SK
சமீபமா மல்லாக்க படுத்து யோசிக்கும் எனக்கும் இந்த நவம்பர் மாசத்துக்கும், டிசம்பர் மாசத்துக்கும் பயங்கர தொடர்பு இருக்கறதா பட்சி சொல்லிச்சு. 2002'ல இருந்து யோசிச்சு பாத்தேன், ஒவ்வொரு நவம்பரும் டிசம்பரும் எனக்கு நித்திய கண்டம் பூரனாயிசா தான் போகுது. நீங்களே சொல்லுங்க நண்பர்களே இதுக்கு நான் என்ன பண்ணலாம்னு.

2002 :

நான் கல்லூரில கடைசி வருஷம் படிச்சுகிட்டு இருந்தேன். கம்பெனி எல்லாம் வந்து ஆள் எடுக்கற நேரம். நாங்க எல்லாம் கொள்கைல ரொம்ப பிடிவாதமா இருக்கோம்னு சொல்லி சாப்ட்வேர் வேலை எதுக்கும் உட்காரலை. என்னோட படிப்பு சம்பந்தமா கம்பெனி அதிகமா வரலை. அதுக்காக கம்பெனி எல்லாம் கூப்பிடறதுக்கு நாங்களா ஒரு ஆறு பேரு கிளம்பி மெட்ராஸ் போய் கம்பெனி எல்லாம் கூப்பிட்டு வந்தோம்.

மதராஸ்ல வேகாத வெயில்ல பத்து நாள் சுத்து சுத்துன்னு சுத்திட்டு கோயம்புத்தூர் திரும்ப வரும் பொது தேதி டிசம்பர் 25. வந்து படுத்தவன் தான் எந்திரிக்க முடியலை. சரியான காய்ச்சல். பொட்டிய கட்டிக்கிட்டு ஊருக்கு போய்டேன். அங்கே போனா சொல்றாங்க, அம்மை போட்டு இருக்கு உனக்கு. இன்னும் மூணு வாரம் நகர முடியாது அப்படின்னு.

ஜனவரி முதல் வாரத்துல நாங்க மெட்ராஸ் போய் கூப்பிட்டு வந்த கம்பெனி எல்லாம் எங்க காலேஜ் வந்து ஆள் எடுத்திட்டு போய்டாங்க. பொங்கல் கழிச்சு காலேஜ் போகும் போது எனக்கு பாக்கி இருந்தது எல்லாம் பன்னு தான். :(

2003 :

படிச்சு முடிச்சிட்டு வேலை தேடிகிட்டு இருந்த வருஷம். இந்த வருஷ நவம்பர், டிசம்பர் எல்லாம் எப்படி போச்சுன்னே தெரியாது. திங்க கிழமை ஆபிஸ் போனா, தம்பி இன்னைக்கு நைட் கெளம்பி கோயம்புத்தூர் போயிட்டு நாளைக்கு திரும்ப வரணும்னு சொல்லுவாங்க. சில வாரம் அப்படியே கோயம்புத்தூர் போயிட்டு, ஈரோடு , சேலம் அப்படியே மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி எல்லாம் சுத்திட்டு மெட்ராஸ் போவேன்.

ஆனா எனக்கு தெரிஞ்சு கடைசி ஆறு வருஷ நவம்பர், டிசம்பர்ல நான் நிம்மதியா இருந்தது இந்த வருஷமாத்தான் இருக்கும்னு நினைக்குறேன். மதராஸ்ல இருந்த இந்த நாட்களை பத்தி தனி பதிவே எழுதலாம்.

2004:

ரொம்ப கொடுமையான வருஷம். நான் ஒரு அதல பாதாளத்துல விழறேன்னு தெரியாம விழுந்த தருணம்னு சொல்லலாம். ஜெர்மனி வந்து ரெண்டு மாசம் ஆன நேரம். என்னோட அறை நண்பர்கள் இரண்டு பேரு. நான் இவ்வளவு வெள்ளந்தியா இருந்து இருக்கேன்னு இப்போ நினைச்சா கூட கண்ணை கட்டுது.

நான் இந்தியாவுல இருந்து எடுத்து வந்த பணத்துல பணத்துல ஒரு கணிசமான தொகைய நண்பர்கள் கிட்டே ஏமாந்தேன். சோ கைல காசு பூஜ்ஜியம்.

இந்த ஒரு தப்பு செஞ்சதுக்கு நான் கொடுத்த விலை ரொம்ப அதிகம். எத்தனையோ தூக்கம் இல்லாத நாட்கள், பசியோடு தூங்கின இரவுகள், கம்மியா வாங்கின மதிப்பெண்கள், வாழ்க்கை மீது எனக்கு வந்த ஒரு வெறுப்பு. என்ன இதை பத்தி யாரு கிட்டயும் சொல்ல முடியாது. சொல்லி வீட்டுக்கு தெரிஞ்ச பொட்டிய கட்ட சொல்லி உத்தரவு வந்திடும்.

2005 :

2004 செஞ்ச தப்பே என்னை தொரத்தி தொரத்தி அடிச்சது. இதுல தப்பிக்கலாம் அப்படின்னு ஊரு மாறி இன்னொரு ஊருக்கு போய் அங்கே கொஞ்சம் பணத்தோட படிப்பு சம்பந்தமா வேலை கிடைச்சுது. சரி இனியாவது ஒழுங்கா இருக்கணும் அப்படின்னு இருந்தேன். அங்கேயும் நமக்கு வந்தது சனி. நான் போன ஊருல வீட்டு வாடகை கொஞ்சம் அதிகம். சரி நாம நம்ம ஊரு மக்கள் கூட தங்கின கொஞ்சம் செலவும் கம்மி ஆகும், பேச்சு துணை மேலும் ஆள் துணையும் இருக்கும்னு நினைச்சேன். அது தான் நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு.

நண்பர்கள் அலைவரிசை, நேரம், பொழுது போக்கு எதுவுமே என்னோட ஒத்து போகலை. நவம்பர் கொஞ்சம் டேர்ரரா தான் போச்சு. டிசம்பர்ல தனி குடுத்தனம் போறதுன்னு முடிவு செஞ்சேன். நவம்பர், டிசம்பர் 2005 ஒரு மாதிரி போச்சு. அப்போ முடிவு செஞ்ச தனி குடுத்தனம் தான் இப்போ வரை தொடருது.

2006 :

2005 வருசத்தோட எல்லா சனியும் முடிஞ்சது அப்படின்னு இருந்தா, வந்தது ஆப்பு இன்னொரு பக்கத்துல இருந்து. என்னோட மாஸ்டர்ஸ் முடிக்க தீசீஸ் செய்யணும். அது நான் வேலை செஞ்ச எடத்துலியே முடிவு பண்ணி வெச்சிட்டு, என்னோட அருமை வாத்தியார் கிட்டயும் பேசி சரி பண்ணிட்டேன். வாத்தியாரும் ஈமெயில் செஞ்சுட்டாரு. சரி எல்லாம் முடிஞ்சுடிச்சு அப்படின்னு வீட்டுக்கு சொல்ல தொலை பேசினேன். அம்மா பாசமா கூப்பிடாங்க, அதான் எல்லாம் சரியா போகுது அப்படின்னு நானும் இந்தியா போறதுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சுட்டேன்.இது எல்லாம் ரெண்டு மணி நேரத்துல நடந்தது.

இந்தியா வந்து இறங்கி மெயில் செக் செஞ்சா, வந்தது குண்டு. என்னோட வாத்தியார் எதோ குழப்பம் செஞ்சுட்டாரு. இனி நான் அந்த கம்பெனில தீசீஸ் செய்ய முடியாதுன்னு தெரிஞ்சது. இருபது நாள் இந்தியாவுல, நிம்மதியா இருக்கவும் முடியலை. கவலை பட்டுகிட்டே இருக்கவும் முடியலை.

2007 :

நல்ல படியா தீசீஸ் எல்லாம் செஞ்சு முடிக்க வேண்டிய நேரம். எப்போதும் போல தீசீஸ் செய்யற நேரத்துல இருக்கற வேலை. முடிஞ்சா போதும் அப்படின்னு ஆகி போச்சு. எல்லாரும் கிறிஸ்துமஸ் கொண்டாடிகிட்டு இருந்த நேரம், நான் கம்ப்யூட்டர் கூட சண்டை போட்டுக்கிட்டு இருந்தேன்.

2008 :

கொஞ்சம் உஷாரா இருக்கணும்னு இருந்தேன். இருந்தாலும் ஆப்பு அடிச்சுடிச்சு. நல்லா வேலை செஞ்சுகிட்டு இருந்த என்னோட வேலை, மக்கர் பண்ணிச்சு. திரும்ப ஜெர்மனி விட்டு ஓடிடலாம் அப்படிங்கற அளவுக்கு தொரத்தி தொரத்தி அடிச்சது. அப்பறம் அதுல இருந்து தப்பிச்சு வந்த்துட்டேன்.

இதோ இன்னும் ஒரு வாரம், 2009 வருஷத்துக்கான நவம்பர், டிசம்பர் எனக்கு என்ன சொல்லித்தர போகுதுன்னு தெரியலை. ஆனா ஏதோ தனியா இருக்கரா போலத்தான் தெரியுது. ஆப்புகள் எல்லா பக்கமும் நிக்கறா போல ஒரு பீலிங்க்ஸ் அல்ரெடி இருக்கு. சோ மக்கா எல்லாரும் எனக்காக உம்மாச்சிகிட்டே வேண்டிக்கோங்க. ஆப்பே வேணாம்னு சொல்லலை. ஆனா கொஞ்சம் பாத்து அடிக்க சொல்லுங்க.

அன்புடன்
எஸ். கே.
7 Responses
  1. நல்லா யோசிக்கறாங்கப்பா மல்லாக்கப் படுத்து :))))))))))

    ஒன்னும் ஆகாது ராசா


  2. Anonymous Says:

    கொமாரு ஒன்னும் ஆவாது, எல்லாம் நல்லபடியா முடிஞ்சா, நமக்கு பிடிக்காத நண்பருக்கு மொட்டை போடறதா முக்கு வீதி முனி, பக்கத்து ஊரு பெருமாள், அம்பது கிலோ மீட்டர் தள்ளி இருக்கற மசிரி யாத்தா எல்லோருக்கும் வேண்டிகிட்டேன்.. :))))))


  3. பதி Says:

    ஆஹா.....

    ஒரு சோக கதை டிபார்ட்மெண்டே இருக்கும் போல இருக்கே...

    கவலைப்ப்டமா இருங்க ராசா !!!!!


  4. Sowmya Gopal Says:

    ahaa...idhu enna oru paavamana autobiographya irukke...ana idhayum thaandi inga irukardhu, germany pathi blog ezhudardhu ellam super - shows your attitude and perseverance! if you keep it up, nov, dec enna vera endha monthalayum onnum panna mudiyadhu !


  5. SK Says:

    அமித்து அம்மா, ஆகக்கூடாது.. :-)

    மயில் அக்கா, நல்லா வேண்டிக்கறீங்க.. :-)

    பதி, இது ஒரு நூல் தான் ... இன்னும் சொல்லலாம் நிறைய இருக்கு.. :-)

    SG , அந்த நம்பிக்கைல தான் காலம் தள்ளிகிட்டு இருக்கேன். :-)


  6. இந்த நவம்பர்,டிசம்பர் பத்தி அடுத்த வருஷம் புலம்பல்ல எழுத மாட்டீங்க :-):-)


  7. ஆஹா இப்படி எல்லாம் நம்புவிங்களா? அடுத்த வருசம் 2009 நல்லவிதமா போச்சுன்னு பதிவு போடுவிங்க. நான் சாமி கிட்ட சொல்லி வெச்சுடறேன். கவலை படாதீங்க எஸ்.கே