SK
சர்க்கரை, ரத்த அழுத்தம், ஹைபர் டென்ஷன் இது எல்லாம் எப்படி ஒரு வியாதியோ என்னை பொறுத்த வரைக்கும் அதே போல ஒரு வியாதி தான் இந்த ஆர்வக்கோளாறு. அதோட விளைவா ஒண்ணு உதவி பண்றேன்னு வம்புல மாட்டுறது இல்லைன்னா கெட்ட பேரு வாங்குறது இல்லைனா ஆறுதல் சொல்றேன்னு அறிவுரை சொல்றது. இந்த வியாதி எனக்கு ரொம்பவே அதிகம். (குடும்ப வியாதின்னு கூட சொல்லலாம் :) )

நானா போய் வம்புல மாட்டுறது ஒரு விதம். தானா வந்து என்னை மாட்ட வைக்கறது ஒரு விதம். சில உதாரணங்கள் இப்போ

1. பன்னிரெண்டாவது படிச்சி ஒரு அளவுக்கு நல்ல மதிப்பெண் வாங்கிட்டு பொறியியல் கல்லூரில சேர்ந்திட்டு நான் பண்ண அட்டகாசம். என்னோட நண்பர்களோட சகோதரிகள் சகோதரர்கள் எல்லாரும் அப்போ தான் பன்னிரண்டாவது படிச்சாங்க. நான் பேசமா இருக்கவே மாட்டேன். மாசத்துக்கு ஒரு தடவை தான் வீட்டுக்கு போவேன். அப்பவும் இந்த தோழர்கள் வீட்டுக்கு போனா அவுங்க தங்கச்சி, தம்பிங்க கிட்டே போய் எப்படி படிக்கறே, என்ன மார்க் வருது, என்ன டியூஷன். ... இது போல ஆயிரத்து எட்டு கேள்வி. பாவம் புள்ளைங்க எவ்ளோ தான் தாங்குவாங்க. ஒரு அளவுக்கு மேல நான் வந்து இருக்கறதா வாசல்ல வண்டி நிக்கறதை வெச்சு கண்டு புடிச்சிட்டு அப்படியே வாசலோட ஓடி போய் நான் போன அப்பறம் வந்தவங்க எல்லாம் இருக்காங்க.

இதுல இருந்து இப்போ கொஞ்சம் மீண்டு வர்றேன். முடிஞ்சா வரைக்கும் யாரவது படிக்கறேன்னு சொன்னா, 'அப்படியா, ஆல் த பெஸ்ட். நல்லா படிங்க'. இதோட நிறுத்திக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.

இந்த தடவை இந்தியா வந்து இருக்கும் போதும், 'தம்பி, என் பையன் பன்னிரெண்டாவது படிக்கறான். உன்னை பாக்க அனுப்பறேன். கொஞ்சம் புத்திமதி சொல்லி அனுப்புப்பா'.
நான் மனசுக்குள்ள, 'ஏன் உங்க புள்ளை நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா ?? ', ஆனா வெளில சிரிச்சுகிட்டே 'ஹி ஹி ஹி, வர சொல்லுங்க'.

2. இந்த கெரகம் அதோட விட்டிச்சா, காலேஜ் போனாலும் விடறது இல்லை. ஏதோ நான் பெருசா சாதித்தது போலையும், ஜூனியர்ஸ் எல்லாருக்கும் ஒரே அட்வைஸ் தான். இந்த காரணத்துல என்னை புடிச்சவங்களும் உண்டு. என்னை பாத்து தலை தெறிக்க ஓடினவங்களும் உண்டு. உண்மைய சொல்லனும்னா, ஓடினவங்க தான் அதிகம்.

கொஞ்ச நாள் முன்னாடி இப்படி ஒரு ஜூனியர் கிட்டே பேசிட்டு இருந்தேன், 'அண்ணா, இது மாதிரி இருக்குன்னா. எதாவது அட்வைஸ் சொல்லுங்க அண்ணா' அப்படின்னு கேட்டான். 'அட்வைஸ் நானா. என்னடா காமெடி பண்றே'னு கேட்டேன். 'யோவ், ரொம்ப பந்தா பண்ணதையான்னு சொல்லிட்டு போறான்'. நானும் நல்லா புள்ளையா இருக்கணும்னு பாத்தா விட மாட்டேங்குறாங்கையா.

3. இந்த பழக்கம் சரி இந்தியாவோட போச்சு, வெளி நாடு வந்தமே அப்படின்னு ஒழுங்கா இருந்தமா. இங்கே வந்தும் இதே கெரகம் தான். தானா போய் உதவி பண்றேன்னு கெட்ட பேரு வாங்கினது அதிகம். அதுல ஒரு ரெண்டு கதை இங்கே சொல்லுறேன்.

தீசிஸ் எழுதிகிட்டு இருந்த நேரம். என்னை போலவே இன்னொரு இந்திய பையனும் தீசிஸ் எழுதி கிட்டு இருந்தான். நான் கொஞ்சம் நேரம் ஒதுக்கி 'எம். எஸ். வோர்ட்'ல எப்படி எளிமையா தீசிஸ் அடிக்கறதுன்னு கத்துகிட்டு செஞ்சு இருந்தேன். நம்ம புள்ளை அதே எடத்துல தடவி கிட்டு இருந்தாரு. இதை நான் போய் பாத்திட்டு, தம்பி, இப்படி இப்படி எல்லாம் பண்ணலாம்னு சொல்லி கொடுத்திட்டு (வெளில போற ஓணானை .... ') அவரோட தீசிஸ் தொண்ணூறு பக்கம், அதுல ஒரு முப்பது பக்கம் கிட்டே எப்படி செய்யறதுன்னு செஞ்சு வேற காமிச்சேன்.

ஒரு வாரம் கழிச்சு இன்னொரு நண்பன் கிட்டே சொல்லி இருக்காரு, 'இவன் தீசிஸ்'கு உதவி பண்றேன்னு என்னோட நேரம் எல்லாம் வீணடிச்சிட்டு போய்ட்டான்' அப்படின்னு. நான் சொல்லி கொடுத்த படி தான் தீசிஸ் செஞ்சு இருக்கார் அப்படின்னு அப்பறம் அவரோட தீசிஸ் பார்க்கும் போது தெரிஞ்சுகிட்டேன்.

4. சரி இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் நம்ம நாட்டு மக்கள் கிட்டே தான் நடக்கும் போல இருக்குன்னு நினைச்சேன். நமக்கு தான் அலைவரிசை ஒத்து வரலை. பேச தெரியாம பேசுறோம்னு நினைச்சுகிட்டேன். என் நேரம் சும்மா விடுமா என்னை.

இப்போ நான் இருக்கற ஊருல மெட்ரோ ரயில் நிறைய உபயோகிப்பாங்க. அங்கே ஒரு ரயில் போகிற பிளாட் போரம் கண்டு புடிக்கறது கொஞ்சம் கஷ்டம். மூக்கை சுத்தி போறா போல தான் போக வேண்டி இருக்கும். அது புதுசா வரவங்களுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும். எனக்கும் ஆரம்ப நாள்ல அப்படி தான் இருந்தது.

என்னோட கெட்ட நேரம் அந்த பிளாட் போரம் போற வழி தான் நான் எப்போதும் உபயோகிக்கற வழி. அங்கே நின்னுகிட்டு தொலாவிகிட்டு இருக்கறவங்களை பாத்தாலே தெரியும் இந்த பிளாட் போரம் தான் தேடிகிட்டு இருக்காங்க சொல்லி. என் சனி, வாய வெச்சுகிட்டு சும்மா இருப்பேனா. 'இதைத்தான் தேடுறீங்களா' அப்படின்னு அவுங்க பாஷைல போய் கேட்டு வழி சொல்லுறது. என் கலருக்கும், அவுங்க மொழிய தட்டி தடவி பேசறதுக்கும் பாத்து பயந்து ஓடினவங்க தான் அதிகம். ஒரு வேலை பிச்சை எடுக்க காசு கேட்டு வந்தேன்னு நினைபாங்கலோ இல்லை எதையாவது திருடிட்டு போய்ட போறான்னு நினைபாங்கலோ யாரு கண்டா.

இதுக்கு இப்போ சமீபமா ஒரு முடிவு கட்டிட்டேன். ஒரு புத்தகத்தை எடுத்து வெச்சு படிக்க ஆரம்பிச்சுடறது. சோ, தலை நிமிந்து பாத்தா தானே பிரச்சனையே. :) :)

5. அடுத்து நம்ம விஷயத்துக்கு வருவோம். பதிவுலகம். பதிவை படிச்சோம், பின்னூட்டம் போட்டோம் அட்லீஸ்ட் ஒரு ஸ்மைலி போட்டோம் இல்லைனா மூடிகிட்டு இருந்தோம்னு இருக்கணும். அப்படியும் இல்லையா நீயே ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு உனக்கு என்ன பொலம்பனும் அப்படின்னு தோணுதோ பொலம்பிக்கோ.

ஏதோ நான் தான் சமூகத்தை சீர் திருத்த வந்தவன் போல நல்லா எழுதறவங்க கிட்டே போய் நீங்க இந்த தலைப்பை பத்தி எழுதலாமே அப்படிங்கறதும். இன்னும் ஆர்வ கோளாறு அதிகமா போய் பர்சனல் ஈமெயில் முகவரில தொடர்பு கொண்டு பதிவை பத்தி எதாவது நல்லது இருந்தா சொல்றது, கேள்வி இருந்தா கேக்குறது. இந்த மாதிரி தேவையே இல்லாத வேலை எல்லாம் செய்யறது. இந்த விடயத்தை கம்மி பண்ண ரொம்ப முயற்சி பண்ணிட்டு இருக்கேன். பண்ணிடுவேன் வெகு விரைவில். :). அரை கழுதை வயசாகுது, இதை கூட செய்யலைனா எப்படி மக்கா.

இது எல்லாம் என்னோட ஜகதல பிரதாபங்கள்ள ஒரு பகுதி. இப்படியே தினம் பன்னு வாங்கி வாங்கி ஒரு பேக்கரியே நடத்தலாம் போல இருக்கு. இதை போல் தொந்தரவு என்னால் உங்கள் யாருக்கேனும் ஏற்பட்டு இருந்தால் மன்னிச்சுகோங்க மக்கா. திரித்திகொள்ள முயற்சி பண்றேன். இந்த வியாதிய கம்மி பண்ண உங்களுக்கு ஏதாவது ஐடியா தோணிச்சுனா சொல்லிட்டு போங்க. அதையும் முயற்சி பண்ணி பாத்துடறேன்.

அளவில்லா புலம்பலுடன் :) :)
எஸ். கே.

11 Responses

  1. SK Says:

    வாழ்க வளமுடன். நல்லா இருங்க ஸ்ரீமதி. :)


  2. அய்ய இதுக்கு எல்லாமா கவலைப் படுவது..

    உலகத்தில இதெல்லாம் சகஜமுங்க..

    தூற்றுவார் தூற்றற்றும், போற்றுவார் போற்றறும்...

    கடமையை செய்யுங்க, பலன் தானா வரும்.

    (அப்பாடா உங்கள மாதிரியே நானும் இருக்கேனோ?)


  3. ஹி ஹி

    இதுமாதிரி சேம் பளட் / பல்ப் வாங்கினது நமக்கும் ரொம்ப உண்டு

    அதுவும் அந்த ப்ளாட்பாரத்துக்கு வழி சொல்றது, நான் இங்கன லோக்கல்ல அது மாதிரி ட்ரை பண்ணி அவங்க நம்மள ஒரு மாதிரி பார்க்குமாறு ஆகிடும்.
    அதனால இப்ப நம்மள யாராவது கேட்டா மட்டும் தான் சொல்றது.

    ஆனா நீங்க சொன்னா மாதிரியே இந்த வாய் சனி இருக்கே அது சும்மா இருக்காம அடிக்கடி சும்மாடு தூக்கிடும்.


  4. என்னை மாட்ட வைக்கறது ஒரு விதம். சில உதாரணங்கள் இப்போ

    சில உதாரணங்களே இவ்ளோவா

    அப்ப மீதி,, யப்பா

    பதிவுலகம் தாங்காதுடா சாமீஈஈஈஈஇ


  5. சேம் ப்ளட்.

    உதவி செய்யப்போய் வாங்கிகிட்ட கதை நிறைய்ய்ய்ய்.......ய.

    :((


  6. SK Says:

    ராகவன் அண்ணா, வருகைக்கு நன்றி.

    அமித்து அம்மா, புதுகை தென்றல்.. நன்றி..

    ப்ளட் தான் நிக்க மாட்டேங்குது என்ன பண்ண :(


  7. காசா பணமா? அட்வைஸ் தான. அள்ளித் தெளிப்பா. எடுத்துக்கறவன் எடுத்துக்கட்டு. வேணாங்கறவன் துப்பிட்டு போட்டும். என்னாங்கற?


  8. SK Says:

    வித்யா, துப்பறவன் துப்பிட்டு போகட்டும். காரி என் மூஞ்சிலையே திரும்ப துப்பறது இல்லை கஷ்டமா இருக்கு :) :).

    வாங்க வாங்க பயணம் எல்லாம் நல்ல படியா போச்சா ??


  9. அட விடுங்க SK. நல்லது செய்யறதுன்னா, நாலும் தான் இருக்கு.
    இந்த விஷயத்துல நான் டெல்லி வந்ததுக்கப்புறம் ரொம்பவே மாறிட்டேன். இடியே விழுந்தாலும் 'ஐயோ காப்பாத்துங்க'ன்னு நம்மள கூப்பிடுற வரைக்கும் நாம போறதில்லை. போனோம், தொலைஞ்சோம். ஊர் அப்படி, மக்கள் அப்படி.


  10. SK Says:

    விக்னேஷ்வரி, யு மீன் சேம் ப்ளட். குட் குட் :)