SK
இந்த இரண்டு விடயங்களும் ரொம்ப நாளாவே இப்படி தான் இருக்கா இல்லை இப்போ சமீபமா அதிகம் ஆகி இருக்கான்னு தெரியலை. நான் சமீபமா ரொம்ப கவனிக்கறேன்.

அ. கேள்விக்கு பதில் கேள்வியாக ??

எனக்கு தெரிஞ்சு இப்போ எல்லாம் ஒரு கேள்விக்கு பதில் பதிலா வருதுன்னா, அது ஒன்னு தான் 'நீ எப்படி இருக்கே??', 'ம்ம் ஏதோ இருக்கேன்', 'நல்ல இருக்கேன்' இவ்வளவு தான்.

இதைத்தவிர வேற எந்த கேள்வி கேட்டாலும், அதுக்கு பதில் திரும்ப ஒரு கேள்வியாத்தான் வருது.

எங்க அக்கா கிட்டே, 'ஏங்கா, போன் நம்பர் மாத்தினியே எனக்கு தரணும்னு தோணிச்சா?? அப்படின்னு கேட்டேன் ??'

இதுக்கு என்ன பதில் தரணும் எசமான். 'மறந்துட்டேன்', 'இல்லை தரலை', 'இந்த நம்பர் இப்போ தர்றேன் வெச்சுக்கோ', இதுமாதிரி எது சொன்னாலும் சரி.

ஆனா, வர்ற பதில் என்ன தெரியுமா, 'நீ தந்தியா நம்பர் மாத்தின அப்போ??'.

சரி நம்ம வீட்டுல தான் இந்த பிரச்சனைன்னு பாத்தா, சின்ன விடயத்துல இருந்து, பெரிய பெரிய விடயம் வரைக்கும் இப்படித்தான் இருக்கு. 'ஏன்டா உங்க ஆளு மூணு பேரை கொன்னுட்டாங்களே, அதுக்கு தண்டனையும் இல்லை ஒன்னும் இல்லை, இது நியாயமாடா' அப்படின்னு கேட்டா அதுக்கு பதில் என்ன தெரியுமா 'உங்காளுகளும் தான் எட்டு பேரை சாகிடிச்சாங்க, அதுக்கு என்ன பண்ண முடியும்' அப்படின்னு பதில் வருது. ஆகா மொத்தம் இதுக்கு பதிலே கிடையாது, செத்தவும் உசுருக்கும் மதிப்பு கிடையாது.

நாம முடிஞ்சா வரைக்கும் நம்ம கிட்டே கேக்கபடற கேள்விக்கு பதில் நேரடியா சொல்லி பழகுனா, அது பல விடயங்களுக்கு ரொம்ப நல்லது. பிரச்சனைகள் குறைய வாய்ப்பு இருக்கு. இந்த விடயத்தை நான் கொஞ்ச நாளா பின்பற்ற முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.

இப்போ தேர்தல் நேரம் இது ரொம்ப நல்லா பயன்படும். அவன் என்ன செஞ்சான், இவன் என்ன செஞ்சான் அப்படின்னு கேள்வி மட்டும் தான் கேப்பாங்க. நான் என்ன செய்ய போறேன்னு எவனும் சொல்றது இல்லை. சொன்னாலும் எவனும் கேக்க போறதும் இல்லை.

ஆ. இரு கோடுகள் :

நான் சின்ன புள்ளையா இருக்கும் போது விளையாட்டா ஒரு கேள்வி கேப்பாங்க. ஒரே அளவுல ரெண்டு கோடு வரைஞ்சு, ஒன்னை இன்னொன்றை விட பெருசாக்கி காட்ட சொல்லுவாங்க. எல்லாருமே அதுக்கு ஒரு கோடை பெருசாக்குவாங்க. மாத்தி யோசி மக்கான்னு சொல்லி, ஒரு கோடை அழிச்சு சின்னாதாக்கி இப்பவும் இது பெருசாகிடிச்சுன்னு சொன்ன ஆட்களும் உண்டு.

இந்த தத்துவத்தை நம்ம மக்கள் நல்லாவே புரிஞ்சு வெச்சு இருகாங்க. இது அடித்தள மக்கள் கிட்டே இருந்து அரசன் ஆளுறவன் வரைக்கும் இருக்கு.

திரைப்படம் ஒலி நாடா வெளியீட்டு விழா நடக்குது, ஒரு இயக்குனரை கூப்பிட்டு இசை அமைப்பாளரை பாராட்டி பேச சொல்லி கூப்பிடறாங்க. நம்ம ஆள் என்ன பண்றாரு, இவருக்கு போட்டியாகவோ இல்லை இன்னொரு புகழ் பெற்ற இசை அமைப்பாளரை சூசகமா சொல்லி, இவரு அதை போல எல்லாம் இல்லை அப்படின்னு பேசுறாரு. நம்ம மக்களை பொறுத்த வரைக்கும் ஒருத்தனை புகழ்ந்து பேசறதுன்னா இன்னொருத்தனை திட்டி பேசறது அப்படிங்கற முடிவுல இருக்காங்க.

இந்த பாட்டு எப்படி இருக்கு, அந்த பாட்டை விட நல்லா இருக்கு. ஏன் உங்களுக்கு அந்த பாட்டுல இருக்கற நல்ல விடயம் தெரியலையா, இல்லை இப்படி சொன்னாத்தான் கை தட்டுராங்களா.

இதுக்கு எல்லாம் காரணம் யாருன்னா நாம தான். ஆமாங்க ஒரு படம் இரண்டரை மணி நேரத்துக்கு எடுக்கறாங்க அதை அப்படியே கிண்டல் பண்ணி அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ 'லொள்ளு சபா' அப்படிங்கறதுக்கு தானே அமோக ஆதரவு தர்றோம். கேட்டா காமடியாம்.

ஏன் நம்ம பதிவுலகத்துலையே எதிர் பதிவுக்கு தானே மவுசு கூட. :)

இந்த ரெண்டு விடயங்களை பத்தி யோசிக்க ஆரம்பிச்சாலே பெரிய பெரிய நல்ல விடயங்கள் கேட்கவும், தெளிவா நாம யோசிக்கவும் வாய்ப்பு இருக்கு. செய்வோமா ?? செஞ்சா நல்லது தான்.

அன்புடன்,
எஸ். கே.
SK
நேத்து மயில் அவுங்க எழுதி இருந்த புலாவ் ரெசிபி பாத்து ஓவர் சூடு ஆகி போய் நேத்து இரவு டின்னெர் அது அது தான். நன்றி மயில் அக்கோவ் :)




இந்த பதிவு மயில் அவுங்களுக்கு சமர்ப்பணம். அதுக்காக பார்சல் எல்லாம் கேக்க கூடாது ஆமா சொல்லிபுட்டேன் :)

பாண்டிய மன்னனுக்கு வந்த சந்தேகம் மாதிரி எனக்கு ஒரு சந்தேகம், இந்த வெஜ். புலாவுக்கும், வெஜ். பிரியாணிக்கும் என்ன வித்தியாசம் ??

ருசியுடன்,

ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு போட்டோ புடிச்சு டரியல் ஆக்குவோரை தானே சமைச்சு போட்டோ புடிச்சு போட்டு'கொல்லுவோர்' சங்கம். :)
எஸ். கே.
SK
நான் வெளிநாட்டுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆக போகுது. வந்த புதுசுல யாரோடையோ சேர்ந்து இருக்கணும், சேர்ந்து சமைச்சு சாப்பிடனும் அப்படிங்கற எண்ணம் எல்லாம் போய்டிச்சு. ஏன்னா என்னோட அனுபவம் அப்படி. தனிமை பழகிக்கிட்டேன். இப்போ வேற இன்னொருத்தர் கூட சேர்ந்தது தங்கனும்னா ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கும் போல. (கல்யாணம் பண்ணா பொஞ்சாதி கூட இருக்காதே கஷ்டம் தான்னு நினைக்குறேன் :) :) )

நான் தங்கி இருக்கற விடுதில நிறைய இந்தியர்கள் இருக்காங்க. எல்லாரோடையும் பேசுவேன். ஆனா இந்த சேர்ந்து தங்கறது, சமைக்கறது இதுக்கு எல்லாம் ரொம்பவே அலர்ஜி. என்னோட அலைவரிசல் ஒத்து வராதுன்னு ஒரு எண்ணம். அது தான் உண்மையும் கூட. இதுனால எனக்கு ரொம்ப 'நல்ல' பேரு எல்லார்கிட்டயும் இங்கே. :).எனக்கு ஒருத்தருக்கு சமைக்கறதே பெரும் பாடு. என்னோட டைமிங்கும் ரொம்ப கஷ்டம். அப்படியே பழகியும் போச்சு.

நான் எப்போதும் ஆண்டவன் கிட்டே வேண்டுறது ஒண்ணே ஒண்ணு தான். என் ரூம் பக்கம் எந்த இந்தியனையும் கொண்டு வந்து தங்க வெச்சுடாதே. என்னால சமாளிக்க முடியாது. நான் ஒண்ணு கேட்டு அது அப்படியே நடந்தா அதுல என்ன சுவாரசியம் இருக்கு. வெச்சான் ஆண்டவன் ஆப்பு. எனக்கு நேர் எதிர் அறைல கொண்டு வந்து இந்தியர் ஒருத்தரை போட்டான். சரி ப்ளட் ஆரம்பம் ஆகா போகுதுன்னு நினைச்சேன் அதே மாதிரி நடந்தது, நடக்குது.
இவரு இந்தியாவுல இருந்து நேரடியா வரலை, ச்விடன்ள ஒன்றரை வருடமா இருந்து இருக்காரு. அதவாது அவருக்கு வெளிநாடு புதுசு கிடையாது. வந்த மொதோ நாளே சேர்ந்து தங்கலாமா அப்படின்னு கேட்டாரு. இல்லை சாரு எனக்கு ஆவாது அப்படினேன். சரி சேர்ந்து சமைக்கலாம் அப்படினாறு. இல்லை அண்ணேன் எனக்கு அது ஒத்து வராது அப்படினேன். இதுலையே பாதி மூஞ்சி தொங்கி போச்சு. ஆனா கூட்டிகிட்டு போய் கடை எல்லாம் சொல்லி கொடுத்தேன், எல்லாம் எங்கே என்ன வாங்கனும்னு எல்லாம் சொல்லிட்டேன்.


இப்போ ஒரு வாரமா என்ன நடக்குதுன்னா அண்ணே, உண்ணாவிரதம் இருக்கற மாதிரி ஒரு பீலிங். ஒண்ணு சாப்டாம தூங்குறாரு, இல்லை வெறும் ஊறுகா சாதம், தயிர் சாதம்னு சாப்பாடு போகுது. இப்படி தான் எப்போதும் சாப்பிடுவாரா இல்லை இங்கே வந்து தான் இப்படியான்னு தெரியலை. எது எப்படியோ எனக்கு இது அனாவசியமான விஷயம்.

என்னால இதை பாத்திட்டு வாய்யான்னு தினம் சமைச்சு போடவும் முடியலை (முடியாது), சரி என்னவோ பண்றாருன்னு விட்டுட்டு என் வேலைய பாக்க மனசு கேக்க மாட்டேங்குது. முடியலை. தர்மசங்கடமான நிலைமைக்கு கொண்டு போகுது. எனக்கு இது எல்லாம் தேவையா. சும்மா சிவனேன்னு இருந்தேன்.. :(

நான் என்ன பண்றது மக்கா ??

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என்னோட போன பதிவை பாத்திட்டு ஒரு நண்பன் கேட்டான். என்னடா பதிவு போட்ட உடனே பத்து பேரு வந்து பாத்து பதில் போட்டு இருக்காங்க அப்படின்னு.

நான் சொன்னேன், (தலைவர் ஸ்டைல்ல படிக்கவும்) 'தம்பி, எல்லாம் தான வந்த பின்னூட்டம் இல்லை, ஈமெயில் பண்ணி வரவெச்ச பின்னோட்டம்' அப்படின்னு :) :) (இதுவும் ஒரு விதத்துல தலைபோட ஒத்து போகுது :) :) :) )
SK
என்ன தான் கலாச்சாரம் மிக்க நாடு அப்படி இப்படின்னு எல்லாம் சொன்னாலும் நம்ம நாட்டுல தவறு நடக்காமல் இல்லை. நாம நம்ம கொழந்தைகளை பொத்தி பொத்தி வளத்தாலும் தவறுகள் நடந்தது கிட்டே தான் இருக்கு. சரி, நம்ம வூட்டு புள்ளைக்கு தப்பு எதுவும் நடக்கலை அவ்வளவு தானா. பக்கத்து வூட்டு புள்ளைக்கு எது நடந்தாலும் பரவா இல்லையா. இது போல எதிர் கேள்விகள் வந்திட்டே தான் இருக்கு.

இப்போ என்ன நடந்திச்சுன்னு இப்படி குதிக்கறே.

2005'இல் இருந்து 2007 வரை ஒரு ஆய்வு செய்யப்பட்டு, 'குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை' வெளியுட்டுள்ள 207 பக்க ஒரு அறிக்கையின் முடிவுகளை இங்கே தருகிறேன். நம்ம மக்களுக்கு ஒரு பக்க நல்ல பதிவை படிக்கவே கண்ணு கட்டும் இதுல நல்ல விடயத்தை பத்தியோ 207 பக்க அறிக்கைய படிங்கன்னு சொன்னா ஹி ஹி ஹி தான்.

கீழ வரும் செய்திகள் அனைத்தும் அந்த அறிக்கையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. அந்த அறிக்கையில் இருந்து பெறப்பட்ட முடிவுகளும், அதனுடைய சாராம்சம் மட்டும் இங்கே தருகிறேன்.

இந்த ஆய்வுக்கான களத்தை பற்றிய பின்னனி. இது இந்தியாவில் 13 மாநிலங்களில் 12447 குழந்தைகள் மற்றும் 17220 ஏனையோரிடம் நடத்தப்பட்ட ஆய்வுக்கு பின் எழுதப்பட்ட அறிக்கை. அனைத்து விதமான மத, இன, மொழி வாரியான குழந்தைகளும் பங்கு பெற்று உள்ளார்கள். ஆதலால் இதனுடைய முடிவை நாம் ஒரு நல்ல கணிப்பாக ஏற்க முடியும்.

1. Physical abuse (தமிழ்ச்சொல் தெரியவில்லை, அதுநாள் ஆங்கிலத்தில்)

அ. மூன்றில் இரண்டு குழந்தைகள் இதற்க்கு ஆளாகி உள்ளார்கள்.
ஆ. பிசிகல்லி abuse செய்யப்பட்ட 69 சதவிகித குழந்தைகளில் 54.68% ஆண் குழந்தைகள்.
இ. 50% மேலான குழந்தைகள் ஒன்று அல்லது மற்றொரு வகையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
ஈ. குடும்ப சூழலில் பாதிக்க பட்ட குழந்தைகளில், 88.6% பெற்றோரால் பாதிக்க பட்டு உள்ளார்கள்.
உ. ௬௨% தண்டனைகள் அரசு பள்ளிகளை தரப்பட்டு உள்ளன.
ஊ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.

2. Sexual abuse.

அ. 53.22% இந்த வகையில் பாதிக்க பட்டு உள்ளதாக கூறி உள்ளார்கள்.
ஆ. தெருக்களில் வளரும் குழந்தைகளுக்கும், குழந்தை தொழிலில் ஈடு படும் மற்றும் காப்பங்களில் வளரும் குழந்தைகள் இந்த கொடுமைக்கு ஆளாகி உள்ளார்கள்..
இ. 50% மேலான தவறுகள் மிகவும் நம்பகமான ஆட்களால் செய்யப்பட்டு உள்ளது.
ஈ. குழந்தைகள் இதை யாரிடமும் கூறாமல் இருந்து இருக்கிறார்கள்.

3. Emotional abuse and Girl child neglect

அ. 83% பெற்றோரால் செய்யப்பட்டு உள்ளது.
ஆ. 48.4% பெண் குழந்தைகள் ஆண்களாக பிறக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இந்த அறிக்கையில் இதில் இருந்து மீள்வதற்கான ஒரு முக்கிய குறிப்பாக அவர்கள் கூறுவது விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குறிப்பாக பெற்றோர் மற்றும் குழந்தைகள் இருவரிடமும்.

இதில் கூறப்பட்டு உள்ள பல விடயங்களை படிக்கும் பொழுது, நெஞ்சு பதபதைக்கவே செய்கிறது. இது போல் ஒன்று இருப்பதாக இந்தியா இது வரை மறுத்தே வந்து உள்ளது. இதுவே இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் ஆய்வு.

நன்றி :
குழந்தைகள் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை.
'Save the children' அமைப்பு.
'PRAYAS' அமைப்பு
'UNICEF'

இந்த அறிக்கையை முழுவதும் படிக்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே தரவிரக்கம் செய்யலாம். இதில் நம்மால் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்கு எதாவது தோன்றினால் இங்கே கூறவும்.

பயம் கலந்த நம்பிக்கையுடன்.
எஸ். கே.