நான் இருப்பது பெர்லின். பெர்லின் இந்த ஆண்டு 2009 பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளை கொண்டாடுகிறது . முடிந்தால் இந்த வரலாறை பற்றி பின்னொரு நாளில் எனக்கு தெரிந்தவற்றை எழுதுறேன்.
இந்த சுவர் இடிக்க பட்ட அன்று மற்றும் அந்த ஆண்டில் இங்கு நிலவிய ஆனந்தம் சொல்லி விவரிக்க முடியாது. அது இங்கே உள்ள படங்கள் மற்றும் ஒளிநாடாக்களை பார்க்கும் போது தெரியும். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி இருந்த பிரிவினைகள், இதனால் வாடிய குடும்பங்கள், சுவர் இடித்த பிறகு இணைந்த குடும்பங்கள் அவர்களின் நிலையை கேட்கும் பொழுது மிக சந்தோஷமாகவும் ஒரு வித திருப்தியும் நமக்குள்ளே தானாக வரும். இன்னும் கிழக்கு பகுதியில் உள்ள இடங்கள் மேற்கு பகுதியில் உள்ள இடங்களை போல் 100% இல்லை எனினும் அதற்குரிய அனைத்து வேலைகளும் நடக்கின்றன.
மேற்கு பகுதியில் வாழ்கின்ற மக்கள் இன்றும் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதி கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது கட்டயாமாக அவர்களது சம்பளத்தில் இருந்து சென்று விடும். இதை பற்றி பல் வேறு கருத்துக்கள் நிலவினாலும் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களை வளர்க்க இது மிகவும் உதவியாக உள்ளது. வளர்ச்சி பெற்றும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவர் இடிக்கப்பட்ட இந்த இருபது வருடத்திற்கு பிறகு அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த ஜெர்மனியில் வாழ்கிறார்கள். இது அவர்கள் மனதிலும் உள்ளது. இங்கே உள்ள சான்சிலர் திருமதி. மெர்கெல் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஏதோ குறிப்பிடுகையில் கிழக்கு ஜெர்மனி என்று குறிப்பிட போய் எதிர் கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அவரை கிழித்து தொங்க போட்டு விட்டார்கள். அவர்களுக்குள் அந்த பாகுபாடு மிகவும் குறைவு. இல்லை என்று சொல்ல முடியாது. குறிப்பாக தெற்கு பகுதி மக்கள் பாயர்ன் எனும் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அரசியல், விளையாட்டு போன்று எல்லாவற்றிலும் மிகவும் ஆளுமை உடையவர்கள். அவர்களுக்கு அவர்கள் மாநிலத்தை பற்றிய ஒரு தற்பெருமை உண்டு எனவும் சொல்லலாம். அது ஒரு தனி கதை.
எந்த அளவிற்கு மாற்றம் என்றால், 'நீங்க எந்த ஊரை சேர்ந்தவர்?' என்று கேட்கும் பொழுது 'நான் பழைய இந்த ஜெர்மனி' என்று எவருமே குறிப்பிடுவது இல்லை. நான் இந்த ஊர், இந்த மாநிலத்தில் உள்ளது என்றே கூறுவார்கள். அவர்கள் மனதில் 80% மேல் அந்த பிரிவினை இல்லை எனவும் கூறலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்ற வாரம் ஒரு விருந்துக்கு சென்று இருந்தேன். அங்கு மகாராஷ்டிரத்தை சேர்ந்த நண்பர்கள் வந்து இருந்தார்கள். ஒரு நண்பர் என்னை அவரது நண்பரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். 'இவருடைய பெயர் குமார், இவர் சவுத் இந்தியன்'.
இது அவர் மட்டும் அல்ல நம் மக்களும் 'நார்த் இந்தியன் மச்சான் அவன்' என்றே அறிமுகம் செய்கிறார்கள்.
'வோ மதராசி ஹாய் சாலா', ' அவன் ஹிந்தி காரன் மச்சான்' என்பது பேச்சு வழக்கு.
தென் இந்தியா, வட இந்தியா என்ற நாடுகள் எங்கே இருந்து வந்தன ?? ஏன் அப்படி சொல்லி பழக வேண்டும். 'என்னை நீங்கள் எங்கிருந்து வருகுறீர்கள் என்று கேட்டால், நான் இந்தியா, இந்தியாவில் தமிழ்நாடு, அது தெற்கு பகுதியில் உள்ளது என்று தான் அறிமுகம் செய்துகொண்டு பழக்கம்.
இப்படி சொல்வதனால் என்ன ? உடனே பிரிவினை ஆகிடுவோமா என்று கேட்கும் நண்பர்களுக்கு ஒரு உதாரணம்.
புனேவை சேர்ந்த ஒரு நண்பரிடம் ஒரு மாணவனுக்கு தேவையான உதவி குறித்து விளக்கி கொண்டு இருந்தேன். அவர் பதிலுக்கு 'நான் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு தோழரை அறிமுகம் செய்து வைக்கிறேன், அவரிடம் பேசுங்கள். அவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்' என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். இது குறிப்பிட்டு கூறும் அளவுக்கு இரண்டு மூன்று முறை நடந்தது. அதாவது ஒரு தமிழ் மாணவனுக்கு உதவி என்றால் அதை ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் செய்ய வேண்டுமா ??
முன்னே சொன்னதில் கல்லால் ஆன சுவர் இருந்தது, இடிக்கப்பட்டது, இல்லாமல் போனது. பின்னே சொன்னதில் கண்ணுக்கு தெரியாத சுவர் ஒன்று இருக்கிறது. இடிக்க முடியுமா ??
கற்சுவரை இடிக்கலாம். மனச்சுவரை இடிப்பது மிக கடினம்.
என் புரிதலில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்ற வாரம் ஒரு டாகுமெண்டரி பார்க்க சென்று இருந்தேன். இந்தியா - பாகிஸ்தான் பற்றிய தொகுப்பு அது. முடிந்தால் அந்த டாகுமெண்டரி பற்றியும், விவரம் பற்றியும் பின்னர் எழுதுறேன். அந்த டாகுமெண்டரி பார்த்த பிறகு கூட்டத்தில் இருந்து ஒரு ஜெர்மன் கேட்டார், 'ஏன் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையான இந்த கதவை உடைத்து மீண்டும் ஒரே நாடாக மாற கூடாதா ??' என்று. என்ன பதில் சொல்லன்னு சொல்லிட்டு போங்க மக்கா.
அன்புடன்,
எஸ். கே.
இந்த சுவர் இடிக்க பட்ட அன்று மற்றும் அந்த ஆண்டில் இங்கு நிலவிய ஆனந்தம் சொல்லி விவரிக்க முடியாது. அது இங்கே உள்ள படங்கள் மற்றும் ஒளிநாடாக்களை பார்க்கும் போது தெரியும். கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி இருந்த பிரிவினைகள், இதனால் வாடிய குடும்பங்கள், சுவர் இடித்த பிறகு இணைந்த குடும்பங்கள் அவர்களின் நிலையை கேட்கும் பொழுது மிக சந்தோஷமாகவும் ஒரு வித திருப்தியும் நமக்குள்ளே தானாக வரும். இன்னும் கிழக்கு பகுதியில் உள்ள இடங்கள் மேற்கு பகுதியில் உள்ள இடங்களை போல் 100% இல்லை எனினும் அதற்குரிய அனைத்து வேலைகளும் நடக்கின்றன.
மேற்கு பகுதியில் வாழ்கின்ற மக்கள் இன்றும் தங்களது சம்பளத்தில் ஒரு பகுதி கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது கட்டயாமாக அவர்களது சம்பளத்தில் இருந்து சென்று விடும். இதை பற்றி பல் வேறு கருத்துக்கள் நிலவினாலும் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களை வளர்க்க இது மிகவும் உதவியாக உள்ளது. வளர்ச்சி பெற்றும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுவர் இடிக்கப்பட்ட இந்த இருபது வருடத்திற்கு பிறகு அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த ஜெர்மனியில் வாழ்கிறார்கள். இது அவர்கள் மனதிலும் உள்ளது. இங்கே உள்ள சான்சிலர் திருமதி. மெர்கெல் அவர்கள் சில நாட்களுக்கு முன்பு ஏதோ குறிப்பிடுகையில் கிழக்கு ஜெர்மனி என்று குறிப்பிட போய் எதிர் கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அவரை கிழித்து தொங்க போட்டு விட்டார்கள். அவர்களுக்குள் அந்த பாகுபாடு மிகவும் குறைவு. இல்லை என்று சொல்ல முடியாது. குறிப்பாக தெற்கு பகுதி மக்கள் பாயர்ன் எனும் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அரசியல், விளையாட்டு போன்று எல்லாவற்றிலும் மிகவும் ஆளுமை உடையவர்கள். அவர்களுக்கு அவர்கள் மாநிலத்தை பற்றிய ஒரு தற்பெருமை உண்டு எனவும் சொல்லலாம். அது ஒரு தனி கதை.
எந்த அளவிற்கு மாற்றம் என்றால், 'நீங்க எந்த ஊரை சேர்ந்தவர்?' என்று கேட்கும் பொழுது 'நான் பழைய இந்த ஜெர்மனி' என்று எவருமே குறிப்பிடுவது இல்லை. நான் இந்த ஊர், இந்த மாநிலத்தில் உள்ளது என்றே கூறுவார்கள். அவர்கள் மனதில் 80% மேல் அந்த பிரிவினை இல்லை எனவும் கூறலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்ற வாரம் ஒரு விருந்துக்கு சென்று இருந்தேன். அங்கு மகாராஷ்டிரத்தை சேர்ந்த நண்பர்கள் வந்து இருந்தார்கள். ஒரு நண்பர் என்னை அவரது நண்பரிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். 'இவருடைய பெயர் குமார், இவர் சவுத் இந்தியன்'.
இது அவர் மட்டும் அல்ல நம் மக்களும் 'நார்த் இந்தியன் மச்சான் அவன்' என்றே அறிமுகம் செய்கிறார்கள்.
'வோ மதராசி ஹாய் சாலா', ' அவன் ஹிந்தி காரன் மச்சான்' என்பது பேச்சு வழக்கு.
தென் இந்தியா, வட இந்தியா என்ற நாடுகள் எங்கே இருந்து வந்தன ?? ஏன் அப்படி சொல்லி பழக வேண்டும். 'என்னை நீங்கள் எங்கிருந்து வருகுறீர்கள் என்று கேட்டால், நான் இந்தியா, இந்தியாவில் தமிழ்நாடு, அது தெற்கு பகுதியில் உள்ளது என்று தான் அறிமுகம் செய்துகொண்டு பழக்கம்.
இப்படி சொல்வதனால் என்ன ? உடனே பிரிவினை ஆகிடுவோமா என்று கேட்கும் நண்பர்களுக்கு ஒரு உதாரணம்.
புனேவை சேர்ந்த ஒரு நண்பரிடம் ஒரு மாணவனுக்கு தேவையான உதவி குறித்து விளக்கி கொண்டு இருந்தேன். அவர் பதிலுக்கு 'நான் என்னுடன் வேலை பார்க்கும் ஒரு தோழரை அறிமுகம் செய்து வைக்கிறேன், அவரிடம் பேசுங்கள். அவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்' என்று அழுத்தம் திருத்தமாக சொன்னார். இது குறிப்பிட்டு கூறும் அளவுக்கு இரண்டு மூன்று முறை நடந்தது. அதாவது ஒரு தமிழ் மாணவனுக்கு உதவி என்றால் அதை ஒரு தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் செய்ய வேண்டுமா ??
முன்னே சொன்னதில் கல்லால் ஆன சுவர் இருந்தது, இடிக்கப்பட்டது, இல்லாமல் போனது. பின்னே சொன்னதில் கண்ணுக்கு தெரியாத சுவர் ஒன்று இருக்கிறது. இடிக்க முடியுமா ??
கற்சுவரை இடிக்கலாம். மனச்சுவரை இடிப்பது மிக கடினம்.
என் புரிதலில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிகாட்டுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்ற வாரம் ஒரு டாகுமெண்டரி பார்க்க சென்று இருந்தேன். இந்தியா - பாகிஸ்தான் பற்றிய தொகுப்பு அது. முடிந்தால் அந்த டாகுமெண்டரி பற்றியும், விவரம் பற்றியும் பின்னர் எழுதுறேன். அந்த டாகுமெண்டரி பார்த்த பிறகு கூட்டத்தில் இருந்து ஒரு ஜெர்மன் கேட்டார், 'ஏன் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையான இந்த கதவை உடைத்து மீண்டும் ஒரே நாடாக மாற கூடாதா ??' என்று. என்ன பதில் சொல்லன்னு சொல்லிட்டு போங்க மக்கா.
அன்புடன்,
எஸ். கே.