SK
என்னுடன் கல்லூரியில் சேர்ந்து படித்த சில நண்பர்களும் சரி, பள்ளில சேர்ந்து படித்த சில நண்பர்களும் என்னை விட அதிகம் மதிப்பெண் வாங்கியவர்கள் உண்டு. மேலும் நல்ல திறமைசாலிகள், படிப்பு மட்டும் நில்லாமல் கலை, எழுத்து, நாடகம் அனைத்திலும் கலக்கியவர்கள் உண்டு.

இது போல நல்ல மூளை இருந்தும் மேல் படிப்பு படிக்காதவர்கள் அதிகம். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு சென்றவர்கள் தான் அதிகம். அதிலும் சிலர் துறை சார்ந்த வேலை கிடைக்காமல், ஐ டி அல்லது மார்க்கெட்டிங் துறை வேலைக்கு சென்றவர்களும் உண்டு. இதற்கு பல காரணங்கள் உண்டு. குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், மேல் படிப்பு பற்றிய சரியான விவரம் தெரியாமல் இருத்தல் போன்றது சொல்லலாம்.

இங்கு நான் வெளி நாடு என்று சொல்வது ஒரு வாய்ப்பு என்கிற அர்த்தத்தில் எடுத்து கொள்ளவும். வெளி நாடு செல்வது தான் சிறந்தது என்கிற வாதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஒரு வேலை நான் படிப்பு முடிந்து இந்திய திரும்புகையில், நான் அவர்களை ஒத்து பார்க்கும் போது சம்பளத்தில் அதிகமோ, குறைவோ, அதே அளவோ வாங்கக்கூடிய வாய்ப்பு உண்டு. மீண்டும் நான் இங்கே சம்பளம் என்று சொல்வது ஒரு அளவுகோல் அவ்வளவே.

என்னை ஒத்த தலைமுறையை சேர்ந்த நண்பர்களுக்கும் எனக்குமே இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கிறது என்றால், என்னையும் என் மூத்த தலைமுறையையும் நான் எப்படி பார்க்க வேண்டும்.

அதாவது என் தந்தை தனது முப்பதாவது வயதில், தமிழ்நாட்டு எல்லையை விட்டே தாண்டியது இல்லை அல்லது இருபது ஆயிரம் சம்பளம் வாங்க வில்லை அல்லது அறுபது வயதானாலும் இப்போதும் இருபது ஆயிரம் தான் சம்பளம் வாங்குகிறார்னு நான் அவரை கேலி செய்தல் முறை ஆகுமா ??

அப்படியும் இல்லை என்னோட பள்ளி ஆசிரியரைவிடவும், கல்லூரி பேராசியரைவிடவும் ஒரு நாள் நான் சம்பளம் அதிகம் வாங்க கூடிய வாய்ப்பு உள்ளது. அதற்காக என்னை அவருடன் கம்பேர் செய்து பேசுதலும் எந்த விதத்தில் சரி ஆகும்.

ஒவ்வொருவருக்கும் அவர்கள் வளர்ந்த முறை, சூழல், சரியான வழிநடத்துதல் இல்லாமை, அவர்கள் வளர்ந்த காலம் இது போல எத்தனையோ காரணங்கள் உண்டு.

இதை எல்லாம் இப்போ எதுக்கு சொல்றே அப்படின்னு யாருப்பா அது கேக்குறது. இளையராஜாவையும் ரஹ்மானையும் கம்பேர் செய்து பேசுறவங்களுக்கு அப்படின்னு நீங்களே நினைச்சுகிட்டா நான் பொறுப்பு இல்லை மக்கா :)

ஆஸ்கார் புகழ் ரஹ்மானுக்கு என்னுடைய மனாமர்ந்த வாழ்த்துக்கள். ரசூல் குட்டி அவர்களுக்கும் என்னுடைய உள்ளம் கனிந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

கலைமாமணி விருது பெற்றவர்களுக்கும், வலைமாமணி விருது (அதாங்க தமிழ்மண விருது ) பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

அன்புடன்,
எஸ். கே.
SK
சென்ற ஆண்டு இந்தியாவில் நடந்த பல விடயங்கள், இப்போது நடக்கும் பல விடயங்கள் கண்டு என்னோட மனச்சாட்சி என்னை பார்த்து கேட்ட கேள்விகள்ல டாப் டென் கொஸ்டின்ஸ் :) :) ( நாங்களும் எழுதுவோம்ல :) :) :) )

1. 2008la இந்தியாவுல எட்டு தடவைக்கு மேல குண்டு வெடிச்சது?? சி என் என் ல செய்தி பாத்தியே, ப்ளாக்ல பக்கம் பக்கமா எழுதினியே ?? அதுக்கு என்ன செய்யலாம், அடுத்த தலைமுறையாவது இது இல்லாம எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சு ஏதாவது செஞ்சியா ?? 

2. சட்டக்கல்லூரி மாணவர்கள் அடிச்சுகிட்டாங்கன்னு அழுது பொலம்புற நீ, இதோட ஆரம்பம் எங்கே, அதுக்காக நீ என்ன செய்யலாம்னு ஏன் யோசிக்கலை ?? 

3. இப்போ வக்கீல்களும், போலீசும் அடிச்சுகறாங்க, இப்போ பொலம்பற நீ.. இத்தன வருஷமா இது உள்ளேயே இருந்து இருக்கே. அப்போ கவனிக்கலையே. ஏன் ?? 

4.  நான் கடவுள் படம் பாத்து பிச்சைக்காரங்க மேல 'உச்சு' கொட்டுற நீ, உங்க வீட்டுக்கு பக்கமே ஆயிரம் பிச்சை காரங்க இருக்கும் போது, அவுங்களுக்கு ஒண்ணுமே செய்ய தோணலையே ஏன் ?? 

5. அபியும் நானும், வாரணம் ஆயிரம் படம் பாத்து பொண்ணு மேலையும், அப்பா மேலையும் பாசம் பொங்குற உனக்கு, அவுங்க வாழ்க்கை முழுக்க பக்கத்துல இருக்கும் போது அவுங்க அருமை தெரியலையே ஏன் ?? அவ்ளோ சினிமாவும், தொலைக்காட்சியும் உன் மூளைய மழுங்க அடிச்சுடிச்சா ?? 

6. மானாட மயிலாட பாத்து நேரம் கழிக்கற நீ, உன் வீட்டு குப்பைய குப்பைதொட்டில கொட்ட நேரம் இருக்க மாடேங்குதே ஏன் ?? 

7. அடுத்த ஆட்சி கலைஞரா, அம்மாவான்னு ரொம்ப ஆராய்ச்சி பண்ற நீ, அடுத்த வருஷம் உன் வாழ்க்கைல இதை சாதிச்சு இருக்கணும்னு ஒரு குறிக்கோள் இல்லாம இருக்கோமே அது ஏன் ?? 

8. ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி, கனிமொழிக்கு எம். பி. பதிவு, கயல்விழிக்கு எம். பி. பதிவி அப்படின்னு, அவரோட குடும்பத்தை பத்தி எல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கற நீ, உன்  வீட்டுல இருக்கறவங்களுக்கு என்ன தேவை ( அப்பா அம்மாவுக்கு என்ன தேவை, பொண்டாட்டிக்கு என்ன வேணும், உன் பொண்ணோ/புள்ளையோ என்ன படிக்குது, எப்பட படிக்குதுன்னு   தெரிஞ்சுக்க மாட்டேங்குறியே ஏன் ??  

9. கரண்ட் இல்லை கரண்ட் கட் பண்றாங்கன்னு ஆற்காடு வீராசாமியையும், அரசாங்கத்தையும் திட்டின நீ, சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் பல்பு இப்படின்னு வீட்டுக்கு உபயோகமா இருக்கற நிறைய பொருள் வந்து இருக்கறதை பத்தி யோசிக்காதது ஏன் ? 

10. குசேலனும் நான் கடவுளும் மொதோ நாள் அதிக பணம் கொடுத்து படம் பாத்திட்டு விமர்சனம் எழுதனும்னு துடிக்கற நாம,  ஒண்ணாவது படிக்க கூட கஷ்டபடுற பணம் இல்லாம இருக்கற குழந்தைகளை பத்தி யோசிக்காதது ஏன் ??

ச்சாய்ஸில் விடப்பட்ட கேள்விகள்:-

அ) நீங்க இப்படி ஒரு பதிவு எழுதறது மொக்கை மக்களுக்கு தெரியுமா?

ஆ) இந்தப் பதிவு எழுதறதுக்கு இம்புட்டு நேரம் செலவு செஞ்சியே, அதை இன்னைக்கு நல்ல படியா சமைக்கவாவது செலவு செஞ்சு இருக்கலாமே :) :) 

அன்புடன், 
எஸ். கே.  

பி. கு. : ரொம்ப ரொம்ப நன்றி பரிசல் :) 
SK
ஊருக்கு போயிட்டு வந்தா கட்டுரை எழுதணுமாமே. நாங்களும் எழுதுவோம்ல.

இரண்டு வருடம் கழித்து இந்தியா போயிட்டு வந்தாச்சு. அதே இந்தியா ஆனால் பல நல்ல மாற்றங்கள். ஒட்டுமொத்தமாக நல்ல படியா அமைந்தாலும், ரெண்டு விஷயம் என்னை ரொம்பவே சங்கட படுத்திச்சு.

ஒண்ணு, என்னோட உடல்நிலை. அப்போ அப்போ சரி இல்லாம போய்
ரொம்ப படித்திடிச்சு.

ரெண்டாவது, நேரம் தவறுதல். ஒரு நண்பரை பார்க்க ஏழு மணிக்கு வர்றேன்னு
சொன்னா சொன்ன நேரத்துக்கு போக முடியலை. இத்தனை மணிக்கு தொ(ல்)லை பேசுறேன்னு
சொன்னா அப்படி சரியா சொன்ன நேரத்துக்கு செய்ய முடியலை. இது மாதிரியே தொடர்ந்து நடந்தது. இந்தியாவில் என்னை பிளான் பண்ணிக்கொள்கிற விதம் சரி இல்லைன்னு மட்டும் புரிஞ்சது.

சரி விடயத்துக்கு வருவோம். இங்கே பயணத்துல நடந்த சில சுவாரசியமான நிகழ்ச்சிகளை எழுதலாம்னு இருக்கேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


திருச்சி டு நாகர்கோயில்

போய் சேந்த அன்னைக்கே நாகர்கோயில்'ல ஒரு நண்பன் கல்யாணத்துக்கு போறதா பிளான். இரவு ஒன்பது மணிக்கு திருச்சில இருந்து பேருந்து. பேருந்து கெளம்பி சரியா போய்கிட்டு இருந்தது. பத்தரை பதினோரு மணி சுமாருக்கு பின்னால இருந்து ஒரு சலசலப்பு.

கொஞ்ச நேரத்துல சத்தம் அதிகம் ஆச்சு.

பஸ்'ல வந்தவரு யாரோடையோ தொலைபேசுராறு,

'மாப்ளை, முன்னாடி இருக்கறவன் ஜன்னலை மூடுன்னா மூட மாட்டேன்குறான். ஒரே பிரச்சனையா இருக்கு. பன்னிரண்டு மணி போல பஸ் மதுரை வரும். நீ நம்ம ஆளை எல்லாம் கூடியாந்திடு. அங்கே பாத்துக்கலாம்'.

தம்மாதுண்டு சன்ன கதவு மூடாத விஷயத்துக்கு எதுக்கு .. அப்பறம் நடத்துனர் வந்து பஞ்சாயத்து பண்ணி வெச்சிட்டு போனாரு. நானும் அரண்டு போய் இருந்தேன்.

அப்படியே, மறுநாள் அதே போல ஒரு பேருந்துல நாகர்கோயில் டு திருச்சி பயணம். கொஞ்சம் காய்ச்சல் வர போல இருந்தது. எனக்கு பின்னாடி இருக்கைல இருக்கறவரு எங்க இருக்கைல இருக்கற கதவை திறந்து தான் வைப்பேன்னு அடம் புடிக்கராறு. அப்போ தான் அவருக்கு காத்து சரியா வருதாமாம்.

'அண்ணே, ரொம்ப பனியா இருக்கு. ஒடம்பும் சரி இல்லாதது போல இருக்கு. கொஞ்சம் சன்ன கதவை மூடிகிட்டா நல்ல இருக்கும்னு சொன்னேன்'

'ஒரே புழுக்கமா இருக்கு தம்பி, அது எல்லாம் முடியாது அப்படின்னு சொன்னாரு'.

போகும் போது நடந்த நிகழ்ச்சி அப்படியே கண்ணுக்கு முன்னாடி வந்திச்சி. எனக்கு அதுக்கு மேல பேச 'தில்' இல்லை. சரிண்ணே அப்படின்னு சொல்லிட்டு பின்னாடி கடைசில ஒரு இருக்கை காலியா இருந்திச்சு, அங்கே போய் ஒக்காந்துட்டேன். வேற என்ன பண்ண :(

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னைக்கு ரெண்டு நாள் தான் போக முடிஞ்சது, அதுவும் நண்பனுக்கு ஒரு அவசர வேலையா.

நானும் அந்த பிரபல பதிவரும் ஒரு உணவகுத்துல ஒக்காந்து இருந்தோம். எல்லாம் பேசி முடிச்சிட்டு சரி பில் கொடுக்கலாம்னு பேரரை அவரு கூப்பிடறாரு.

'தம்பி'

நோ ரெஸ்பான்ஸ்.

'தம்பி'

நோ வே. நோ ரெஸ்பான்ஸ்.

'அண்ணே'

பேரர் திரும்பி, 'என்ன சார்'

நான் அண்ணனிடம், 'இப்போ தெரியுதுண்ணே, நீங்க ஏன் எல்லாரையும் அண்ணன்னு கூப்பிடரீங்கன்னு. அதையே தொடருங்க. நீங்க தம்பின்னு கூப்பிட்டாலும் யாரும் திரும்பி பாக்க போறது இல்லை', அப்படின்னு சொன்னேன்.

வேற யாருங்க அந்த பதிவரு, 'அண்ணே' புகழ் அண்ணன் அப்துல்லா தான். :) :) :) :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


அடுத்து ஒரு பிரபல பதிவரை பாக்கலாம்னு போனேன். போகும் போதே ஒரு மணி நேரம் லேட். அதுலையே அவுங்க சரி கடுப்புல இருந்து இருப்பாங்கன்னு நினைக்குறேன்.

போயிட்டு அவுங்க கிட்டே பேசிட்டு (??) ( நோட் பண்ணுங்க இந்த கேள்விக்குறியை) இருந்தேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சு நான் அவுங்க கிட்டே கேட்டேன்,

'விஜய் டிவி பாப்பீங்களா'

'பாப்பேன், ஏன்'

'விஜய் டிவில பேசி, கார்னியர் பிருக்டிஸ் கிட்டே சொல்லி ஒரு ஸ்பான்செர் வாங்கலாம்னு இருக்கேன்'

(அவுங்க இவனுக்கு என்ன லூசா, திடீர்னு என்ன என்னவோ சொல்றான்னு யோசிச்சுகிட்டே) ஏன்??

'இல்லை, இந்த பேட்டிய ஒளிபரப்பத்தான்' அப்படின்னு சொன்னேன். :) :) :)

அப்படி தாங்க இருந்திச்சு. அம்புட்டு அமைதி அவுங்க. நான் பாட்டுக்கு ஏதோ பேசிகிட்டே இருக்க. அவுங்க, அளந்து அழகா பதில் சொல்லிகிட்டே இருந்தாங்க.

ஹலோ, யாருங்க அது அங்கே இருந்து யாரு அந்த பதிவர்னு கேக்குறது, அது எல்லாம் பெரிய ரகசியம்கோ.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


சில பல பதிவர்கள் கிட்டே, தொலை பேசில தொல்லை பண்ணினது சந்தோஷமா இருந்தது எனக்கு. அவுங்களுக்கு அப்படின்னு நீங்க கேக்குறது எனக்கும் கேக்குது. நான் என்னத்தை சொல்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கேபள் ஷங்கர் இங்கே சொல்லி இருந்த தஞ்சாவூர் மெஸ் போய் ஒரு மதிய சாப்பாடு சாப்பிட்டு வந்தது ஒரு சந்தோசம். ரொம்ப நாள் கழிச்சு போனாலும், எல்லாரும் நெனப்பு வெச்சு இருந்தாங்க. அண்ணே, உங்க கிட்டே தான் பேச முடியலை, அடுத்த தடவை முயற்சி பண்றேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


திரும்பி கெளம்ப பொட்டி கட்டிக்கிட்டு இருந்தேன். பாட்டி பக்கத்துல இருந்து பேசிகிட்டு இருந்தாங்க.

'ஏன்டா, அந்த ஆல்பம் எல்லாம் எடுத்துகிட்டு போறியா'

'இல்லை பாட்டி, அது வெயிட் அதிகம் இருக்கும். அதுனால எடுத்துகிட்டு போகலை'

'அப்பறம் அந்த லேப்டாப் வெச்சுகிட்டு என்னடா நோண்டிகிட்டு இருக்கே'

'அந்த போட்டோஸ் எல்லாம் இதுல காப்பி பண்ணி எடுத்துகிட்டு போறேன் பாட்டி'

'அப்போ மட்டும் வெயிட் ஏறாதா ??'

'அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வ் ' லாஜிக்கல் பாயிண்ட்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திரும்பி வரும் போது கொழும்பு வழியா வந்தேன். கொழும்பு விமான நிலையத்துல எழுபது வயது ஜெர்மன் ஒருத்தரோட சில நிகழ்வுகளை பத்தி பேசிட்டு இருந்தேன். முடிஞ்சா தனி பதிவா போடுறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விமானத்துல பக்கத்து இருக்கைல ஒரு பாட்டி. (எனக்கு கொடுப்பனை அவ்வளவே.. ம்ம்... ). எப்போதும் இல்லாதது போல இருக்கைல முதுகு பக்கம் தடிமனா இருந்தா போல இருந்தது. நான் கூட இருக்கைகள் எல்லாம் மாத்தி இருக்காங்கன்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். அதே மாதிரி தான் பக்கத்துல இருந்த பாட்டிக்கும் இருந்தது போல. திட்டிகிட்டே ஒக்காந்து இருந்தாங்க. மூணு மணி நேரம் கழிச்சு அவுங்க எந்திரிச்சு போன அப்போ பாத்தேன் அங்கே ரெண்டு பொத்தான் இருந்தது. அதுல ஒண்ணை அழுத்தி இதை மாத்திக்கலாம்னு இருந்தது. அதை அந்த பாட்டி வந்த உடனே சொன்னேன்.

எல்லாரும் அதுக்கு பதில் என்ன சொல்லுவாங்க மகாஜனங்களே. நல்ல யோசிங்க.

அந்த பாட்டி, உரிமையா ' அடுத்த தடவை முன்னாடியே சொல்லு' அப்படின்னு சொல்லிச்சு. இது எனக்கு தேவையா மகாஜனங்களே. :(

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திரும்ப வந்து சேந்தாச்சு. பொலம்பலையும் ஆரம்பிச்சாச்சு.


அன்புடன்
எஸ். கே.