SK

அது என்ன கெட்ட வார்த்தை ?? நானும் ரொம்ப யோசிச்சு பாத்தேன்.

ஒருத்தங்கள திட்டனும்னா சின்ன வயசுலே நாயே, பேயே, பன்னி அப்படின்னு ஆரம்பிக்கறது, கொஞ்ச வயசு ஆனா அப்பறம் மயிறு, மட்டை ஆகி அப்படியே ஒ.. , பு.. , .. இப்படின்னு பறந்து விரிஞ்ச ஒரு தனி விளக்க புத்தகமே எழுதலாம்.

எனக்கு நினைவு தெரிஞ்சு பன்னிரண்டாவது படிச்ச வரைக்கும், என் காலேஜ்ல மொத வருஷம் வரைக்கும் அதிகமா இது எதுவுமே பேசினது இல்லை. முடிஞ்சா வரைக்கும் சிரிச்சு மழுப்பியோ எதாவது செஞ்சு இருக்கேன். ஆனா ரெண்டாவது வருசத்துக்கு அப்பறம் என்னை நான் காப்பதிக்கனும்னா குரலை உசத்தி கத்துனாதான் உண்டுன்னு ஆச்சு அப்படின்னு முடிவு செஞ்சேன்.  அதோட நிறைய பேரு வாய அடைக்கனும்னா எனக்கு இதை விட்ட வேற வழியும் தெரியலை.

அப்பறம் ஒரு காலத்துல குட் மார்னிங் கூட எதாவது ஒரு கெட்ட வார்த்தை கூட தான் வரும் .. அதுவும் நண்பர்கள் வட்டத்துல பேசும் போது. 

இதே தான் அப்பறம் மூணு வருஷம் தொடர்ந்து நடந்தது. வெளி நாடு வந்த அப்பறமும் இதுவே அப்படியே போச்சு. அதோட சந்தோஷமோ, துக்கமோ, விரக்தியோ. வெறுப்போ, வெற்றியோ, தோல்வியோ, இது நம்மோட கலந்த ஒன்னா போச்சு. அதுவும் சில நேரத்துலே அதோட அர்த்தம் எல்லாம் யோசிச்சோம்னா மனசு ரொம்ப கஷ்ட படும். அதுவும் நாம யாரை திட்டனுமோ அவங்களை திட்டாம, அவிங்க அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, மாமா, மச்சான், எல்லாரையும் இழுத்து தான் திட்டுவோம். எப்போ பேசினாலும் நமக்கு அதை பத்தி யோசிச்சதே கெடையாது .

இப்படி இருந்த நம்ம வாழ்க்கைல ஒரு மாற்றம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி சூழ்நிலை காரணமா ஒரு ஹோட்டல்ல வேலை செய்யறதுக்கு சேந்தேன். அது வந்து ஒரு ஹிந்தி காரங்க ஹோட்டல். நாம தான் தமிழ் தூக்கி வளத்த தமிழ் மகன் ஆச்சே. அதுனால ஹிந்தி பேச தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் புரியும். அதுவும் இது மாதிரி ஹோட்டல்ல சமையகட்டுலே வேலை செய்யறது எனக்கு ரொம்ப புதுசு. பழக்கமும் கெடையாது.  ஆக மொத்தம் தப்பு செஞ்சு தான் எல்லாமே கத்துக்கணும். இந்த ஹோடல்ளோட சொந்தகாரரு எப்படின்னா கெட்ட வார்த்தையின் ஒட்டுமொத்த களஞ்சியம். அதுவும் கூட்ட நேரம் வேலை அதிகமா இருக்கும் போதோ, ஏதாவது தப்பு செஞ்சாலோ வர்ற வார்த்தைய காது கொடுத்து கேக்க முடியாது. அதுவும் குட் மார்னிங், குட் இவினிங் சொல்றா மாதிரி ஆகி போச்சு. அதுவும் நமக்கு பாஷையும் புரியாம, இவரு என்ன திட்டராரா, இல்லை நட்போட கூப்பிடறாரா  ஒண்ணுமே புரியலை. ஆனா சில நேரத்துலே மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும்.

இப்போ உரைச்சது இந்த மர மண்டைக்கு  அதுவும் செருப்பால அடிச்ச போல இருந்திச்சு. இப்போ தான் நம்ம மனச்சாட்சி அண்ணே உள்ளே இருந்து வெளில வந்து கேட்டாரு ஒரு கேள்வி, ' ஏண்டி மாப்ள, நீ பேசினா அது பிரன்ட்லி, இதுவே இன்னொருத்தங்க உன்னை பாத்து சொன்னா பீளிங்க்சான்னு'. கேட்ட கேள்வி சரி தானுங்களே.

சரி என்ன பண்ணலாம் அதான் புத்தாண்டு வருது அப்போலேந்து எந்த விதாமான கெட்ட வார்த்தையும் பேசமா நிறுத்திடலாம். அடேய் நிறுத்தறதுன்னு ஆகி போச்சு அது என்ன புது வருஷம், பழைய வருஷம் .. 'நிறுத்து .. உடனே நிறுத்து '

ரைட் ஆபிசெர்..

மக்களே, எல்லாரும் ஆண்டவன் கிட்டே எனக்கு அந்த பொறுமைய கொடுக்க சொல்லி வேண்டிக்கோங்க சொல்லிபுட்டேன் .

இதே கெட்ட வார்த்தை பத்தி இன்னொரு அனுபவம் இருக்கு.. அதை முடிஞ்சா நாளைக்கு இதே பதிவுல அப்டேட் பண்றேன் இல்லை தனி பதிவ போடுறேன் ..

அன்புடன்
எஸ். கே

SK
வணக்கம் மக்களே,

இதை எழுதலாமா வேற எதாவது எழுதலாமா. இப்படி எழுதின அவுங்க வருத்த படுவாங்கலோ அப்படி இப்படின்னு பயங்கர குழப்பத்துக்கு அப்பறம் சரி இதை எழுதலாம்னு முடிவு.

இனி என்னோட புலம்பல்

போன வாரம் ஒரு நண்பன் கிட்டே பேசிட்டு இருந்தேன். பேச்சு அப்படி இப்படி எப்படி எல்லாமோ போய் ஒரு இடத்துலே 'எனக்கு தனிமைனா ரொம்ப புடிக்கும்னு சொன்னான்'. அப்படியா செல்லம், அப்படி தனிமைனா என்ன அப்பு செய்வேன்னு கேட்டேன்.

காரையோ, வண்டியோ (அட வண்டின்னா மாட்டு வண்டி இல்லீங்க, டூ வீலர்), கைபேசியும் எடுத்திகிட்டு யாரும் இல்லாத இடமா போய் ஒக்காந்து, கைபேசியும் அணைச்சிட்டு இயற்கைய ரசிப்பாராம். இது பேரு தான் தனிமை.

இதே மாதிரி நிறைய ஆசாமிங்க இருக்காங்க, வெளில அம்மா சீரியல் பாத்துகிட்டு இருக்கும் போது தனியா தன்னோட அறைக்குள்ள போய் ஒக்காந்து பல்லு குத்தினா தனிமையாம்.

ஏன்பா இதுவா தனிமை.. அறுபது மணி நேரம் தனிய ஒரு அறைக்குள்ள மட்டும் சாப்பாடு தண்ணி இல்லாம கூபிட்டா ஏன்னு கேக்க ஆள் இல்லாம கைபெசில சார்ஜ் போய் யாரு கிட்டயும் பேசவே முடியாம இருக்கறது பேரு என்னங்க அப்படின்னா.

இது ஒரு விதம். இன்னொரு விதம் இருக்கு. மொழி தெரியாத ஊரு. உன்னை புரிஞ்சுகாத மனுஷங்க. உன்னால புரிஞ்சுக்க முடியாத கலாச்சாரம். பழக்கமே இல்லாத சாப்பாடு. இதுக்கு மேல என்னன்னு கேக்க ஆள் கிடையாது. அப்போ தான் சினிமா வசனம் எல்லாம் நெனப்பு வரும், 'அடிச்சு போட்ட ஆள் இல்லாத அநாதை பய' அப்படின்னு எல்லாம். இது மாதிரி ஒரு சூழல்ல ஒரு கடினமான நேரம், எது செஞ்சாலும் தப்பா போகும். என்ன பேசினாலும் தப்பா புரியப்படும்.

கண்ணாடிய பாத்தா அழுகை வரும்.
இளையராஜா பாட்டு கேட்டாலும் அழுகை வரும்.
அம்மா குரல் கேட்டாலும் அழுகை வரும்.
சமைக்கணும்னு நினைச்சாலும் அழுகை வரும்.
சாப்பாட பாத்தாலும் அழுகை வரும்.
வீட்டுக்கு போன் பண்ணி பேசலாம்னா டெலிபோன் பில் நெனைச்சு அழுகை வரும்.

அழுகை மட்டுமே ஆறுதலாய் இருக்கும்...


இனிமே யாராவது ரூமுக்கு உள்ளே போய் எனக்கு தனிமை புடிக்கும்னு சொல்லுங்க அப்பறம் பேசிக்கறேன்.

போன நவம்பெர்ல தனிமைல இருதப்போ எனக்கு ரொம்ப ஆறுதலாய் இருந்த இரு நண்பர்கள் நினைவாக ...

அன்புடன்
எஸ். கே.


SK
வணக்கம் மக்கா

எனக்கு இந்த கதை கவிதை எல்லாம் எழுத தெரியாது. ஒரு அளவுக்கு ரசிக்க தெரியும். அப்படி ஒரு போரம்ல (forum) படிச்சு என்னால மறக்க முடியாத ஒரு கவிதை. என்னை ரொம்ப பாதிச்ச கவிதைன்னு கூட சொல்லலாம்.

கீழே நண்பரோட முழு கவிதையும் தர்றேன்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் மலர்முகம் கண்டது
மலர்களின் இயல்பு
கற்கும் போது

காதலுற்றது
உன் புன்னகை தரிசித்த போது

ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த கர்வம் உனக்குள்
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம் எனக்குள்


பாவம் நீ...
எப்போது கேட்பான்
என்று
எத்தனை காலம் காத்துக் கிடந்தாயோ

எதையாவது சாதிக்க வேண்டும்
என் வெறியை
எப்படி நீ அறிந்திருப்பாய்

சாதித்து வந்த போது
நீ எவனோ ஒருவனின்
சாதனையாய் விட்டிருந்தாய்

வெளிநாட்டு மென்பொருள் அறிஞனுக்கு
வாழ்க்கைப்பட வேண்டுமென்பது
நம் குல மாதரின் விதி போலும்
நீ கொஞ்சம் பொறுத்திருந்தால்
.NET விடுத்து JAVA விற்கு
மாலை இட்டிருக்கலாம்.

என்னையும் ஒருத்தன் காதல் செய்தான்
உன் கணவனிடம்
பெருமை உரைக்க மட்டுமே நான்

என்றாலும்
எப்போதாவது
பூவுதிரும் பொழுதுகளில்
பிலடெல்பியா பூங்காவனங்களில் நீயும்
பரிதிமாளும் வேளைகளில்
தெம்ஸ் நதிக்கரைத் தனிமைகளில் நானும்
நினைப்பதுண்டு
"What if ....."

கவியரசன் சொன்னதுபோல்
*உன்னைப்போல் பெண்மக்கள்
ஊருலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலர்க்குச் சொல்லாமல்
கணவர்க்குச் சொன்னவர்கள்

என்னைப் போல் ஆண்மக்கள்
ஊருலகில் எத்தனையோ
காதலுற்ற சேதியினைக்
காதலிக்குச் சொல்லாமல்
கனவில் மட்டும் வாழ்ந்தவர்கள்

*நன்றி - கவியரசு வைரமுத்து - கவிதைக் கருவிற்கும் நான்கு வரிகளுக்கும்சமர்ப்பணம் - காதலை சொல்ல மறந்த இதயங்களுக்கு

எழுதியது : தினேஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி
எஸ். கே.
SK
எல்லாருக்கும் வணக்கம்பா,

என்னையும் ஒரு ப்ளாகரா மதிச்சு எழுத கூப்பிட்ட ராப் அக்கா, தாமிரா, கயல்விழி, வருண் எல்லாருக்கும் ரொம்ப நன்றி. ஒரு சின்ன செய்தி. எனக்கு தெரிஞ்சு நான் இது வரைக்கும் அரங்குலே போய் பாத்த படம் அம்பதை விட அதிகமா இருக்க வாய்ப்பு இல்லை. ஆனா வெளிநாடு வந்த அப்பறம் இண்டர்நெட்ல எல்லாம் படமும் பாத்து இருக்கேன். இப்போ அதையும் நிறுத்தி வெச்சு இருக்கேன்.

பதில் எல்லாம் எல்லாரும் எழுதற மாதிரி ரொம்ப இன்டரஸ்டிங்கா எல்லாம் இருக்காது. ஏதோ என்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ எழுத முயற்சி பண்ணி இருக்கேன்.

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

சரியான வயது நினைவில் இல்லை. ஆனா முதல் வகுப்போ ரெண்டாம் வகுப்போ படிக்கும் போதுன்னு தோணுது.

1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

அரங்கத்துலே பாத்த படம் ராஜாதி ராஜா இல்லை என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு. சரியா நினைவு இல்லை.

அதிகம் அரங்கத்துக்கு போய் பழக்கம் இல்லை. அப்போ எங்கே வீட்டுலே தொலைக்காட்சி பொட்டியும் கெடையாது. பக்கத்து வீட்டுலே பாப்பி அக்கான்னு அவுங்க வீட்டுலே டெக் எடுத்து போடுவாங்க. அங்கே போய் பாப்பேன். அங்கே பாத்த படம் எனக்கு நினைவு இருக்கறது 'என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்'. விஜயகாந்த் படம்னு நினைக்குறேன்.

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

அரங்கத்துலே போய் பாத்தா பாப்கார்ன் மற்றும் ஐஸ் கிரீம் கெடைக்கும்னு உணர்ந்தேன்

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

குசேலன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

இப்போ ரொம்ப நாள் கழிச்சு துரைன்னு நம்ம அர்ஜுன் அண்ணே படம் இண்டர்நெட்ல பாத்தேன்.

என்ன உணர்ந்தேனா ஏன்டா பாத்தேன்னு உணர்ந்தேன்.

நடுல ஒரு நாலு அஞ்சு மாசமா இண்டர்நெட்ல படம் பாக்க கூடாதுன்னு இருந்தேன். அதுனால தசாவதாரம், குசேலன் அப்பறம் எந்த படமும் பாக்கல.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

ரமணா ரொம்ப புடிச்சு ஒரு ரெண்டு நாளைக்கு அது பண்ண போறேன், இவனை போய் பாத்து இது பத்தி பேச போறேன், அது பத்தி பேச போறேன்னு எல்லாம் யோசிச்சுகிட்டு இருந்தேன். அப்பறம் சாதரணமா வாய மூடிகிட்டு உன் வேலைய பாருன்னு சொல்லி தலைல ரெண்டு தத்து தட்டி அடுத்த படம் பாக்க ஆரம்பிச்சுட்டேன்.

இப்படி எல்லாம் படம் பாத்திட்டு ரொம்ப பீல் பண்ண கூடாதுங்கறதால பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் போன்ற படம் எல்லாம் பாக்கவே இல்லை. மக்கள் எல்லாம் பாத்திட்டு ரொம்ப அழுவாச்சியா இருக்கு, அருமையா இருக்குன்னு சொன்ன அப்படியா சாமி நீயே வெச்சுக்கோ ரொம்ப சந்தோசம்னு விட்டுட்டு அடுத்த வேலைய பாக்க ஆரம்பிச்சுடுவேன்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

எனக்கு தெரிஞ்சு பாட்சா வெற்றி விழால இருந்து இன்னைக்கு வரைக்கும் ரஜினி விடயம் ரொம்ப கஷ்டமா இருக்கு.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

சமீபத்துலே வந்ததுலே தசாவதாரம் ரொம்ப புடிச்சு இருந்தது. ஆங்கில படம் மாதிரி நிறைய வேகமான கட்சிகள் எல்லாம் எடுத்து இருந்தது ரொம்ப புடிச்சு இருந்தது. ஒரு வேலை நான் அதிகமா ஆங்கில படம் பாக்க மாட்டேன்கரதால எனக்கு அது மாதிரி இருந்தததான்னு தெரியலை.

தொழில் நுட்பம்ல கதை அமைஞ்ச விதம்னு எடுத்துகிட்டா ஆயுத எழுத்து. மூணு கதைய அழகா மணி சார் சொல்லி இருப்பாரு. இது எதாவது ஆங்கில படத்துலே வந்து இருக்கான்னு எனக்கு தெரியலை.

அது மாதிரி 12B எடுத்த விதமும் நல்லா இருக்கும். அதுவும் அந்த ஏழாவது நிமிஷம் பார்த்திபன் பேசறது நல்லா இருக்கும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

வாசிப்பேன். இன்டர்நெட் மற்றும் கிசு கிசு அவ்ளோ தான். இப்போ இவங்க எல்லாம் செய்யற அரசியல். படிச்சு வருத்தம் மட்டும் பட்டுப்பேன்.

7. தமிழ்ச்சினிமா இசை?

சினிமா இசை ரொம்ப சாதரணமா கேட்டுகிட்டு இருந்தேன். அப்பறம் ஒரு தோழி அறிமுக படுத்தி பாடல்கள் ரொம்ப விரும்பி மற்றும் அனுபவிச்சு கேக்க ஆரம்பிச்சேன். அதை எல்லாம் ஒரு தனி ப்ளாகா போடனும்னு ஆசை. 'டேய், இருக்கர ஒரு ப்ளாக மொதல்ல ஒழுங்கா எழுதி பழகு, அப்பறம் மத்ததை பாத்துக்கலாம்னு ' உள்ளே இருந்து நம்ம அண்ணே சொன்னாரு. சரின்னு விட்டுட்டேன்.

8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

என்னோட ஒரு நண்பர்கள் கூட ஒரு ரெண்டு ஹிந்தி படம் போய் இருக்கேன். அப்பறம் இங்கே வெளிநாட்டுக்கு வந்த அப்பறம் சில ஆங்கில படம் பாத்து இருக்கேன்.

8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?

'The Beautiful Mind' படத்துலே இந்த காட்சி ரெண்டு தடவை வரும். படத்தோட ஹீரோ வாத்தியார் கூட பேசிட்டு போய்கிட்டு இருப்பாரு அப்போ ஒரு பேராசியருக்கு எல்லாரும் மரியாதை செலுத்திகிட்டு இருப்பாங்க. ஒரு தடவை வாத்தியார் ஹீரோவுக்கு அதை காட்டுவார். அதே விஷயம் ஹீரோவுக்கு படத்துலே கடைசில நடக்கும். அப்படியே புல் அரிச்சு போச்சு எனக்கு.

இதுவும் எதோ நம்ம ஊர் செண்டிமெண்ட் மாதிரி தான் இருந்தாலும் அந்த காட்சி இன்னும் அப்படியே கண்ணுலையே இருக்கு.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லவே இல்லை. சோ அப்பீட்டு. அட ‘Cho’ இல்லீங்க ‘So’

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எதிர் காலம் நல்லா இருந்து ஹிந்தி சினிமாவை விட நம்ம தமிழ் சினிமா உலகம் முழுக்க பேசபடனும்னு ஆசை.

ஆனா அவுங்களும் என்ன பண்ணுவாங்க யோசிச்சு பாருங்க. மாறுதலா வேணும், மாறுதலா வேணும்னா. எவளோ மாறுதல் தான் பண்ண முடியும். ஒரு வெஜ் சாப்பிடரவங்களை எடுத்துகோங்க, சாம்பார், புலி கொழம்பு, ரசம் வேணும்னா இதுலே மாத்தி காய்கறி போட்டு சமைக்கலாம். இல்லையா உப்புமா, கிச்சடி, பொங்கல்னு எதாவது கொஞ்சம் மாறுதலா பண்ணலாம். கடைசியா சுத்தி சுத்தி அதே சாம்பாருக்கு ஒரு நாள் வந்து தான் ஆகணும். ரொம்ப அசிங்கமாவும், தவறான கருத்துகளையும் சொல்லமா இருந்தாலே போதும்.

ஏற்கனவே தமிழ் சினிமா காதல், கல்லூரி வாழ்க்கை, பெண் இதை பத்தி எல்லாம் எவ்ளோ தவறா எடுக்க முடியுமோ எடுத்துட்டாங்க. கொஞ்சம் மனிதாபிமானத்தோட படம் எடுத்தாலே போதும்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நிம்மதியா இருக்கும். ஆனா அதை நம்பி இருக்கற நிறையா பேரு வேலை வாய்ப்பு இல்லாம போய்டுவாங்கலோன்னு தோணுது. அதோட மெகா சீரியலும், ரியாலிட்டி ஷோவும் இன்னும் பாடா படுத்திடும்னு தோணுது.

இதுக்கு மேல நான் எழுத கூப்பிட யாருமே இல்லை. என்ன எல்லாரும் எழுதிட்டாங்க எனக்கு தெரிஞ்சு. அப்படி எழுதாம இந்த பதிவை படிக்கற ஆத்மா எதாவது இருந்தா நீங்களும் எழுதுங்க ப்ளீஸ்.

எழுதாத ஆத்மா

1. அவியல் செல்வி நம்ம ராப் அக்காவோட அக்கா.

2. சுந்தர் இன்னும் எழுதலை, ஆனா யாரோ முன்னாடியே உங்களை கூப்பிட்டு இருந்தாங்க.

3. ரம்யா


எச்சரிக்கை :

இன்னும் எழுதாமல் இருக்கும் அப்துல்லா அண்ணனை வன்மையாக கண்டிக்கிறேன். :) நாங்க எழுதிட்டோம் அது எப்படி உங்களை விடுவோம் :) :)


குறிப்பு :

ரொம்ப சீக்கரமா எழுதினதுக்கு என்னை மன்னிச்சுகோங்க :)
SK
நண்பர்களே,

தாமதமாக பதிவு எழுத மன்னிக்கவும். '' பற்றி முன்பே எனது பதிவில் சொல்லி இருந்தேன். அவர்களுக்கு மீண்டும் உதவி தேவை அப்படின்னு சொன்னாங்க. இந்த விடயத்தை திரு. மாத்யு அவர்களிடம் கேட்டு எனக்கு மெயில் மூலம் திருபடித்திய அமிர்தவர்ஷிணி அம்மா அவர்களுக்கு நன்றி.

அதோட இல்லாம அவுங்க இந்த தடவை இதுக்கு உதவ முயற்சி செய்யறாங்க. தேர்வு எழுதும் அவர்களுக்கு உதவும் அமிர்தவர்ஷிணி அம்மா மற்றும் அப்துல்லா போன்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.

நீங்க எல்லாம் செய்யும் போது எங்களுக்கும் எதாவது உதவி செய்யனும்னு தோனுது. அந்த நம்பிக்கை விதைத்தமைக்கு நன்றிகள்.

விவரங்கள் கீழே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Loyola College supports the education of 65 visually challenged students. I would kindly invite you to join hands with us to help the students with their 1st Semester exams which are due by November.

Exam Dates: 3rd – Nov to 18th Nov, 08. (Except on Sunday, 9th and 16th Nov.)
Exam Time:1st Secession 9.00 to 12.30pm
2nd Secession 1.00 to 4.30pm


Exam Papers:

TL & FC – TAMIL PAPER
EL, SO, HT & EC – ENGLISH PAPER
CO & BU – COMMERCE PAPER
LH – Hindi Paper

Exam Venue: Loyola College,MF – 01, Main Building 1st Floor,Nungambakkam, Chennai – 34 For any further clarifications, please contactS. Mathew, Coordinator9444223141Email: smathew27@gmail.com

விரிவான அட்டவணை இந்த சுட்டியில் இருந்து எடுத்துகொள்ளவும்.

http://www.mediafire.com/?znwgenm0hiz
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி.

அன்புடன்
எஸ். கே.
Labels: 7 comments | edit post
SK
உதவி செய்யரதுலையே ரொம்ப பொன்னானது எது. காசு பணம் கொடுக்கறதா?? அது கொடுத்ததை தான் ஒரு மாசம் அதிகமா வேலை பாத சம்பாதிசுடலாமே.

சரி அப்பறம் சோறு போடறதா ?? ஒரு வேலை சோரோ ஒரு மாச சோரோ போட்டு என்ன பெரிய மாற்றம் வர போகுது..

சரி அப்பறம் கடவுளுக்கு கொடுப்பாங்களே முடி, அதுவா ?? ஏங்க, வெட்டுன முடி வளராது சொன்னா எவனாவது அவளோ எளிதா மொட்டை அடிச்சுபாங்களா ??

சரி அப்பறம் என்ன தாண்டா சொல்ல வரேன்னு கேக்குறீங்களா. நேரம். நாம ஒருதங்களுகாக செலவிடுகிற நேரம். என்ன இப்போ விட்ட அப்பறம் புடிக்க முடியாது. போனது போனது தான். உதாரணத்துக்கு கல்யாணம் செஞ்ச அப்பறம் பொண்ணுங்க தான் கணவன் கிட்டே இருந்து எதிர் பாக்கறது, அவ கூட கொஞ்சம் நேரம் செலவிடரானா அப்படின்னு தான்.

சரி கதை எங்கயோ போகுது ?? அது எல்லாம் இருக்கட்டும், இப்போ இதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு தானே கேக்குறீங்க. மேல படிங்க. அட மேலன்னு உடனே ஆரம்பத்துக்கு போய்டாதீங்க, கீழ எழுதி இருக்கற விவரத்தை படிங்கன்னு சொன்னேன்.

நேத்து எனக்கு ஒரு மெயில் வந்தது. அதுலே இருந்த விஷயத்தை நான் கீழ கொடுத்துடறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Dear friends,
Some of the visually challenged students at Loyala College, Chennai require SCRIBES, who can write the Exams for them & hence helping them pass thru the academic successfully. Basically the role of a SCRIBE is to just read the question paper for the student and write the answers dictated by the students in the Answer sheet. Please check the attached excel for exam schedule.If you and your friends could spare around 3 hours on any of the days mentioned in the excel, these students would be really thankful.Please do consider this as a direct request from the students

Please contact Mr.Mathew 9444223141 for further communication.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சரி ஏதோ நம்பிக்கையா இருக்கேன்னு சொல்லி நம்ம அப்துல்லா அண்ணனுக்கு அதை மாதி அனுப்பினேன்.

ஒரு மணி நேரத்துலே பதில்

'மேத்யூவிடம் பேசி விட்டேன். நாளை நானே பரிச்சை எழுதப் போகிறேன்' அப்படின்னு??


வாய் அடைச்சு போய் நின்னுட்டேன். கலக்கிடீங்க அப்துல்லா அண்ணே.

சொல்ல வார்த்தையே இல்லை எனக்கு. பதிவு எழுத வேணாம்னு இருந்தே என்னை எழுத வெச்சுடீங்க.

என்னோட மனமார்ந்த நன்றி, பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
SK
அன்பு வலை உலக நண்பர்களே,

மன்னிக்கவும். ஒரு தனிப்பட்ட காரணத்தினாலும், கோவத்தினாலும் நான் எழுதிய பழைய பதிவுகளை அழித்து விட்டேன். மீண்டும் எழுதும் முன்பு நன்றாக யோசித்து விட்டே எழுதலாம் என்று உள்ளேன்.

அன்பு,
எஸ். கே.