SK
ஒருத்தன் வெளிநாடு போறான் அப்படினாலே வீட்டுல எல்லாம் ஒரு வித சந்தோசம் கலந்த பயமா தான் இருக்காங்க. குறிப்பா அப்பா அம்மாக்களுக்கு. எங்கையாவது புள்ளை/பொண்ணு வெள்ளைகாறன கூட்டிகிட்டு வந்து கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுமோ அப்படின்னு. அதுவும் அம்மாக்கள் எல்லாம் புள்ளைங்க கிட்டே காந்திஜி கிட்டே அவுங்க அம்மா சத்தியம் வாங்கின மாதிரி வாங்கிட்டு தான் விமானம் ஏறவே அனுமதி தர்றாங்க.

வெளிநாட்டுகாரங்க அப்படினா அவ்வளவு தானா. சும்மா தண்ணி அடிச்சிட்டு, வேணும் பொழுது வேண்டிய பொண்ணுங்க கூட சுத்திகிட்டு. அதையும் தாண்டி பல நல்ல விடயங்கள் இருக்கு. குறிப்பா நான் ஜெர்மனில இந்த மக்கள் கிட்டே பாத்தா பல நல்ல விடயங்கள் அப்படின்னு எனக்கு தோணினது தான் இன்றைய மொக்கை.

இதையே இங்கே SG அவுங்க ஆங்கிலத்துல பிரிச்சு மேஞ்சுடாங்க. இருந்தாலும் சும்மா என்னுடைய சில கருத்துக்களை இங்கே சொல்லி இருக்கேன்

1. நேரம் தவறாமை :

இந்த விடயத்துல ஜெர்மன்காரங்க எல்லாரும் ஒத்தாபோல இருப்பாங்க. பத்து மணி ஒரு மீட்டிங் சொன்னா அது பத்து. 10:01 கூட கிடையாது. அதுக்கான நேரம் சரியா ஒதுக்கி இருப்பாங்க. ஒரு நிமிஷம் கூட போனாலும் ஏதோ போதைக்கு அடிமை ஆனவங்க நடுங்கற போல நடுங்க ஆரம்பிச்சுடுவாங்க.

ஒரு முறை நான் பாஸ் கூட பேசறதுக்கு நேரம் கேட்டு போய் இருந்தேன். பத்து மணிக்கு வர சொல்லி இருந்தாரு. நான் போனது 09:58. உள்ள வாங்க சொல்லிட்டு, என்னைய உட்கார சொல்லிட்டு நேரத்தை பாத்திட்டு நீங்க ரெண்டு நிமிஷம் சீக்கரம் வந்து இருக்கீங்க. உட்காருங்க வந்துடறேன், அப்படின்னு சொல்லிட்டு சரியா பத்து மணிக்கு பேச வந்தாரு. அடிங்க அப்படின்னு நினைச்சுகிட்டேன்.

ரெயிலா இருக்கட்டும், பேருந்து வர்ற நேரமா இருக்கட்டும் சரியா வரும். இது இவங்க ரத்ததுலையே ஊறி போய் இருக்குன்னு தான் நினைக்குறேன்.இந்த பழக்கம் மட்டும் வந்துடிச்சுன்னாலே நாம எல்லாம் எங்கயோ போய்டலாம்.

2. ரூல்ஸ் ராமனுஜம்ஸ் :

எல்லாருமே ரூல்ஸ் அப்படின்னு ஒண்ணு சொல்லிட்டா அதை அப்படி மதிப்பாங்க. இரவு பதினோரு மணிக்கு ஒரு வேலை ரோட்ல சிக்னல் இருந்து, செகப்பா இருந்து, அங்கே கண்ணுக்கு தென்படற வரைக்கும் ஆள் இல்லாட்டியும் நின்னு தான் போவாங்க. அடப்பாவிகளா அதான் எவனும் வரலையே போனா என்னடா.. ம்ம்ம் ரூல்ஸ் இஸ் ரூல்ஸ்.

3. வேலை செய்யும் முறை :

இவங்க வேலை செய்யற முறைய மட்டும் நாம பின்பற்ற ஆரம்பிச்சா நாம எங்கயோ போய்விடலாம். சரியா எட்டு மணி நேரம் வேலை. நேரத்துக்கு சாப்பாடு, சரி அளவான காபி, வித விதமான டி.

அதுவும் ஒரு வேலை தெரியும் அப்படின்னு சொன்னா சரியா அவுங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். கம்ப்யூட்டர் அப்படிங்கறத கண்ணால மட்டும் பாத்திட்டு நான் கம்ப்யூட்டர் இஞ்சினீர் அப்படின்னு சொல்லமாடாங்க.

வேலை செய்யற முறைக்கு ஒரு உதாரணம் சொல்லனும்னா, ஒரு முறை என்னோட ரெயில் டிக்கெட் கான்செல் செஞ்சிட்டு திரும்ப வேற நாளைக்கு புக் பண்ண போய் இருந்தேன். அவுங்க கிட்டே போய் 'அம்மணி, இதை கான்செல் பண்ணி இந்த தேதிக்கு புக் பண்ணி கொடுங்க சொன்னேன்'.

'தம்புடு, இப்படி அவசர பட்டா நடக்காது. ஒண்ணு ஒண்ணா சொல்லு. இப்போ சொல்லு எதை கான்செல் பண்ணனும்.' அப்படின்னு கேட்டு கான்செல் பண்ண வேண்டியதை கான்செல் பண்ணிட்டு அதுல பாக்கி தர்ற வேண்டிய பைசாவ திரும்ப என் கைல கொடுத்திட்டு , அடுத்த வேலையா நான் திரும்ப புக் பண்ண வேண்டியதை புக் பண்ணி கொடுத்தாங்க. ஏன்னா அவுங்க வேலை படி, கான்செல் பண்றது ஒரு வேலை, புக் பண்றது அடுத்த வேலை. ரெண்டையும் தனி தனியா தான் செய்யணும். அப்படி தான் செய்வாங்க. இதே நம்ம ஊரா இருந்தா இது அது ரெண்டு போக இவ்வளவு அப்படின்னு கணக்கை முடிச்சுடுவாங்க. ரெண்டுல எதையுமே தப்பு சரின்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு வழிகளையும், ஒரு நல்லது கேட்டது இருக்கு.

4. உசுருக்கான மதிப்பு

இங்கே எல்லா உசுருக்கும் ஒரே மதிப்பு தான். போன வாரம் கூட, ஒரு பிச்சைகாரரு மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டாரு. அடுத்த பத்தாவது நிமிஷம் அங்கே ஆம்புலன்ஸ் வந்திச்சு. இது யார இருந்தாலும் இப்படி தான். ஏழை, பணக்காரன், இந்த ஊர் காரன், அந்த ஊர் காரன், வெளிநாட்டு காரன் , உள்நாட்டு காரன் இப்படி எந்த பாகு பாடும் கிடையாது.

அதுவும் இங்கே குறிப்பா உலகப்போர்ல உயிர் இழப்பு அதிகம் இருந்ததால ஒவ்வொரு உசுருக்கும் அம்புட்டு மதிப்பு கொடுப்பாங்க.

5. நாய்ப்பாசம்

இங்கே மக்களுக்கு தாய்ப்பாசம் எப்படி இருக்கோ நாய்ப்பாசம் அதிகம். அந்த நாய நாம மொறச்சு கூட பாக்க முடியாது. ஒரு முறை இப்படி தான் ரயில்ல போகும் பொழுது ஒரு அம்மணி ஏறினாங்க. நல்ல இருந்ததுனால நானும் பாத்திட்டே வந்தேன். கொஞ்சம் நேரம் கழிச்சு தான் கவனிச்சேன், கைல ஒரு நாய புடிச்சு இருக்காங்க. அது என்னைய விட ரெண்டு கிலோ அதிகமா இருக்கும்னு நினைக்குறேன். சரி இட்ஸ் ஆல் தி இன் தி கேம் அப்படின்னு நினைச்சுகிட்டு இருக்கும் போதே, படார்னு அந்த அம்மணி அந்த நாயோட லிப் டு லிப் அடிச்சு கொஞ்ச ஆரம்பிச்சுடாங்க. ஸ்மால் ஹார்ட், சின்ன இதயம் தாங்காம நான் அடுத்த நிறுத்தத்துல இறங்கி வேற பொட்டிக்கு போய்டேன்.

இதை ஏன் சொல்றேன் அப்படின்னா, இவங்களுக்கு அம்புட்டு நாய் பாசம். இங்கே ஒரு தடவை கூட ஒருத்தன் நாய கல்லால அடிச்சு பாத்தது இல்லை. அடிச்சாலும் நம்மள புடிச்சு உள்ள தூக்கி போட்டுடுவாங்கன்னு தான் நினைக்குறேன்.

6. கண்ணோடு கண் :

ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை ஆளை மாத்திகிட்டே இருப்பாங்க, அப்படி இப்படி எல்லாம் ஒரு பக்கம். ஆனா ஒரு பொண்ணும் பையனும் சேந்து பேசிட்டு போகும் போதும், அவுங்க கொஞ்சிகிட்டு போகும் போதும் அதை பார்த்தாலே நமக்கு ஒரு வித காதல் உணர்ச்சி உள்ள பொங்கும். அப்படியே பின்னணி இசை பாய்ஸ்ல ரஹ்மான் போட்டது தான் வரும்,'எனக்கொரு கேர்ள் பிரன்ட் வேணுமடா' அப்படின்னு.

அப்படி என்ன வித்தியாசம். ரெண்டு பெரும் கண்ணோடு கண் பாத்து பேசுவாங்க. இந்த விஷயம் மட்டும் இருந்தா பாதி பேரு பொய் சொல்லவே முடியாது. நாம கண்ணை தவிர வேற எல்லா எடத்துலயும் பாத்து பேசுவோம்.

7. தனி மனித வாழ்க்கை, வேலை :

தன்னோட தனிப்பட்ட வாழ்க்கை, வேலை இது ரெண்டையும் கலக்க மாட்டாங்க. ஒரு தனி பட்ட முறைல எப்படி இருக்காங்க, அவன் தண்ணி அடிக்கரானா, தினம் ஒருவன்/ஒருத்தி கூட சுத்தரானா, இதை எல்லாம் வேலையோட சேத்து பாக்க மாட்டாங்க. வேலை தனி, தனி மனித வாழ்க்கை தனி.

இதுவும் ஒரு முக்கியமான விடயம் நாம பழக வேண்டியது. அதுவும் குறிப்பா நம்ம கல்லூரிகள்ல, ஒரு பையன்/பொண்ணோட மார்க் அவன் அங்கே நின்னு யாரு கூட பேசறான், அந்த பொண்ணு கூட இவன் ஏன் பேசணும், ஏன் தம் அடிக்கணும் இதை எல்லாம் வெச்சு பல இடங்கள்ல மார்க் விழுது.

8. விடுமுறை

உலகத்துல எந்த இடம் வேணும்னாலும் சொல்லுங்க, அந்த எடத்துக்கு இவங்க போயிட்டு வந்து இருப்பாங்க. அவங்களுக்கு வேலைல தர்ற விடுமுறை நாட்களை சரியா உபயோகிச்சுபாங்க.

2004 சுனாமி வந்தப்போ இந்தியா/இலங்கை இங்க இறந்தவங்க எண்ணிக்கைல ஏழு-எட்டு பேரு ஜேர்மன்காரங்க. அது போல ஊரு சுத்தரதுன்னா சும்மா போய் பாத்திட்டு வர்றது மட்டும் கிடையாது. அங்கே என்ன மொழி பேசறாங்க, அங்கே என்ன சாப்பாடு நல்லா இருக்கும், அதை எப்படி செய்யறது பத்திய புத்தகம், அங்கே என்ன உடை அணிவாங்க, இது போல எல்லாத்தை பத்தியும் முன்னாடியே தெரிஞ்சு வெச்சுகிட்டு, அங்கே போன மக்கள் கூட நல்லா சேந்து பழகி, நிறைவா போயிட்டு வருவாங்க.

இவங்க மற்ற நண்பர்களுக்கு அங்கே போயிட்டு வாங்கிட்டு வர்ற பரிசு, அந்த ஊரை சேர்ந்த எதாவது படங்கள் கொண்ட அட்டையா தான் இருக்கும்.

9. பரிசு :

இவங்க பரிசு கொடுக்கறது அப்படின ஒடனே ஒண்ணும் பெருசா நிறைய செலவு பண்ணி எல்லாம் எதுவும் செய்ய மாட்டாங்க. பெரியவங்களுக்கு அப்படினா ஒரு வயின் பாட்டில், கூட வேலை பாக்கறவங்க விட்டு போறாங்க அப்படின்னா ஒரு காபி மக் இவ்வளவு தான். என்னைய கேட்டா மனசு நிறைச்சு இதையே வாங்கி கொடுத்தா போதும்னு தான் சொல்லுவேன்.

இப்படி நிறைய நல்லா பழக்கங்கள் இவங்க கிட்டே இருக்கு. இதுல சிலதை நாம பழக ஆரம்பிச்சாலே ரொம்ப நல்லா இருக்கும்.

இது போதும் பார் தி மொக்கைஸ் ஒப் டுடே.

அன்புடன்,
எஸ். கே.
15 Responses
  1. சுவையான விபரங்களுடன் அருமையான பதிவு


  2. Anonymous Says:

    தம்பி குமாரு, இம்புட்டு தெரிஞ்சு வச்சுருக்கே, படிக்காத தவிர வேற எல்லாம் செய்யறேன்னு புரியுது..நல்லா இரு. :))


  3. sakthi Says:

    எப்பவாவது எழுதினாலும் நல்லாவே புலம்பறீங்க.....

    வாழ்த்துக்கள் சகோதரா


  4. இதுல எத்தனை பழக்கம் நீங்க கத்துகிட்டீங்க‌ SK? :-)


  5. SK Says:

    நன்றி முரளிகண்ணன்,

    யக்கோவ், என்னது இது எல்லாம்.. என்னதான் உண்மைனாலும் வெளில சொல்லப்படாது.. :-)

    சக்தி, ரொம்ப நன்றிங்க ஏன் பொலம்பலை பொறுமையா கேட்டதுக்கு :-)

    இயற்கை, ஹி ஹி ஹி .. குட் கொஸ்டின் யா..


  6. ஆம் நீங்க சொன்னவை அனைத்தும் சரிதான்.

    நானும் பலவருடங்கள் ஜெர்மன் கம்பெனியில் (சைனா, கத்தார் இரண்டு இடங்களிலும்) வேலைச் செய்துள்ளேன்.
    அவங்ககிட்ட ஒரே ஒரு விசயம் தான் எனக்குப் பிடிக்காது, என்னதான் கூட வேலை செய்பவர்களாக இருந்தாலும், அலுவலக நேரத்திற்குப் பின் நீ யாரோ, நான் யாரோ என்று இருப்பார்கள் (75% ஆட்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள்).


  7. SK Says:

    நன்றி அண்ணா வருகைக்கு.

    இவர்கள் அப்படி தான் அண்ணா. :( நான் கொடுத்துள்ள ஆங்கில லிங்கில் பாருங்க நீங்கள் சொன்னதையே சொல்லி இருப்பார்கள்.


  8. Sowmya Gopal Says:

    SK, thanks for referring to my article...adhuvum pirichu meyara description is flattering ! uyirku madippu section enakku romba pidichidhu, naan mention pannanumnu nenachu marandhu pona vishayam :)


  9. SK Says:

    @SG,

    அடுத்த பதிவாவது நான் எழுத நினைக்காத எழுதிடாதீங்க :-)


  10. நல்ல இடுகை..அழகான தொகுப்பு!! பகிர்வுக்கு நன்றி SK!


  11. Anonymous Says:

    எத்தன நாளா ஜெர்மனில இருக்கீங்க?

    //ரூல்ஸ் இஸ் ரூல்ஸ்.//

    :)


  12. nalla irukudu. idumathri adikkadi ealuthngo. sarvothaman-camp-usa.


  13. SK Says:

    நன்றி முல்லை.

    நன்றி சின்ன அம்மிணி, ஆச்சு செப்டம்பர் வந்தா அஞ்சு வருஷம்.

    நன்றி சர்வோதமன்.


  14. mayil said...
    தம்பி குமாரு, இம்புட்டு தெரிஞ்சு வச்சுருக்கே, படிக்காத தவிர வேற எல்லாம் செய்யறேன்னு புரியுது..நல்லா இரு. :))


    ரிப்பீட்டேஏ


  15. SK Says:

    அமித்து அம்மா, அவ்வவ் என் இந்த கொல வெறி உங்களுக்கு :-)