்களுக்கு ஏதாவது ஐடியா தோணிச்சுனா சொல்லிட்டு போங்க. அதையும் முயற்சி பண்ணி பாத்துடறேன்.

அளவில்லா புலம்பலுடன் :) :)
எஸ். கே.