SK
என்னதான் பெரிய புத்திசாலி அப்படி இப்படி எல்லாம் சொன்னாலும், நம்ம எதிர் காலத்தை பத்தி ஒருத்தர் நமக்கு முன்னாடியே சொல்றாரு அப்படின்னா நமக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். நான் முடிஞ்சா வரைக்கும் நேரடியா போய் ஜோசியம் பார்க்கிறது இல்லை. ஆனா போய் பாத்திட்டு வந்து சொன்னா கெடுக்கறது.

இப்படி தான் ஒரு அஞ்சு வருஷம் முன்னாடி, நான் பாச்சலர் படிச்சு முடிச்சிட்டு அடுத்து என்ன பண்ணலாம் அப்படின்னு இருந்த நேரம். நானும் எங்க சித்தி ஒருந்தங்களும் போனோம். அவர் கிட்டே ஜாதகத்தை நீட்டிபுட்டு உட்காந்தேன். அவரும் அதை பாத்தாரு, கணக்கு போறாரு, எதோ கிருக்கினாறு.. அப்படியே தாடிய சொறிஞ்சுகிட்டு ஆரம்பிச்சாரு. 'இந்த ஜாதகக்காரர் படிச்சு முடிச்சு வேலைக்கு போவாரு. இவருக்கு இதுக்கு மேல படிக்க வாய்ப்பு இல்லை. கூடிய சீக்கரம் வேலை கிடைக்கும் தம்பி' அப்படின்னு சொன்னாரு. எனக்கு பகீர்னு தூக்கி வாரி போட்டிச்சு. அதுக்கு ஒரு வாரம் முன்னாடி தான் ஜேர்மன் அட்மிஷன் லெட்டர் வாங்கி வெச்சிட்டு வந்தேன். நல்ல இருங்க சாமி அப்படின்னு அவரை வாழ்த்திட்டு வந்துட்டேன். அதை பத்தி நான் பெருசா யோசிக்கல அப்பறம். மாஸ்டர்ஸ் முடிக்கும் பொது தீசிஸ் செய்யும் போது ஒரு சின்ன சிக்கல்ல மாட்டிகிட்டேன். படிச்சு முடிப்பமா அப்படின்னு ஒரு சூழ்நிலை. அந்த ரெண்டு மாசம், இந்த ஜோசியக்காரரும்,அவர் சொன்னதும் தான் கனவுல வந்தது. ஒரு வேலை நாம மேல் படிப்பு படிக்க வந்ததே தப்போ அப்படின்னு ஒரு டேர்ரரா யோசிக்க வைச்சுடிச்சு. அப்பறம் அதையும் தாண்டி வந்தாச்சு.

அப்பறம் இப்போ சமீபத்துல அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சது. நம்ம மக்கள் தான் சும்மா இருக்க மாட்டாங்க இல்லை, 'அண்ணனுக்கு முடிஞ்சுடிச்சு, அப்படியே தம்பிக்கும் சட்டு புட்டுன்னு முடிக்க வேண்டியது தானே' அப்படின்னு ஒரு பிட்டு. 'யோவ் சும்மா இருய்யா' அப்படிங்கற அளவுல அவுங்களை எல்லாம் அடக்கி அமுத்தி வைக்க முயற்சி செஞ்சேன். அப்படியே அப்பா, அம்மா எல்லாரையும் தேத்தி இன்னும் ஒரு ரெண்டு வருஷம் எதை பத்தியும் யோசிக்காதீங்க அப்படின்னு சொல்லி ஆசுவாசப்படுத்தி வெச்சேன். நமக்கு தான் விதி வலியது ஆச்சே. கை ஜோசியம் பாக்கரவங்கள்ள இருந்து, நாடி ஜோசியம், மூஞ்சி ஜோசியம் வரைக்கும் நமக்கு ஆப்பு அடிக்கறதுன்னா தான் மொத்தமா கெளம்பி வருவாங்களே. இவங்க எல்லாரும் சேந்து மொத்தமா சொன்ன ஒரே விஷயம், 'இந்த பையன் எதாவது ஒரு பொன்னை இழுத்திட்டு வந்துடுவான், காதல் கல்யாணம் தான் அப்படின்னு' போடாங்க பாருங்க ஒரு குண்டை. நான் அஞ்சு மணி நேரம், ஆறு மணி நேரம் பேசி பஞ்சாயத்து பண்றதை ஒரே ஒரு நிமிஷத்துல போட்டு தூள் தூள் ஆக்கிடுவாங்க. 'இன்னும் சிலர் வெள்ளக்காரிய கூட்டிகிட்டு வந்தாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்லை' அப்படின்னு நாலஞ்சு பிட்டை செத்து போடுறாங்க. 'மக்களே, உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா'. நல்லா இருங்கடா டேய். அப்படின்னு ஒவ்வொரு முறையும் பஞ்சாயத்து நடக்குது.

இந்த பதிவை எழுத தூண்டியது இப்போ சமீபத்துல நடந்த ஒரு நிகழ்வு. இங்கே ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போய் இருந்தேன். அங்கே விலை கொஞ்சம் கம்மியா இருக்கும், மேலும் நம்ம ஊர்காரரு வெச்சு இருக்காரு. சாப்பிட்டு பில் கொடுக்க போனேன். என்னைய பாத்தவரு, 'வாங்க தம்பி' அப்படின்னு ஆரம்பிச்சாரு. நான் அப்போவே உஷார் ஆகி இருக்கணும். நமக்கு தான் விதி வலியது ஆச்சே. பேச்சுவாக்குல ஆரம்பிச்சாரு, 'தம்பி, உங்க பொறந்த தேதி' அப்படின்னாரு. நான் சடார்னு சுதாரிக்கரதுக்குல, 'பொறந்த தேதியோட கூட்டல் தொகை சொல்லுங்க தம்பி' அப்படின்னாரு. 'எட்டு இல்லை தம்பி வருது, எட்டு வந்தா படிக்க மாட்டாங்களே, மெக்கானிக், வரையறது இது போல எதாவது பக்கம் இல்லை போவாங்க,நீங்க படிக்கரீங்களே, பரவா இல்லையே' அப்படின்னாரு. 'மொதோ தப்பு நான் இங்கே சாப்பிட வந்தது' அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டு, சிரிச்சுகிட்டே காசை கைல கொடுத்திட்டு ஓடி வந்திட்டேன். எனக்கு இது தேவையா மகாஜனங்களே. நான் பாட்டுக்கு அமைதியா இருந்தாலும் வம்பு எங்க விடறேங்குது என்னைய.

சரி இது தான் இப்படி போகட்டும் சொல்லி வீட்டுக்கு போன் செஞ்சேன், 'கண்ணு அஷ்டமத்துல சனியாம், கொஞ்சம் வாய கொறைச்சு சூதனமா இருந்துக்க அப்படினாங்க'. நான் என் இனி பேசறேன். எங்க போனாலும் நம்மளை சுத்தி அடிக்கறாங்க மக்கா. எதோ நல்ல இருந்தா சரி தான்.

அன்புடன்,
எஸ். கே.
9 Responses
  1. // கொஞ்சம் வாய கொறைச்சு சூதனமா இருந்துக்க அப்படினாங்க'.//

    ஆம்மாங்க .. பார்த்து சூதனமா இருந்துக்குங்க..


  2. நல்லாயிருப்போம் நல்லாயிருப்போம் எல்லோரும் நல்லாயிருப்போம் சகா :)))


  3. 'கண்ணு அஷ்டமத்துல சனியாம், கொஞ்சம் வாய கொறைச்சு சூதனமா இருந்துக்க

    :))))))))

    இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கா. நமக்கு ஆல்ரெடி இருக்கு


  4. //'இன்னும் சிலர் வெள்ளக்காரிய கூட்டிகிட்டு வந்தாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்லை'///


    ;;))



  5. Anonymous Says:

    ஜோசியகாரறு ரொம்ப கரெக்டா தான் சொல்லிருகாறு குமாரு, மாட்டு மேசாப்படியும் ஆச்சு, சித்தப்புக்கு பொண்ணு பாத்தா மாதிரியும் ஆச்சு :)


  6. RAMYA Says:

    ரொம்பதான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கீங்க தம்பி!

    சீக்கிரமா உங்க பிறந்த தேதியை எனக்கு அனுப்பி வையுங்க
    நீங்க என்ன வெல்லாம் நினைக்கிறீங்களோ அதே மாதிரி
    நான் ஜோசியம் சொல்றேன்:)

    ஹி ஹி ஹி ஹி!!!

    எங்கேயும் வம்பை விலை கொடுத்து வாங்காதீங்க :)

    ஆனா வந்த வம்பை விடாதீங்க :)

    உங்களுக்கு ஜோசியம் பார்க்க வந்தா நீங்க அவங்களுக்கு ஜோசியம் பார்த்துடுங்க :)


  7. RAMYA Says:

    ஆமா வெள்ளைக்காரியை பார்த்தாச்சா
    இனிமேல்தான் பார்க்கனுமா :)

    பாத்து தங்கம் வீணா சிக்கிக்க வேணாம் உஷாரு! உஷாரு!..... :-)


  8. nila Says:

    'இந்த பையன் எதாவது ஒரு பொன்னை இழுத்திட்டு வந்துடுவான், காதல் கல்யாணம் தான் அப்படின்னு' போடாங்க பாருங்க ஒரு குண்டை. நான் அஞ்சு மணி நேரம், ஆறு மணி நேரம் பேசி பஞ்சாயத்து பண்றதை ஒரே ஒரு நிமிஷத்துல போட்டு தூள் தூள் ஆக்கிடுவாங்க. 'இன்னும் சிலர் வெள்ளக்காரிய கூட்டிகிட்டு வந்தாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்லை'

    appadiya??? hahahaha